சித்த மருத்துவம் - தொழுநோய் குணமாக...
தொழுநோய் குணமாக:
கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழு நோய் குணமாகும்.
சதை போடுவது குறைக்க:
வாழைத்தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும், உடல் அழகு பெறும்.
தூக்கம் வர:
வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும் தூக்கம் வரும்.
கண்கள் குளிர்ச்சி:
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காய வைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்கி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.
வாந்தியை நிறுத்த:
துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.
பித்த வாந்தியை நிறுத்த:
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
வயிற்று கடுப்பு நீங்க:
அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
மந்தம் அஜிரணம் குணமாக:
கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்து கொள்ளவும். சோற்றுடன் 1 ஸ்பூன் பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும்.
வாய்நாற்றம் போக:
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றை குடி நீரில் ஊற வைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும் இதனால் வாய் நாற்றம் தீரும்.
சர்க்கரை வியாதி நீங்க:
கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொழுநோய் குணமாக... - Sidda Medicines - சித்த மருத்துவம் - Medicines - மருத்துவம் - சாறு, கலந்து, வைத்து, சாப்பிட்டு, குணமாகும், கடுக்காய்