புவியியல் :: அனைத்துலகத் திட்டங்கள்
31. இதில் கலந்து கொண்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் யாவை?
1. பம்பாய் பாபா அணு ஆராய்ச்சி மையம்
2. பம்பாய் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்
3. அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடம்.
4. ஹைதாராபாத் தொலைவிட அறிநிலையம்
32. இது எவ்வாறு நடைபெற்றது?
1. சோவியத்துக் கப்பல்கள் கடல் உற்றுநோக்கல்கள், வானிலை உற்றுநோக்கல்கள் முதலியவற்றை நடத்தின.
2. தற்கால அறிவியல் கருவிகள் நிறைந்த வான ஊர்தியினை அமெரிக்கா வழங்கிற்று.
3. இத்திட்டத்தில் நான்கு இந்தியக் கப்பல்களும் பங்கொண்டன.
4. அடுக்கு வெளியிலுள்ள காற்றுகள், நிலவும் வெப்ப நிலை ஆகியவற்றின் அளவீடுகள் தும்பா, ஸ்ரீஹரி கோட்டா, பாலசோர், ஆகிய நிலையங்களிலுள்ள ஏவுகணைகள் எடுத்தன.
5. கோஸ் – 10 என்பது நிலையான அமெரிக்க நில நிலா. இதுவும் இந்தியப் பெருங் கடலை ஆராய்ந்தது கண்ணுக்குத் தெரியும் பகுதியில் தோராயமாக 3.5 கி.மீ. பகுப்பும் அகச்சிவப்புப் பகுதியில் 7 கி.மீ. பகுப்புமுள்ள மேகப் படங்களை கோள் அனுப்பியது. இப்படங்கள் மீடியோஸ்டாட்-1 என்னும் நிலாவினால் ஒரு நாளைக்கு 4 தடவைகள். பம்பாய்க்கு அஞ்சல் செய்யப்பட்டன. இந்நிலா ஐரோப்பிய வானவெளி நிலையத்தின் நிலைத்த நில நிலாவாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அனைத்துலகத் திட்டங்கள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆராய்ச்சி