சங்கத்திருவுரை ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 11
2 அதை ஏழு பேருக்கும், எட்டுப் பேருக்கும் பங்கிட்டுக் கொடு. ஏனென்றால், வருங்காலத்தில் உனக்கு என்ன தீங்கு நேரிடுமோ, உனக்குத் தெரியாது.
3 கார்மேகங்கள் நிறைந்திருந்தால் பூமியின் மேல் மழை பெய்யும். மரம் தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே கிடக்கும்.
4 காற்றைக் கவனிக்கிறவன் விதை விதைக்கிறதுமில்லை@ மேகங்களைக் கவனிக்கிறவன் அறுவடை செய்கிறதுமில்லை.
5 உயிர் உண்டாகும் விதம் இன்னதென்றும், கருவுற்றவளின் வயிற்றிலே எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறது போலவே, எல்லாவற்றையும் உண்டாக்கின கடவுளின் செயல்களையும் நீ அறிவாய்.
6 விதையைக் காலையிலே விதை@ மாலையிலேயும் கை சலிக்காமல் விதை@ ஏனென்றால், இதுவோ அதுவோ எது வாய்க்குமென்று உனக்குத் தெரியாது. இரண்டும் வாய்க்குமானாலும் தாவிளை.
7 வெளிச்சம் இன்பமாயும் சூரியனைக் காண்பது விருப்பமாயும் இருக்கின்றன.
8 ஒரு மனிதன் பல ஆண்டு வாழ்ந்து அவைகளிலெல்லாம் களித்திருந்தாலும், அவன் இருளின் நாட்களை நினைக்க வேண்டியதுமன்றி, கணக்கற்ற நாட்களையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அவைகளால் அல்லவோ நிகழ்ந்த காலமெல்லாம் வீணென்று தெளிவாகும்!
9 ஆகையால், இளைஞனே, உன் இளமையிலே மகிழ்ச்சியாய் இரு@ உன் வாலிப நாட்களில் உன் இதயம் மகிழட்டும்@ உன் மனமும் கண்களும் போன வழியே நட. ஆனால், இந்த எல்லாக் காரியத்திலும் கணக்குச் சொல்லக் கடவுள் உன்னை நீதியாசனத்தின்முன் அழைத்துக்கொண்டு போய் நிறுத்துவாரென்பதை மறவாதே.
10 உன் இதயத்தினின்று கோபத்தையும், உன் உடலினின்று கெட்டவையாவையும் நீ விலக்கக்கடவாய். ஏனென்றால், இளமையும் வீண்@ சிற்றின்பமும் வீணே.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கத்திருவுரை ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, ஏனென்றால், சங்கத்திருவுரை, ஆகமம், விதம், கவனிக்கிறவன், விதை@, விழுந்தாலும், இன்னதென்றும், பேருக்கும், திருவிவிலியம், ஆன்மிகம், உனக்குத், தெரியாது