மூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத। குர்யாத்வித்வாம்ஸ்ததா அஸக்தஷ்சிகீர்ஷுர்லோகஸம்க்ரஹம்॥ 3.25 |
பரத குலத்தில் உதித்தவனே ! பாமரர்கள் எப்படி பற்று வைத்து வேலை செய்வார்களோ, அப்படி அறிவாளி, பற்றற்றவனாக உலக நன்மைக்காக வேலை செய்யவேண்டும்.
ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்। ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந்॥ 3.26 |
பற்றுடன் வேலை செய்கின்ற பாமரர்களை அறிவாளி குழப்பக்கூடாது. தான் எல்லா வேலைகளையும் ஈடுபாட்டுடன் நன்றாக செய்து கொண்டு அவ்வாறு செய்வதற்கு பிறரையும் தூண்டவேண்டும்.
ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஷ:। அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே॥ 3.27 |
செயல்கள் எப்போதும் இயற்கையின் குனங்கலாலேயே செய்யபடுகிறது. அகங்காரத்தால் குழம்பியவன் “செய்பவன் நானே “ என்று நினைக்கின்றான்.
தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:। குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே॥ 3.28 |
பெருந்தோள் உடையவனே ! குணம் மற்றும் கர்மங்களுடைய பிரிவிகளின் உண்மையை அறிந்தவன், குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன என்று உணர்த்து பற்றின்றி வேலை செய்கிறான்.
ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு। தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்॥ 3.29 |
இயற்கையின் குணங்களால் குழப்பம் அடைந்தவர்கள் குணங்களின் செயல்பாடுகளில் பற்று வைக்கிறார்கள்.அறிவு தெளிவற்ற அந்த மந்த புத்தியினரை அறிவாளிகள் கலங்குமாறு செய்யகூடாது.
மயி ஸர்வாணி கர்மாணி ஸம்ந்யஸ்யாத்யாத்மசேதஸா। நிராஷீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:॥ 3.30 |
எல்லா வேலைகளையும் என்னிடம் சமர்பித்துவிட்டு, ஆசையிள்ளாதவனாக, அகங்காரம் அற்றவனாக, மனகிளர்ச்சி நீங்கியவனாக தன்னுனர்வுடன் போரில் ஈடுபடு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, வேலை, மூன்றாவது, ஸ்ரீமத், அத்தியாயம், யோகம், கர்ம, இயற்கையின், வேலைகளையும், கர்மாணி, எல்லா, பற்று, gita, இந்து, bhagavad, அறிவாளி