லேவியராகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 3
2 அவன் தன் பலிமிருகத்தின் தலைமீது கையை வைத்தபின் சாட்சியக் கூடாரத்துக்கு முன்பாக அதனை வெட்டக் கடவான். பின்பு ஆரோனின் புதல்வர்களாகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் வார்க்கக்கடவார்கள்.
3 சமாதானப் பலியிலே குடல்களைச் சுற்றியிருக்கிற கொழுப்பையும், குடல்களின் உள்ளிருக்கிற கொழுப்பு முழுவதையும் ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார்கள்.
4 இரண்டு சிறு நீரகங்களையும் விலாப்புறத்திலிருக்கிற கொழுப்பையும், சிறு நீரகங்களையும், கல்லீரலையும் சேர்ந்த சவ்வையும் ( எடுத்து விடுவார்கள் ).
5 அவைகளைப் பீடத்தின் மேலுள்ள விறகுக் கட்டைகளில் நெருப்புப் பற்ற வைத்து எரித்து ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள காணிக்கையாகச் செலுத்தக் கடவார்கள்.
6 அவன் ஆட்டைச் சமாதானப் பலியாகச் செலுத்த வரும் போதும் அது, ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, மறுவற்றதாய் இருக்க வேண்டும்.
7 அவன் ஆட்டுக்குட்டியை ஆண்டவர் முன்னிலையில் ஒப்புக் கொடுத்தால்,
8 அவன் தன் பலிப்பொருளின் தலைமீது கையை வைத்து, அதைச் சாட்சியக் கூடாரத்து மண்டபத்தில் வெட்டிக் கொல்லக் கடவான். பிறகு ஆரோனின் புதல்வர்கள் பீடத்தின் மேல் சுற்றிலும் அதன் இரத்தத்தை வார்த்து,
9 சமாதானப் பலியிலே கொழுப்பையும் முழுவாலையும் ஆண்டவருக்குப் பலியிட்டுக் காணிக்கையாய் ஒப்புக் கொடுப்பார்கள்.
10 அன்றியும், குரு, சிறு நீரகங்களையும், வயிறு முதலிய எல்லா உயிருறுப்புக்களையும் மூடியுள்ள கொழுப்பையும், விலாவை மூடியுள்ள கொழுப்பையும், இரு சிறு நீரகங்களையும் கல்லீரலையும் சேர்ந்த சவ்வையும் (எடுத்து)
11 அவைகளைப் பீடத்தின் மேலுள்ள நெருப்பிலே போட்டு, நெருப்புக்கும், ஆண்டவருக்கு இடும் காணிக்கைக்கும் உணவாகச் சுட்டெரிப்பார்.
12 அவன் வெள்ளாட்டை ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தாலோ,
13 அவன் பலிமிருகத்துத் தலையின்மீது தன் கையை வைத்து அதைச் சாட்சியக் கூடாரவாயிலில் கொல்லக்கடவான். ஆரோனின் புதல்வர் பீடத்தின் மேல் சுற்றிலும் அதன் இரத்தத்தை வார்த்து,
14 அதிலே ஆண்டவருடைய நெருப்புக்கு இரையாக வயிறு முதலிய உறுப்புக்களையும் மூடுகிற கொழுப்பையும்,
15 இரண்டு சிறு நீரகங்களையும் அவற்றின் மேலிருக்கும் விலாவை அடுத்த சவ்வையும், சிறு நீரகங்களோடிருக்கும் ஈரலின் கொழுப்பையும் எடுத்து,
16 நறுமணப்பலியாக இவைகளைக் குரு பீடத்தின் மீதுள்ள நெருப்பில் சுட்டெரிக்கக்கடவார்.
17 கொழுப்பானதெல்லாம் ஆண்டவருக்கு உரியது. இது உங்கள் தலைமுறைதோறும், நீங்கள் வாழும் இடம் தோறும் மாறாத சட்டமாய் இருக்கும். அன்றியும், இரத்தத்தையாவது கொழுப்பையாவது நீங்கள் உண்ணலாகாது என்றருளினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
லேவியராகமம் - பழைய ஏற்பாடு, கொழுப்பையும், சிறு, அவன், நீரகங்களையும், பீடத்தின், ஏற்பாடு, சமாதானப், பழைய, மேல், சுற்றிலும், சவ்வையும், ஆண்டவருக்கு, எடுத்து, ஆரோனின், லேவியராகமம், சாட்சியக், வைத்து, கையை, கடவான், மூடியுள்ள, விலாவை, நீங்கள், முதலிய, ஒப்புக், குரு, வார்த்து, அன்றியும், இரத்தத்தை, வயிறு, அதைச், இரண்டு, ஆண்டவர், முன்னிலையில், செலுத்த, ஆன்மிகம், திருவிவிலியம், செலுத்தக், தலைமீது, அவைகளைப், கல்லீரலையும், ஆண்டவருக்குப், பலியிலே, மேலுள்ள