மருதகாசி பாடல்கள் - பக்கம் - 27
ஆடுறமாட்டை ஆடிக்கறக்கனும்! பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்! அறிவும் திறமையும் வேணும்!-எதுக்கும் அறிவும் திறமையும் வேணும்! (ஆ) காடுமேடாகத் தரிசாகக் கிடந்த மண்ணு! நெற் களஞ்சியமானது எப்படியென்று எண்ணு!-அது பாடுபடும் விவசாயிகள் திறமையினாலே! பலனுண்டு நாமிதை உணர்ந்து நடப்பதனாலே! மண்ணோடு மண்ணாக மங்கிக்கிடக்கிற பொன்னு! மங்கையர் அணியும் நகைகளாவதை எண்ணு!-அது மின்னுவதெல்லாம் தொழிலாளி திறமையினாலே!-புது மெருகு கிடைப்பது கையாளும் முறைகளினாலே! (ஆ) மண்ணையும் பொன்னையும் போன்றவளேதான் பெண்ணும்!-அவள் மனசையறிந்தாலே வசப்படுத்தலாம் ஆணும்!-இதை எண்ணிப்பாராமல் பேசுவதால் பலன் இல்லை! -பெண்ணிடம் இருக்கும் குறைகளை மாற்றுவது ஆண்களின் வேலை! |
அறிவாளி-1963
இசை : S.V. வெங்கட்ராமன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 27 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -