மருத்துவம் :: வள்ளுவரும் மருத்துவமும்

1. திருவள்ளுவர் மருத்துவத்தை எவ்வாறு சிறப்பிக்கின்றார்?
மருந்து என்னும் அதிகாரத்தில் 10 குறள்களில் மருத்துவத்தின் அடிப்படைகளைக் கூறுகிறார்.
2. மருத்துவ நூலோர் கூறும் மூன்று யாவை?
வாதம், பித்தம், சிலேத்துமம்.
3. நோய் எப்பொழுது உண்டாகிறது?
இம் மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
4. உடம்பிற்கு மருந்து எப்பொழுது தேவை இல்லை?
உணவு நன்கு செரித்தபின், அளவோடு உண்டால் உடம்பிற்கு மருந்து தேவை இல்லை. அதாவது காலை 8 மணிக்குச் சிற்றுண்டி அருந்தினால் பகல் 12 மணிக்குப் பசி எடுக்க வேண்டும். பசி எடுத்தால்தான் காலை உண்ட சிற்றுண்டி செரித்துள்ளது என்பது பொருள்.
5. நெடுங்காலம் வாழ்வதற்குரிய வழி யாது?
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவே அறிந்து உண்ண வேண்டும். இதுவே நெடுங்காலம் வாழ்வதற்குரிய வழியாகும்.
6. எப்பொழுது எவ்வாறு உண்ண வேண்டும்?
முன் உண்ட உணவு செரித்தலை அறிந்து, மாறு பாடில்லாத உணவுகளை நன்றாகப் பசித்தபின் உண்ண வேண்டும்.
7. உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறாக இருப்பது எது?
நோய்.
8. இதை எப்படி போக்குவது?
மாறுபாடு இல்லாத உணவை செரிக்கக்கூடிய உணவு, அளவு மீறாமல் (மீதுண் விரும்பேல்) மறுத்து உண்ண வேண்டும்.
9. குறைத்து உண்பவன், அதிகம் உண்பவன் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைத்து நிற்கும். அதுபோல மிகப் பெரிதும் உண்பவனிடம் நோய் நிலைத்து நிற்கும்.
10. நோய்கள் எப்பொழுது அளவில்லாமல் ஏற்படும்?
பசித்தியின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால், நோய்கள் அதிகம் உண்டாகும்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வள்ளுவரும் மருத்துவமும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வேண்டும், உண்ண, உணவு, நோய், எப்பொழுது, அறிந்து, உண்ட, மருந்து