எஸ்தர் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 16
2 பலர் சிற்றரசர்களின் கருணையையும் அவர்களால் தங்களுக்கு அளிக்கப்பட்ட நன்மதிப்பையும் தங்கள் அகந்தையால் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர்.
3 அரசரின் குடிகளை நெருக்கி நொறுக்க முயல்வதுமன்றி, தங்களுக்குக் கிடைத்த பெருமையைத் தாங்க மாட்டாதவர்களாய்த் தங்களுக்கு அதை அளித்தவர்களுக்கு விரோதமாகவே சதி செய்கின்றனர்.
4 இப்படிப்பட்டவர்கள் தாங்கள் பெற்ற நன்மைகளுக்காக நன்றி செலுத்தாமலிருப்பதும், தாங்களே மனித இயல்பு முறைமைகளை மீறி நடந்து கொள்வதுமன்றி எல்லாவற்றையும் அறிகிறவரான கடவுளின் தீர்ப்பிற்கும் தாங்கள் தப்பிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.
5 அவர்களுடைய மதியீனம் எவ்வளவென்றால், தமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளைச் சரிவர நிறைவேற்றி எல்லாவற்றிலும் எல்லாராலும் மெச்சப்படும்படி நடந்து கொள்கிறவர்களைக் கூட தங்கள் பொய்களால் கெடுக்கப் பார்க்கிறார்கள்.
6 கபடின்றித் தம்மைப் போல் மற்றவர்களையும் மதிக்கும் சிற்றரசர்களையும் தங்கள் வஞ்சகத்தால் ஏமாற்ற முனைகிறார்கள்.
7 இவ்வாறு அரசரின் நல்ல திட்டங்களும் சில மனிதரின் சூழ்ச்சியால் வீழ்ச்சி அடைய முடியும் என்பது பழைய வரலாற்றினின்றும், நாடோறும் நடந்தேறி வரும் நிகழ்ச்சிகளினின்றும் தெளிவாகின்றது.
8 எனவே எல்லா மாநிலங்களிலும் அமைதியை நிலை நாட்டுவது நம் கடமை.
9 நாம் மாறுபட்ட கட்டளைகளைப் பிறப்பிப்பது நமது குறுமதியால் தான் என்று நினைக்க வேண்டாம்@ ஆனால், அரசின் பொது நன்மையைக் கருதி, காலப்போக்கிற்கும் தேவைக்கும் தக்கவாறு நாம் முடிவுகள் எடுக்கிறோம் என்று அறிந்துகொள்ளுங்கள்.
10 நாம் சொல்வதை நீங்கள் இன்னும் தெளிவாய் அறியும் பொருட்டு ஆமதாதின் புதல்வனாகிய ஆமானை மனத்தில் கொள்ளுங்கள். அவன் குணத்திலும் மசதோனியன்@ பிறப்பிலும் மசதோனியன். பாரசீக இரத்தமே அவனிடம் கிடையாது. வழிப்போக்கனாக வந்த அவனுக்கு நாம் நமது இல்லத்தில் இடமளித்திருந்தும் அவன் நமது தயவைத் தனது கொடுமையால் மாசுபடுத்தி விட்டான்.
11 நாம் அவன்பால் வைத்திருந்த அன்பின் மிகுதியைப் பார்த்து எல்லா மக்களும் அவனை அரசரின் தந்தை என்று அழைத்து, அவனை அரசருக்கு அடுத்த நிலையில் வைத்து மரியாதை செலுத்தி வந்தனர்.
12 அதனால் அவன் எவ்வளவு அகந்தை கொண்டான் என்றால், நம் அரசையும் நம் உயிரையுமே பறிக்க முற்பட்டான்.
13 ஏனெனில், எவனுடைய உதவியால் நாம் இன்னும் உயிரோடு இருக்கிறோமோ அந்த நேர்மையுள்ளம் படைத்த மார்தொக்கேயையும், நம் துணைவியான அரசி எஸ்தரையும், அவர்கள் குலத்தினர் யாவரையுமே ஆமான் என்றும் கேட்டிராத புதுப்புது வழிகளால் அழிக்கத் தேடினான்.
14 இவ்வாறு அவர்களைக் கொன்ற பின்பு, துணையின்றி விடப்பட்ட நமக்கும் எதிராகச் சதி செய்து, பாரசீக அரசை மசதோனியர் கைக்கு மாற்றுவதே அவன் எண்ணம் போலும்!
15 நாமோ நன்கு விசாரித்த போது, மனிதர் அனைவரிலும் மிகக் கொடியவனான ஆமானால் கொலை செய்யப்படவிருந்த யூதர்கள் யாதொரு குற்றமும் அற்றவர்கள் என்றும், அவர்கள் நீதி நெறிகளையே அனுசரித்து வருகிறார்கள் என்றும்,
16 அவர்கள் அதி உன்னத மகத்துவமுடையவரும், என்றும் வாழ்பவருமான கடவுளுடைய மக்கள் என்றும் கண்டறிந்தோம். அக் கடவுளது அருளால் அன்றோ நம் முன்னோருக்கும் நமக்கும் ஆட்சியுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது!
17 ஆதலால், நமது பெயரால் ஆமான் உங்களுக்கு அனுப்பியிருந்த கடிதங்கள் இனிச்செல்லாது என்று அறிந்துகொள்ளுங்கள்.
18 அவன் செய்த அந்தக் கொடுஞ் செயலின் பொருட்டு நாமல்ல, கடவுளே அவனுக்குத் தகுந்த தண்டனை விதித்து, அவனும் அவனுடைய சுற்றத்தார் அனைவரும் சூசா என்னும் இந்த நகர வாயில்களுக்கு முன் தூக்கிலிடப் படச் செய்தார்.
19 இனி யூதர்கள் தங்கள் சொந்தச் சட்டப்படி நடக்கலாம் என்பதற்கு ஆதாரமாக, இன்று நாம் அனுப்பும் இக்கட்டளைக் கடிதம் எல்லா நகரங்களிலும் பறைசாற்றப்பட வேண்டும்.
20 தங்களைக் கொல்லக் கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தவர்களை யூதர்கள் ஆதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று அழித்தொழிப்பதற்கு நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.
21 ஏனென்றால், எல்லாம் வல்ல கடவுள் துக்க துயரத்திற்குரிய அந்த நாளை அவர்களுக்கு மகிழ்ச்சியின் நாளாக மாற்றி விட்டார்.
22 எவரெவர் பாரசீக அரசர்களுக்கு நேர்மையுடன் அடிபணிவார்களோ அவர்கள் அனைவரும் தங்கள் நேர்மைக்கு ஏற்ற வெகுமதி பெறுவர் என்றும்,
23 அவ்வரசர்களுக்கு எதிராகச் சதி செய்கிறவர்களோ தங்கள் தீச்செயலின் பொருட்டு அழிக்கப்படுவர் என்றும் இனி யாவரும் அறியும் பொருட்டு நீங்கள் மற்றத் திருவிழாக்களைப் போல் இந்த நாளையும் மிக அக்களிப்போடு கொண்டாடுங்கள்.
24 இந்த விழாவில் பங்குபெறாத நாடும் நகரமும் வாளாலும் நெருப்பினாலும் நாசமாகும்@ அரச கட்டளைகளை அலட்சியம் செய்ததற்கும் கீழ்ப்படியாமைக்கும் எடுத்துக்காட்டாக, மனிதர்களும் மிருகங்களும் அங்கு வாழமுடியாதவாறு அவை அழிவுறும்."
தேடல் தொடர்பான தகவல்கள்:
எஸ்தர் ஆகமம் - பழைய ஏற்பாடு, நாம், என்றும், தங்கள், நமது, அவன், பழைய, ஏற்பாடு, பொருட்டு, நீங்கள், பாரசீக, யூதர்கள், எஸ்தர், எல்லா, ஆகமம், அரசரின், திருவிவிலியம், ஆமான், அந்த, நமக்கும், எதிராகச், அனைவரும், அவர்களுக்கு, அவனை, என்னும், ஆன்மிகம், தாங்கள், இவ்வாறு, போல், அறிந்துகொள்ளுங்கள், இன்னும், ", தங்களுக்கு, அறியும், நடந்து