மருதகாசி பாடல்கள் - பக்கம் - 23
கொத்துமல்லி பூபூக்க கொடிகொடியாய் காய்காய்க்க! கொத்துக் கொத்தாய் நெல்விளையும் சீமையிது! நம்ம குறைதீர்க்கும் பொன்விளையும் பூமியிது! வாழைமடல் விரிய மண்ணிலே குலை சாய! வந்தாரை வாழவைக்கும் சீமையிது!-நம்ம மனசுபோல் பொன் விளையும் பூமியிது! வாய்க்கால் கரைபுரள வயல்களிலே மீன்புரள! வற்றாத வளம் கொழிக்கும் சீமையிது!-எதை நட்டாலும் பொன் விளையும் பூமியிது! கண்ணிலே கனிவிருக்க கருத்தினிலே துணிவிருக்க! எண்ணத்தால் உயர்ந்தவங்க சீமையிது! உலகில் எந்நாளும் பொன்விளையும் பூமியிது! அநியாயம் செய்பவரை அஞ்சாமல் எதிர்த்து நின்று தன்மானம் காத்துவரும் சீமையிது! -பெற்ற தாயாகும் பொன்விளையும் பூமியிது! |
பொன்னு விளையும் பூமி-1959
இசை : ரெட்டி
பாடியவர் : T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 23 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பூமியிது, சீமையிது, விளையும், பொன்விளையும்