எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 7
2 மனிதா, இஸ்ராயேல் நாட்டைக்குறித்து ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ முடிவு! நாட்டின் நாற்றிசையிலும் முடிவு வருகிறது!
3 இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது. நம் கோபத்தை உன் மீது அனுப்புவோம்@ உன் நடத்தைக்கு ஒத்தபடி உன்னை தீர்ப்பிடுவோம்@ உன் அக்கிரமங்களையெல்லாம் உன் மீது சுமத்துவோம்@
4 நமது கண் உனக்கு இரக்கம் காட்டாது@ நாம் உனக்குத் தயைகூர மாட்டோம். ஆனால் உன் நடத்தைக்கேற்ற தண்டனையை உன் மீது வரச்செய்வோம்@ உன்னுடைய அக்கிரமங்கள் உன் நடுவிலேயே இருக்கும்@ அப்போது நாமே உன் ஆண்டவர் என்பதை அறிவாய்.
5 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: தீங்கு வருகிறது! இதோ, தீங்கு வருகிறது!
6 முடிவு வருகிறது, வருகிறது முடிவு! உனக்கு எதிராக எழுந்து வருகிறது, இதோ வந்து விட்டது!
7 இஸ்ராயேல் நாட்டில் வாழும் உன் மீது வேதனை வருகிறது@ பழிவாங்கும் நாள் வந்துவிட்டது@ மலைகளின் மகிழ்ச்சிக்குரிய நாள் கடந்து போயிற்று.
8 விரைவில் இப்பொழுதே நம் கோபத்தை உன் மேல் சுமத்துவோம்@ நமது சினத்தை உன் மீது தீர்த்துக் கொள்வோம்@ உன் நடத்தைக்குத் தக்கவாறு உன்னைத் தீர்ப்பிடுவோம்@ உன் அக்கிரமங்களின் பலனை உன் மீது வரச் செய்வோம்.
9 நமது கண் உனக்கு இரக்கம் காட்டாது@ நாம் உன்மேல் தயைகூர மாட்டோம்@ உன் நடத்தையின் பலனை உன் மீது சுமத்துவோம்@ உன் அக்கிரமங்கள் உன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும். அப்போது ஆண்டவராகிய நாமே உன்னைத் தண்டிக்கிறவர் என்பதை அறிவாய்.
10 இதோ, அந்த நாள்! இதோ, வந்துவிட்டது! உன் வேதனை தொடங்கிவிட்டது@ உன்னை அடிக்கும் தடி பூத்து விட்டது. உன் அகந்தையும் வளர்ந்திருக்கிறது.
11 அக்கிரமம் கொடுங்கோலாக மலர்ந்துள்ளது@ அவர்களிலும், அவர்களின் இனத்திலும், அவர்களுடைய மகிமையிலும் ஒன்றும் விடப்படாது@ யாவும் அழிந்துபோம்@
12 காலம் வருகிறது@ அந்த நாள் அருகில் உள்ளது@ வாங்குகிறவன் மகிழாமலும், விற்கிறவன் வருந்தாமலும் இருப்பானாக@ ஏனெனில் எல்லாரும் கோபத்துக்கு ஆளானார்கள்@
13 விற்கிறவன் விற்ற உடைமையைத் திரும்பி அடையமாட்டான்@ ஏனெனில் இப்போது வாழ்கிறவர்களின் காலத்திலேயே அது நடக்கும்@ எல்லாரையும் பற்றிச் சொல்லப்பட்ட இந்த இறைவாக்கு வீணாகாது@ எந்த மனிதனும் தன்னுடைய தீய வாழ்வில் அமைதி காணமுடியாது.
14 எக்காளம் ஊதுவர்@ எல்லாரும் தயாராய் இருப்பர்@ ஆனால் சண்டைக்குப் போகிறவன் எவனுமில்லை. ஏனெனில் மக்கள் அனைவர் மேலும் நாம் கோபமாய் இருக்கிறோம்.
15 இஸ்ராயேலரின் பாவங்கள்: "வெளியில் வாளும், உள்ளே கொள்ளை நோயும் பஞ்சமும் உண்டாகும்@ வயல் வெளியிலுள்ளவன் வாளுக்கு இரையாவான்@ பட்டணத்தில் இருப்பவனோ பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான்.
16 தப்பி ஒடுகிறவர்கள் பிழைப்பார்கள்@ ஆயினும் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் அக்கிரமத்துக்காக மனம் வருந்தி, கணவாய்களிலுள்ள மாடப்புறாக்களைப் போல் மலைகளின் மேல் நிற்பார்கள்.
17 அப்போது கைகள் எல்லாம் பலனற்றுப்போகும்@ முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப் போலத் தத்தளிக்கும்.
18 அஞ்சி நடுங்கி அனைவரும் மயிராடைகளை உடுத்திக் கொள்வார்கள்@ எல்லாரும் வெட்கி நாணுவர்@ தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்வார்கள்.
19 அவர்களுடைய வெள்ளி வெளியே எறியப்படும்@ தங்கம் அவர்களுக்கு வெறுப்புள்ளதாகும்@ ஆண்டவருடைய கோபத்தின் நாளில் அவர்களை விடுவிக்க அவர்களிடமிருக்கும் வெள்ளியாலும் தங்கத்தாலும் இயலாது@ அவர்கள் தங்கள் உள்ளத்தைத் திருப்தியாக்குவதுமில்லை@ தங்கள் வயிற்றை நிரப்புவதுமில்லை. ஏனெனில் அவர்களின் அக்கிரமத்தினால் அவர்களது செல்வமே அவர்களுக்கு இடறலாய் அமைந்தது.
20 தங்கள் அணிகலன்களைப் பார்த்து அவர்கள் அகந்தை கொண்டார்கள்@ அவற்றைக் கொண்டு தங்கள் அக்கிரமத்தின் படிமங்களையும் சிலைகளின் உருவங்களையும் செய்தார்கள்@ ஆகையால் பொன்னையும் வெள்ளியையும் அவர்களுக்கு வெறுப்புள்ளதாக்குவோம்.
21 அதை அந்நியர் கொள்ளையடிக்கச் செய்வோம்@ அக்கிரமிகளான உலகத்தார் சூறையாடக் கொடுப்போம்@ அவர்கள் அதைத் தாழ்வான காரியங்களுக்குப் பயன்படுத்துவார்கள்.
22 அவர்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக்கொள்வோம்@ அவர்கள் நம்முடைய கோயிலின் அந்தரங்கமான இடத்தை அசுத்தப் படுத்துவார்கள்@ கள்ளர்களும் அதனுள் நுழைந்து அதனைப் பங்கப் படுத்துவார்கள்.
23 நீ ஒரு சங்கிலியைச் செய்துகொள்: நாடு முழுவதும் இரத்தப்பழியால் நிறைந்துள்ளது@ நகரெங்கும் அக்கிரமம் நிரம்பியுள்ளது.
24 ஆகையால் புறவினத்தாரில் பொல்லாதவர்களைக் கூட்டி வருவோம்@ அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்@ வலிமையுள்ளவர்களின் அகங்காரம் அடங்கும்@ இவர்களின் பரிசுத்த இடங்களை அவர்கள் உரிமையாக்கிக் கொள்வார்.
25 முற்றுகையின் நெருக்கடி மிகுதியாகும் போது, நம் மக்கள் சமாதானத்தைத் தேடுவார்கள்@ ஆனால் அதைக் கண்டடைய மாட்டார்கள்.
26 அழிவுக்கு மேல் அழிவு உண்டாகும்@ துயரச் செய்தியைத் தெடர்ந்து துயரச் செய்தி கிடைக்கும்@ இறைவாக்கினரின் காட்சியை நாடுவார்கள்@ ஆனால் குருக்களிடமிருந்து வேதமும், மூப்பர்களிடமிருந்து நல்லாலோசனையும் ஒழிந்து போயின.
27 அரசன் வருந்தி அழுவான்@ இளவரசன் திகைத்து நிற்பான்@ குடிமக்கள் தைரியமற்றுப் போவார்கள்@ நாம் அவரவர் நடத்தைக்குத் தக்கவாறு நீதியாய்த் தீர்ப்பிட்டு அதற்கேற்பத் தண்டிப்போம்@ அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 47 | 48 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு, மீது, வருகிறது, தங்கள், ஏற்பாடு, முடிவு, ஏனெனில், அப்போது, உனக்கு, நாம், நாள், பழைய, ஆகமம், எல்லாரும், சுமத்துவோம்@, மேல், நாமே, நமது, ஆண்டவராகிய, அவர்களுக்கு, எசேக்கியேல், என்பதை, பலனை, நடத்தைக்குத், தக்கவாறு, உன்னைத், அந்த, அக்கிரமம், மக்கள், வருந்தி, எல்லாம், ஆகையால், துயரச், உண்டாகும்@, கொள்ளை, அவர்களுடைய, விற்கிறவன், ", அவர்களின், ஆண்டவர், கூறுகிறார், இப்பொழுதே, வந்துவிட்டது, கோபத்தை, இறைவன், இஸ்ராயேல், திருவிவிலியம், ஆன்மிகம், ஆண்டவருடைய, உன்னை, தீர்ப்பிடுவோம்@, தீங்கு, விட்டது, வேதனை, வருகிறது@, அறிவாய், அக்கிரமங்கள், இரக்கம், காட்டாது@, தயைகூர, மலைகளின்