மருதகாசி பாடல்கள் - பக்கம் - 103
தேன்கூடு! நல்ல தேன்கூடு! திருமகள் வாழ்ந்திடும் என்வீடு! காணும்போது இனிக்கும்!-மதுரைக் கதம்பம் போல மணக்கும்! கண்ணைக் கவ்வி இழுக்கும்!-தன்னை உண்ணச் சொல்லி அழைக்கும்!(தேன்) வாடும் மனதை மூடும் கவலை மதுவில் கரைந்தே பறந்தோட வாழ்வில் நிம்மதி தேடும் செல்வச் சீமான் மயங்கி உறவாட!(தேன்) கலையால் வீசும் வலையால்-காதல் விலையே பேசும் கிளி நான்! கலையா போதை நிலையால் ஆளைக் கவரும் காந்தச் சிலைதான்! போனது எல்லாம் போகட்டும்!-மனம் புதுப்புது கனவுகள் காணட்டும்! ஆனது எல்லாம் ஆகட்டும்! அதில் அதிசயக் காட்சிகள் தோணட்டும்! |
ஆட்டுக்கார அலமேலு-1976
இசை : சங்கர், கணேஷ் -
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 101 | 102 | 103 | 104 | 105 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 103 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -