பதினேழாவது அத்தியாயம் (ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே। ப்ரஷஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே॥ 17.26 ॥ |
அர்ஜுனா ! “ஸத்” என்ற சொல் உண்மை என்ற கருத்திலும், நன்மை என்ற கருத்திலும் வழங்கபடுகிறது.அவ்வாறே மங்களகரமான காரியங்களிலும் ஸத் என்ற சொல் உபயோகிக்கபடுகிறது.
யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே। கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே॥ 17.27 ॥ |
வழிபாட்டிலும் தவத்திலும் தானத்திலும் நிலைத்திருப்பது ஸத் என்று சொல்லபடுகிறது. இறைவனுக்காக செய்யபடுகின்ற கர்மமும் “ஸத்” என்றே சொல்லபடுகிறது.
அஷ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத்। அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேப்ய நோ இஹ॥ 17.28 ॥ |
அர்ஜுனா ! சிரத்தை இல்லாமல் செய்த யாகமும், கொடுத்த தானமும் செய்த தவமும், மற்ற கர்மங்களும் “அஸத்” எனப்படும். அது இந்த உலகத்திற்கும் உதவாது. மேல் உலகத்திற்கும் உதவாது.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே ஷ்ரத்தாத்ரயவிபாகயோகோ நாம ஸப்ததஷோ அத்யாய:॥ 17 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினேழாவது அத்தியாயம் நிறைவுற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினேழாவது அத்தியாயம் (ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், பதினேழாவது, யோகம், அத்தியாயம், ஷ்ரத்தாத்ரயவிபாக, செய்த, சொல்லபடுகிறது, உலகத்திற்கும், உதவாது, கருத்திலும், எனப்படும், பார்த, gita, bhagavad, இந்து, அர்ஜுனா, “ஸத்”, சொல்