பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ஷமோ தமஸ்தப: ஷௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச। ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்॥ 18.42 ॥ |
மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, கற்றறிவு, அனுபவ அறிவு, ஆன்ம நாட்டம் ஆகியவை இயல்பாக பிராமணனுக்கு உரியவை.
ஷௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்। தாநமீஷ்வரபாவஷ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்॥ 18.43 ॥ |
பராக்கிரமம், மன ஆற்றல், செயல்திறன், சாதுர்யம், போரில் புறம்கட்டமை, கொடை, ஆளும் திறமை ஆகியவை இயல்பாக க்ஷத்திரியனுக்கு உரிய செயல்கள்.
க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஷ்யகர்ம ஸ்வபாவஜம்। பரிசர்யாத்மகம் கர்ம ஷூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்॥ 18.44 ॥ |
விவசாயம், மாடுகளை காத்தல், வாணிபம் ஆகியவை இயல்பாக வைசியனுக்கு உரிய செயல்கள். சூத்திரனுக்கு இயல்பானது குற்றேவல் செயல்கள்.
ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:। ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு॥ 18.45 ॥ |
தனக்குரிய கடமைகளில் இன்பம் காண்கின்ற மனிதன் நிறைநிலையை அடைகிறான். கடமையை செய்பவன் எப்படி நிறைநிலையை அடைகிறான் என்பதை கேள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், பதினெட்டாவது, ஸ்வபாவஜம்॥, செயல்கள், இயல்பாக, அத்தியாயம், மோட்ச, சன்யாஸ, யோகம், ஆகியவை, ஸ்வே, நிறைநிலையை, அடைகிறான், இந்து, bhagavad, gita, கர்ம, உரிய