அருளப்பர் நற்செய்திகள் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 18
2 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசுக்கும் அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடரும் அடிக்கடி அங்குக் கூடுவதுண்டு.
3 யூதாஸ் படைவீரர்களையும், தலைமைக்குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் அழைத்துக்கொண்டு, விளக்குகளோடும், பந்தங்களோடும் படைக்கருவிகளோடும் அங்கே வந்தான்.
4 தமக்கு நிகழப்போவதையெல்லாம் அறிந்த இயேசு முன்சென்று, "யாரைத் தேடிவந்தீர்கள் ?" என்று அவர்களைக் கேட்டார்.
5 அவர்களோ, "நாசரேத்தூர் இயேசுவை" என்று சொல்ல, இயேசு "நான்தான்" என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு இருந்தான்.
6 "நான்தான்" என்று அவர் சொன்னதும், அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.
7 "யாரைத் தேடிவந்தீர்கள் ?" என்று மீண்டும் அவர்களைக் கேட்டார். அவர்கள், "நாசரேத்தூர் இயேசுவை" என்று சொல்ல,
8 இயேசு, "நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே@ என்னை நீங்கள் தேடிவந்திருந்தால் இவர்களைப் போகவிடுங்கள்" என்றார்.
9 "நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் ஒருவனையும் நான் அழிவுறவிடவில்லை" என்று அவர் கூறியிருந்தது இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது.
10 சீமோன் இராயப்பரிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, அவனது வலக்காதை வெட்டினார். அவ்வூழியனின் பெயர் மால்குஸ்.
11 இயேசு இராயப்பரை நோக்கி, "உன் வாளை உறையில் போடு. தந்தை எனக்குக் கொடுத்த துன்பகலத்தில் நான் குடிக்காதிருப்பேனோ ?" என்றார்.
12 படைவீரரும் படைத்தலைவனும் யூத காவலரும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,
13 முதலில் அன்னாசிடம் கொண்டுபோயினர். ஏனெனில், அவர் அவ்வாண்டில் தலைமைக்குருவாயிருந்த கைப்பாசுக்கு மாமனார்.
14 இந்தக் கைப்பாசுதான் "மக்களுக்காக ஒருவன்மட்டும் இறப்பது நலம்" என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.
15 சீமோன் இராயப்பரும் வேறொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். இந்தச் சீடர் தலைமைக்குருவுக்கு அறிமுகமானவராயிருந்ததால், இயேசுவோடு அப்பெரியகுருவின் வீட்டுமுற்றத்தில் நுழைந்தார்.
16 இராயப்பரோ வெளியில் வாயிலருகே நின்றுகொண்டிருந்தார். தலைமைக்குருவுக்கு அறிமுகமாயிருந்த சீடர் வெளியே சென்று வாயில்காப்பவளிடம் சொல்லி, இராயப்பரை உள்ளே அழைத்துவந்தார்.
17 வாயில்காக்கும் ஊழியக்காரி இராயப்பரை நோக்கி, "நீயும் அம்மனிதனின் சீடர்களுள் ஒருவன் அன்றோ ?" என, அவர், "நான் அல்லேன்" என்றார்.
18 அப்போது குளிராயிருந்ததால், ஊழியரும் காவலரும் கரிநெருப்பு மூட்டிச் சுற்றிநின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தனர். இராயப்பரும் அவர்களோடு நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.
19 தலைமைக்குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரை வினவினார்.
20 இயேசு மறுமொழியாக, "நான் உலகிற்கு வெளிப்படையாகப் பேசினேன்@ செபக்கூடங்களிலும், யூதர் அனைவரும் கூடிவருகிற கோயிலிலும் எப்பொழுதும் போதித்தேன்: மறைவாகப் பேசியது ஒன்றுமில்லை.
21 என்னை ஏன் வினவுகிறீர் ? அவர்களுக்கு என்ன சொன்னேன் என்று நான் சொன்னதைக் கேட்டவர்களிடம் விசாரித்துப்பாரும்@ நான் கூறியது அவர்களுக்குத் தெரியுமே" என்றார்.
22 என்றதும், அங்கு நின்றுகொண்டிருந்த காவலன் ஒருவன், "தலைமைக்குருவுக்கு இப்படியா மறுமொழி கூறுவது ?" என்று சொல்லி, இயேசுவைக் கன்னத்தில் அறைந்தான்.
23 அதற்கு இயேசு, "நான் பேசியது தவறாயிருந்தால், எது தவறு என்று காட்டு@ பேசியது சரியானால் ஏன் என்னை அடிக்கிறாய் ?" என்றார்.
24 பின்பு, அன்னாஸ் அவரைக் கட்டுண்டிருந்தவாறே தலைமைக்குருவாகிய கைப்பாசிடம் அனுப்பினார்.
25 சீமோன் இராயப்பர் அங்கு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரைப் பார்த்து, "நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவனன்றோ ?" என்று கேட்டார்கள். அவர், "நான் அல்லேன்" என்று மறுத்தார்.
26 தலைமைக் குருக்களின் ஊழியருள் ஒருவன் இராயப்பரால் காது அறுபட்டவனுக்கு உறவினன்@ அவன் இராயப்பரிடம், "தோட்டத்தில் நான் உன்னை அந்த ஆளோடு காணவில்லையா ?" என்று கேட்டான்.
27 இராயப்பர் மீண்டும் மறுத்தார்@ உடனே கோழி கூவிற்று.
28 அதன்பின் இயேசுவைக் கைப்பாசிடமிருந்து பிலாத்துவின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்பதற்குத் தீட்டுப்படாமலிருக்க அரண்மனைக்குள் அவர்கள் நுழையவில்லை.
29 எனவே பிலாத்து அவர்களைக் காண வெளியே வந்து, "இவன்மேல் நீங்கள் சாட்டும் குற்றம் என்ன ?" என்று கேட்டார்.
30 அதற்கு அவர்கள், "இவன் குற்றவாளியாய் இராதிருந்தால் நாங்கள் இவனை உமக்குக் கையளித்திருக்கமாட்டோம்" என்றார்கள்.
31 அப்போது பிலாத்து, "இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி நீங்களே தீர்ப்பிடுங்கள்" என, யூதர்கள், "எவனையும் கொல்ல எங்களுக்கு உரிமையில்லை" என்றார்கள்.
32 தமக்கு எத்தகைய சாவு நேரிடும் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியது இப்படி நிறைவேற வேண்டியிருந்தது.
33 பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவை வரச்சொல்லி, "நீ யூதர்களின் அரசனோ ?" என்று கேட்டார்.
34 இயேசு மறுமொழியாக, "நீராகவே இதைக் கேட்கின்றீரா, மற்றவர் என்னைப்பற்றி உம்மிடம் கூறினரா ?" என்றார்.
35 அதற்குப் பிலாத்து, "நான் யூதனா ? உன் இனத்தாரும் தலைமைக்குருக்களும் உன்னை என்னிடம் கையளித்தார்களே, என்ன செய்தாய் ?" என்றார்.
36 இயேசுவோ, "என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று@ என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததாயிருந்தால், நான் யூதரிடம் கையளிக்கப்படாதபடி என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால், என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று" என்றார்.
37 எனவே, பிலாத்து அவரை நோக்கி, "அப்படியானால் நீ அரசன்தானா ?" என்று கேட்க, இயேசு, " ~ அரசன் ~ என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மைக்குச் சாட்சியம் கூறுவதே எனது பணி@ இதற்காகவே பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும் எனது குரலுக்குச் செவிமடுக்கிறான்" என்றார்.
38 அதற்குப் பிலாத்து, "உண்மையா! அது என்ன ?" என்று சொல்லிவிட்டு, மீண்டும் வெளியே சென்று யூதரை நோக்கி, "இவனிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை.
39 பாஸ்காத் திருவிழாவின்போது உங்களைப் பிரியப்படுத்த ஒருவனை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே. அதன்படி யூதரின் அரசனை நான் விடுதலைசெய்வது உங்களுக்கு விருப்பமா ?" என்று வினவினார்.
40 அதற்கு எல்லாரும், "இவன் வேண்டாம், பரபாசே வேண்டும்! " என்று மீண்டும் உரக்கக் கூவினர். அந்தப் பரபாசோ ஒரு கள்வன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அருளப்பர் நற்செய்திகள் - புதிய ஏற்பாடு, ", நான், இயேசு, என்றார், அவர், பிலாத்து, ஏற்பாடு, மீண்டும், கேட்டார், நோக்கி, என்ன, அதற்கு, என்னை, பேசியது, சீமோன், அவர்களைக், இராயப்பரை, இவ்வுலகைச், அரசு, தலைமைக்குருவுக்கு, வெளியே, நற்செய்திகள், அருளப்பர், அவரைக், ஒருவன், அல்லேன்", அவரை, வினவினார், சீடர்களுள், நீயும், அப்போது, நின்று, கூறியது, இவன், குற்றம், என்றார்கள், அதற்குப், இதற்காகவே, எனது, அரண்மனைக்குள், உன்னை, சொல்லி, உலகிற்கு, அங்கு, இயேசுவைக், இராயப்பர், மறுமொழியாக, இராயப்பரிடம், அவருடைய, ஏனெனில், சீடரும், தலைமைக்குருக்களும், யாரைத், தமக்கு, அந்த, காட்டிக்கொடுத்த, ஆன்மிகம், திருவிவிலியம், சீடரோடு, அங்கே, நுழைந்தார், தேடிவந்தீர்கள், நாசரேத்தூர், வேண்டியிருந்தது, நிறைவேற, காவலரும், இயேசுவைப், சீடர், இராயப்பரும், என்னிடம், நீர், சொல்ல, இயேசுவை", நான்தான்", அவர்களோடு, நீங்கள், சென்று