தாவரவியல் :: வகைப்பாட்டியல்
31. விதைத் தாவரங்கள் என்பவை யாவை?
உறையிலோ உறையில்லாமலோ விதைகளை வெளிப்படுத்தும் தாவரங்கள். முன்னவை விதையுறைத் தாவரங்கள் - தென்னை. பின்னவை விதையுறையிலாத் தாவரங்கள் - சளம்பனை.
32. உறையில்விதையில் தாவரங்கள் என்றால் என்ன?
பூக்குந் தாவரங்கள். விதைகள் உறையில் இல்லாதவை. எ-டு. ஈச்சை போன்ற சளம்பனை.
33. புவித்தாவரம் என்றால் என்ன?
தரைக்குக் கீழுள்ள அரும்புகள் மூலம் மேல் வளரும் தாவரம். இவ்வரும்புகள் தண்டுக்கிழங்கு, குமிழம், குமிழ்க்கிழங்கு, வெங்காயம்.
34. தாவரப் பருவக்காலத்தின்படி அதை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
1. ஒருபருவப்பயிர்கள் - நெல்.
2. இருபருவப் பயிர்கள் - முள்ளங்கி
3. பலபருவப் பயிர்கள் - கத்தாழை.
4. பல்லாண்டுத் தாவரங்கள் - தாளிப்பனை.
35. ஒரு பருவத்தாவரம் என்றால் என்ன?
தன் வாழ்க்கைச் சுற்றை ஒராண்டில் நிறைவு செய்யும் தாவரம் - சூரியகாந்தி.
36. இருபருவப் பயிர்கள் என்றால் என்ன?
தம் வாழ்க்கைச்சுற்று இரண்டு ஆண்டுகளில் நிறைவுபெறும் தாவரங்கள். முதலாண்டு பூத்தலும் இரண்டாமாண்டு காய்த்தலும் நடைபெறும். எ-டு. வெங்காயம், முள்ளங்கி.
37. பல பருவப்பயிர்கள் என்றால் என்ன?
பல ஆண்டுகள் வாழும் தாவரங்கள், மா, பலா.
38. பல்லாண்டுத் தாவரங்கள் என்பவை யாவை?
பல ஆண்டுகள் வாழ்பவை. எ-டு. ஆலமரம்.
39. பயிர்க்கொல்லி என்றால் என்ன?
தாவர வளர்ச்சியைத் தடைப்படுத்தும் அல்லது அழிக்கும் வேதிப்பொருள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வகைப்பாட்டியல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - தாவரங்கள், என்ன, என்றால், பயிர்கள்