பாகவத புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
வேதவியாசருக்குச் சுகதேவர் என்ற ஒரு மகன் இருந்தான். கற்க வேண்டிய அனைத்தையும் கற்று மாபெரும் அறிவாளி யாகிவிட்ட அவர், அதிகம் பேசாத காரணத்தால் மற்றவர்கள் அவரின் அறிவின் ஆழத்தை அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. பலர் அவரைக் கல்வி ஞானம் இல்லாதவர் என்றும், ஒர் அசடு என்றுமே கருதினர்.
இந்நிலையில் வேதவியாசர் வேதங்களை நான்காகப் பிரித்துப் பைலா என்பவருக்கு ரிக்வேதத்தையும், வைசம்பா யனருக்கு யஜுர் வேதத்தையும், ஜைமினிக்குச் சாம வேதத் தையும், சுமந்தாவிற்கு அதர்வண வேதத்தையும் கற்பித்தார். புராணங்கள் ஐந்தாவது வேதம் என்று கருதப்படுவதால், அவற்றை மற்றொரு சீடராகிய லோமஹர்ஷனருக்குக் கற்பித்தார். லோமஹர்ஷனரின் மகனாகிய சுதா என்பவர் மற்றைய முனிவர்களுக்கு பாகவத புராணத்தைச் சொன்னார். நான்கு வேதங்களையும் தொகுக்கும் பணி, மகாபாரதத்தை எழுதும் பணி ஆகிய மிகப் பெரிய சாதனை களைப் படைத்த வேதவியாசர் தாம் இன்னும் ஏதோ செய்ய வேண்டும் என்று உந்துதல் ஏற்பட, ஒருநாள் சரஸ்வதி நதியில் நீராடிவிட்டுத் தம் பர்ணசாலையில் அமர்ந்திருந்தார். இவ்வளவு செய்தும் அவர் மனத்தில் ஏதோ ஒரு குறை இருந்தது. அது என்ன குறை என்று அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த நிலையில் நாரதர் உள்ளே நுழைந்தார். வேதவியாசரைப் பார்த்து, "மாபெரும் சாதனைகளைப் படைத்த தாங்கள் ஏன் அமைதியில்லாமல் இருக்கிறீர்கள்” என்று கேட்டார். வேதவியாசர், “காரணம் தெரியாமல்தான் கவலைப்படுகிறேன். அனைத்தையும் அறிந்த தாங்களே அதை விளக்கிச் சொல்லலாமே” என்று கூறினார். அடுத்துப் பேச ஆரம்பித்த நாரதர், வேதவியாசரே! இதுவரை தர்மத்தைப் பற்றி அளவுக்கு மிஞ்சிக் கூறிவிட்டீர்கள். அது தருமத்தின் இலக்கணத்தையும், அதன் இயல்பையும் சொல்கின்றன. ஆனால் மக்கள் மனத்தில் இவை சென்று தங்குவது கடினம். தர்மத்தின் இலக்கணங்களை எழுதுவதைக் காட்டிலும், கிருஷ்ணனுடைய லீலைகளைச் சொல்லி இருந்தால் அது மக்கள் மனத்தைச் சென்று பற்றும். அந்தச் சூழ்நிலை ஏற்படும்போது தருமத்தைப் பற்றிய கருத்துக்களும் மக்கள் மனத்தில் புகுந்து தங்கும். ஆகவே கிருஷ்ணனைப் பற்றிச் சொல்வதுதான் சிறந்த வழியாகும் என்று கூறிப் போனார்.
நாரதர் கூறியவை வியாசரின் மனத்திற்கு அமைதியும், தூண்டுதலும் தந்த காரணத்தால் பாகவத புராணத்தைப் பாடி அதைத் தம் மகனாகிய சுகதேவனுக்குக் கற்பித்தார்.
அசுவத்தாமன் பெற்ற தண்டனை
குருக்ஷேத்திரப் போரில் கெளரவர் படையிலும், பாண்டவர் படையிலும் பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர். இறுதியாக பீமனுக்கும், துரியோதனனுக்கும் தனிப் போர் நடந்தது. பீமன், துரியோதனன் தொடையில் கதையால் தாக்கி அவன் காலை ஒடித்து விட்டான். ஒடிந்த காலுடன் துரியோதனன் யுத்தகளத்தில் படுத்திருந்தான். துரோணர் மகனாகிய அசுவத்தாமன் துரியோதனன் பக்கம் நின்று சண்டை செய்தவன். இப்போது துரியோதனன் உயிர் போகுமுன் அவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்க நினைத்தான். எனவே நட்ட நடுநிசியில் பாண்டவர்கள் பாசறைக்குள் ரகசியமாக நுழைந்து இளம் பஞ்ச பாண்டவர்கள் ஐவருடைய கழுத்தையும் வெட்டி அவர் தலைகளைக் கொண்டு வந்து துரியோதனிடம் காட்டினான். திரெளபதியின் ஐந்து பிள்ளைகளும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதால் ஒரே கூப்பாடு போட்ட அவள், உடனே பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று அருச்சுனனை நாடினாள். அருச்சுனன் அசுவத்தாமனைத் தேடிப்பிடித்து 'ஒருவருக்கொருவர் தனித்துப் போரிடலாம் என்று அறைகூவி அழைத்தான். யுத்தம் தொடங்கியது. அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தினான். அதனால் தனக்கு அழிவு வராமல் இருக்க அருச்சுனனும் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தினான். இரண்டு அஸ்திரங்களும் தங்கள் எதிரியைத் தாக்க முடியாமையால் பூலோகத்தை அழித்துவிடும் சூழ்நிலை உருவாகியது. முனிவர்கள் பலர் வந்து இவ்விருவரையும் பார்த்து உலகம் அழிவதற்கு நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது. தயவு செய்து உங்கள் அஸ்திரங்களைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளுங்கள்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 4 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, துரியோதனன், மக்கள், அசுவத்தாமன், நாரதர், மனத்தில், வேதவியாசர், கற்பித்தார், மகனாகிய, அவர்