யோபு ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 41
2 அதைத் தாக்கிய எவனாவது தப்பியதுண்டோ? வானத்தின் கீழ் இருப்பவர்களுள் எவனுமில்லை.
3 லெவீயாத்தானின் உறுப்புகளைப் பற்றிச் சில சொல்வோம், அதன் நிகரற்ற ஆற்றலைப் பற்றியும் கொஞ்சம் விவரிப்போம்:
4 அதன் மேல் தோலை உரிக்கக் கூடியவன் யார்? இரு மடங்கான அதன் மார்புக் கவசத்தை ஊடுருவினவன் யார்?
5 அதன் முகத்தின் கதவுகளைத் திறக்கக் கூடியவன் எவன்? அதன் பற்களைச் சுற்றியும் திகில் தான் இருக்கிறது.
6 அதன் முதுகு மூடி முத்திரையிட்டாற் போல், கேடயங்களின் வரிசைகளால் அமைந்துள்ளது.
7 காற்று கூட அவற்றினிடையே நுழையாதபடி ஒன்றோடொன்று நெருக்கமாய் பொருந்தியுள்ளன.
8 அவை ஒன்றோடொன்று கெட்டியாய் ஒட்டியுள்ளன, ஒன்றை விட்டொன்று பிரிக்கப்பட முடியாது.
9 லெவீயாத்தானின் தும்மல்கள் தீயைக் கக்கும், அதன் கண்கள் வைகறையின் கண்ணிமைகள் போலுள்ளன.
10 அதன் வாயினின்று தீக்கொள்ளிகள் வெளிப்படுகின்றன, தீப்பொறிகள் வெளியில் தாவுகின்றன.
11 கொதிக்கும் பானையினின்றும், எரியும் நாணல்களினின்றும் புகையெழுவது போல் அதன் மூக்கிலிருந்து புகை வெளிப்படுகிறது.
12 அதன் மூச்சு கரிக்கட்டைகளை எரியச் செய்யும், அவன் வாயிலிருந்து தீக்கொழுந்து வெளிப்படும்.
13 வலிமை அதன் கழுத்தில் குடிகொண்டுள்ளது, அச்சம் அதன் முன்னிலையில் கூத்தாடுகிறது.
14 அதன் சதை மடிப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்துள்ளன, அசைக்க முடியாமல் கெட்டியாய் ஒட்டியுள்ளன.
15 அதன் இதயம் கல்லை போல் உறுதியானது, எந்திரக் கல்லை போல் கடினமானது.
16 அது எழுந்திருக்கும் போது உம்பர்களும் அஞ்சுகிறார்கள், நடுநடுங்கி நிலை கலங்குகிறார்கள்.
17 வாளால் வெட்டினாலும், அதற்குத் காயமேற்படாது@ ஈட்டியோ அம்போ எறிவேலோ அதை ஒன்றும் செய்ய முடியாது.
18 இரும்பை வைக்கோலாகவும் வெண்கலத்தை உளுத்த மரமாகவும் அது கருதிக் கொள்கிறது.
19 அம்பினால் அதை விரட்ட முடியாது, அதற்குக் கவண் கற்களும் துரும்புக்குச் சமம்.
20 பெரிய தடிகள் அதற்குச் சிறிய நாணற் குச்சிகள் போலாம், எறிவேல்கள் பாய்வதைக் கண்டு அது நகைக்கிறது.
21 அதன் வயிற்றின் அடிப்பாகம் கூரிய ஓடுகள் போல் உள்ளது, புணையடிக்கும் உருளை போல் அது சேற்றில் புரளுகிறது.
22 கொதிபானை போல் ஆழ்கடலைக் கொதிக்கச் செய்கிறது, மாக்கடலைத் தைலச் சட்டி போல் ஆக்குகிறது.
23 அது நீந்திச் சென்ற பாதை நீரில் மினுமினுக்கும், ஆழ்கடல் நரைத்ததென கருதத் தோன்றும்.
24 அச்சமென்பதறியாத படைப்பு ஒன்று, அதைப் போல இவ்வுலகில் வேறெதுவுமில்லை.
25 ஆணவமுள்ளோரை அது கண்ணில் உற்று நோக்கும், இறுமாப்பின் மக்களுக்கெல்லாம் அதுவே அரசன்."
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யோபு ஆகமம் - பழைய ஏற்பாடு, போல், ஏற்பாடு, பழைய, யோபு, கூடியவன், முடியாது, ஒன்றோடொன்று, ஆகமம், கெட்டியாய், ஒட்டியுள்ளன, கல்லை, எவனுமில்லை, திருவிவிலியம், ஆன்மிகம், லெவீயாத்தானின், யார்