முட்டாள் சிரிப்புகள் - நெருக்கடியைச் சமாளித்த விதம்
ஒரே ஊரைச் சேர்ந்த நூறு பேர் ரயில் பெட்டி ஒன்றில் அடித்து நெருக்கிக் கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அந்த வண்டி, ரயில்வே நிலையம் ஒன்றில் நின்றது.
அங்கிருந்த ஒருவர், "பக்கத்துப் பெட்டிதான் காலியாக இருக்கிறதே, ஏன் இப்படி நெருக்கியடித்துப் பயணம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அவ்வளவுதான், நூறு பேரும் அந்த பெட்டியை விட்டு இறங்கிப் பக்கத்துப் பெட்டிக்குள் நெருக்கி அடித்துக் கொண்டு ஏறினார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெருக்கடியைச் சமாளித்த விதம் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,