அருளப்பர் நற்செய்திகள் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 15
2 என் கிளைகளில் கனிகொடாத எக்கிளையையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்.
3 நான் உங்களுக்குக் கூறிய வார்த்தையால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாக இருக்கிறீர்கள்.
4 நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள். கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது. அவ்வாறே, நீங்களும் என்னில் நிலைத்திருந்தாலன்றி, கனி தர முடியாது.
5 நான் திராட்சைக் கொடி@ நீங்கள் அதன் கிளைகள். ஒருவன் என்னுள்ளும் நான் அவனுள்ளும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனி தருவான். ஏனெனில், என்னை பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
6 ஒருவன் என்னுள் நிலைத்திராவிடில், கிளையைப்போல வெட்டி எறியப்பட்டு, உலர்ந்து போவான்@ அக்கிளைகளை ஒன்று சேர்த்து, நெருப்பில் போட்டுச் சுட்டெரிப்பார்கள்.
7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால், விரும்பியதெல்லாம் கேளுங்கள், உங்களுக்கு அருளப்படும்.
8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராக விளங்குவதே என் தந்தைக்கு மகிமை.
9 தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.
10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.
11 என் மகிழ்ச்சி உங்களில் இருக்கும்படியும், உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறும்படியும் நான் உங்களுக்கு இதெல்லாம் கூறினேன்.
12 நான் உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை.நி31339
13 தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை.
14 நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்.
15 உங்களை நான் இனி ஊழியர் என்று சொல்லேன்@ ஏனெனில், தலைவன் செய்வது இன்னது என்று ஊழியனுக்குத் தெரியாது. ஆனால் உங்களை நண்பர்கள் என்றேன்@ ஏனெனில், தந்தையிடமிருந்து நான் கேட்டதையெல்லாம் உங்களுக்கு அறிவித்தேன்.
16 நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்@ நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாகவும், அந்தப் பலன் நிலைத்திருக்கும்படியாகவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்.
17 நீங்கள் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை.
18 "உலகம் உங்களை வெறுக்கிறதென்றால், உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
19 நீங்கள் உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால், உலகம் தனக்குச் சொந்தமானதை நேசிக்கும்@ நீங்களோ உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல@ ஏனெனில், நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்தேன். ஆதலால் தான் உலகம் உங்களை வெறுக்கின்றது.
20 ஊழியன் தலைவனுக்கு மேற்பட்டவன் அல்லன் என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள்@ உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கேட்டிருந்தால்தானே, உங்கள் வார்த்தையையும் கேட்பார்கள்.
21 என்னை அனுப்பினவரை அறியாததால் என் பெயரைக்குறித்து இப்படியெல்லாம் உங்களை நடத்துவார்கள்.
22 நான் வந்து அவர்களுக்குப் போதியாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இராது. இப்பொழுதோ தங்கள் பாவத்திற்குச் சாக்குச் சொல்ல வழியில்லை.
23 என்னை வெறுப்பவன் என் தந்தையையும் வெறுக்கிறான்.
24 யாரும் செய்திராத செயல்களை நான் அவர்களிடையே செய்யாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இராது. இப்பொழுதோ என்னையும் என் தந்தையையும் கண்டார்கள், கண்டும் வெறுத்தார்கள்.
25 காரணமின்றி என்னை வெறுத்தனர்~ என்று அவர்களுது சட்டத்தில் எழுதியுள்ளது இவ்வாறு நிறைவேற வேண்டும்.
26 நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்@ அவர் தந்தையிடமிருந்து வரும் உண்மையின் ஆவியானவர். அவர் வந்து என்னைப்பற்றிச் சாட்சியம் கூறுவார்.
27 நீங்கள்கூட சாட்சியம் கூறுவீர்கள்@ ஏனெனில், தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அருளப்பர் நற்செய்திகள் - புதிய ஏற்பாடு, நான், நீங்கள், உங்களை, என்னை, ஏனெனில், உங்களுக்கு, ஏற்பாடு, அவர், நீங்களும், அவர்களுக்குப், அருளப்பர், மிகுந்த, உலகம், நற்செய்திகள், அன்பில், உங்களுக்குக், தந்தையிடமிருந்து, கட்டளை, நண்பர்கள், எனது, வந்து, இப்பொழுதோ, தந்தையையும், சாட்சியம், இராது, பாவம், உலகத்தைச், அன்புகூரவேண்டுமென்பதே, இருந்திருந்தால், பலன், கட்டளைகளைக், நிலைத்திருங்கள், திராட்சைக், நிலைத்திருந்தாலன்றி, என்னில், உங்களில், ", ஆன்மிகம், முடியாது, ஒருவன், மகிழ்ச்சி, உங்கள், ஒருவர், அன்புகூர்ந்ததுபோல, திருவிவிலியம், என்னுள்ளும், நிலைத்திருந்தால், ஒருவரிடம்