உணவுப் பழக்கம் - மனத்தக்காளி கீரை
1. மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து உண்ண உடம்பு குளிர்ச்சி அடையும்.
2. வாரம் ஒரு முறை இக்கீரையை உண்டுவர, கடுமையான உழைப்பு காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்றியைப் போக்கலாம்.
3. இதயத்திற்கு வலிமை ஏற்றும்.
4. களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
5. மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
6. கண்பார்வையும் தெளிவு பெறும்.
7. வயிற்றுநோய், வயிறு பெறுக்கம், வாய்புத் தொல்லை உடையவர்கள், வாரம் இருமுறை மணத் தக்காளிக் கீரையை சமைத்து உண்டு வர, நோய் கட்டுபட்டு குணமாகும்.
8. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து தொடர்ந்து சாப்பிட்டால், குடல் புண் மற்றும் மூத்திரப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
9. மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையை நீக்கும்.
10. கீரைப்பூச்சி போன்ற கிருமித் தொல்லை உடையவர்கள் வற்றலை உண்டுவர அவை வெளியேறும்.
11. மணத்தக்காளிப் பழம் குரலை இனிமையாக்கும்.
12. கருப்பையில் கரு வலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் உதவுகிறது.
13. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனத்தக்காளி கீரை - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் -