அசைவ சிரிப்புகள் - கிளின்டனின் டிரைவர்
கிளின்டன் மோனிகா வழக்கில் கிளின்டன் பெயர் தாறுமாறாக கெட்டுப் போயிருந்த நேரம். கிளின்டனும் அவரது டிரைவரும் மட்டும் காரோட்டிக் கொண்டு ஒரு கிராமத்திற்குள் போய்க் கொண்டிருந்தார்கள். சரியான இருட்டு. திடீரென்று ஒரு பன்றி காரில் மோதி செத்துப் போனது. கிளின்டன் தன் டிரைவரை அழைத்து, ''பரவாயில்லை, இந்தா, இந்த பணத்தைக் கொண்டுபோய் இந்தப் பன்றிக்கு சொந்தக்காரரிடம் கொடுத்துவிட்டு வா'' என்றார். போன டிரைவரை ரொம்ப நேரமாகக் காணவில்லை. இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வந்தான். டிரைவரைப் பார்த்தால் புதிய உடையெல்லாம் அணிந்து மிகவும் சந்தோஷமாக இருந்தான். ''ஏன் இவ்வளவு நேரம்? இதென்ன புது டிரஸ்ஸெல்லாம் போட்டிருக்க, ரொம்ப சந்தோஷமா இருக்க, என்ன ஆச்சு?'' என்றார் கிளின்டன். ''நான் அவங்க வீட்டுக்குப் போனேன். அவங்க எனக்கு சாப்பாடெல்லாம் போட்டு புது டிரஸ்ஸெல்லாம் கொடுத்து அவங்க மகளையும் என்னோட சந்தோஷமா இருக்கச் சொல்லி அனுப்பினாங்க'' என்றான் டிரைவர். கிளின்டனுக்கு பயங்கர ஆச்சரியம். ''அதெப்படி? நாம அவங்க பன்றியைக் கொன்னுட்டோம். அப்படியிருந்து உனக்கு இதெல்லாம் செஞ்சிருக்காங்க. நீ அங்க போய் பன்றியைக் கொன்னதைச் சொன்னியா? என்ன சொன்ன?'' என்றார். உடனே டிரைவர் சொன்னான், ''நான் கிளின்டனோட டிரைவர். நான் இன்னைக்கு அந்தப் பன்றியைக் கொன்னுட்டேன்''.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிளின்டனின் டிரைவர் - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை - டிரைவர், கிளின்டன், பன்றியைக், என்றார்