மருதகாசி பாடல்கள் - பக்கம் - 108
பெண்: கண்ணாலே நான் கண்ட கணமே!-உயிர்க் காதல் கொண்ட தென் மனமே! இது முன்னாளில் உண்டான உறவோ-இதன் முடிவும் எங்கோ? எதுவோ? ஆண்: எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து என்னோடு வாவென்று சொல்லுதே!-இது முன்னாளில் உண்டான உறவோ?-இதன் முடிவும் எங்கோ எதுவோ? பெண்: யாரென்று கேட்காததேனோ? யாரானால் என்னென்றுதானோ? நேராக நின்று யாரென்று கேட்டால் கூரான வேல் பாயும் என்றோ! ஆண்: யாரான போதென்ன கண்ணே! நானுண்ணும் ஆனந்தத் தேனே! நீ வேறு அல்ல! நான் வேறு அல்ல! வேறென்ன நாணின்னும் சொல்ல!-இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே! பெண்: என் இதயமெல்லாம் உமக்கே! |
பார்த்திபன் கனவு-1960
இசை: வேதா
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 106 | 107 | 108 | 109 | 110 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 108 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்