பத்தாவது அத்தியாயம் (விபூதி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
அர்ஜுன உவாச। |
பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்। புருஷம் ஷாஷ்வதம் திவ்யமாதிதேவமஜம் விபும்॥ 10.12 ॥ ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா। அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே॥ 10.13 ॥ |
அர்ஜுனன் கூறினான்: நீ மேலான பிரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனித பொருள், எல்லா ரிஷிகளும், தேவ ரிஷியான நாரதரும், அஷிதர், தேவலர், வியாசர் போன்ற முனிவர்களும் உன்னை நிலையானவன், ஒளிமயமான இறைவன், முழுமுதற்கடவுள், பிறப்பற்றவன், எங்கும் நிறைந்தவன் என்றெல்லாம் போற்றுகிறார்கள். நீயும் அவ்வாறே சொல்கிறாய்.
ஸர்வமேதத்ருதம் மந்யே யந்மாம் வதஸி கேஷவ। ந ஹி தே பகவந்வ்யக்திம் விதுர்தேவா ந தாநவா:॥ 10.14 ॥ |
கேசவா ! எனக்கு எதை சொல்கிறாயோ, அவை எல்லாம் உண்மை என்று கருதுகிறேன். பகவானே ! உனது உண்மை இயல்பை தேவர்களும் அறியவில்லை, அசுரர்களும் அறியவில்லை.
ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த த்வம் புருஷோத்தம। பூதபாவந பூதேஷ தேவதேவ ஜகத்பதே॥ 10.15 ॥ |
புருஷோத்தமா ! உயிர்களை படைத்தவனே, உயிர்களின் தலைவனே, தேவாதிதேவனே, உலகை ஆள்பவனே, உன்னை நீயே அறிவாய், உன்னால் மட்டுமே உன்னை அறிய முடியும். நீ அதை அறிகிறாய்.
வக்துமர்ஹஸ்யஷேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய:। யாபிர்விபூதிபிர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸி॥ 10.16 ॥ |
எந்த மகிமைகளால் நீ உலகங்களை வியாப்பித்து, நிற்கிறாயோ, தெய்வீகமான உனது அந்த மகிமைகளை எனக்கு முற்றிலுமாக சொல்ல வேண்டும்.
கதம் வித்யாமஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந்। கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோ அஸி பகவந்மயா॥ 10.17 ॥ |
யோகி, நான் எப்போதும் தியானிப்பதன் மூலம் எப்படி உன்னை அறிவது? பகவானே ! உன்னை எந்தெந்த பாவனைகளில் தியானிக்க முடியும்?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்தாவது அத்தியாயம் (விபூதி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, உன்னை, பகவத்கீதை, பத்தாவது, அத்தியாயம், விபூதி, ஸ்ரீமத், யோகம், பகவானே, உனது, கேஷு, முடியும், அறியவில்லை, உண்மை, புனித, bhagavad, gita, இந்து, பரம், எனக்கு