மௌரியப் பேரரசு
கிரேக்க நாட்டு ஆசிரியர்களால் 'அமித்ரகாதன்' என்று குறிக்கப்படுபவர் பிந்துசாரன். இதற்கு எதிரிகளை அழிப்பவன் என்று பொருள். அவர் மைசூர்வரை பனடயெடுத்து சென்று தக்காணத்தை கைப்பற்றினார். இரண்டு கடல்களுக்கும் இடையிலிருந்த பதினாறு நாடுகளை பிந்துசாரன் கைப்பற்றியதாக திபெத் அறிஞர் தாரநாதர் குறிப்பிட்டுள்ளார். சங்க
பிந்துசாரர் |
சிரியா நாட்டு அரசன் முதலாம் ஆன்டியோகஸ் தனது தூதுவராக டைமக்கஸ் என்பவரை பிந்துசாரன் அவைக்கு அனுப்பிவைத்தார். பிந்துசாரன், முதலாம் ஆன்டியோகசிடம், இனிப்பான மது உலர்ந்த அத்திப்பழம், போன்றவற்றையும் ஒரு தத்துவ ஞானியையும் அனுப்பி வைக்குமாறு கோரினார். பொருட்களை அனுப்பிவைத்த சிரியா அரசன், கிரேக்க நாட்டு சட்டப்படி தத்துவஞானியை அனுப்ப இயலாது என்றும் தெரிவித்தான். அஜிவிகர்கள் என்ற சமயப் பிரிவினரை பிந்துசாரன் ஆதரித்தார். தனது மகன் அசோகரை உஜ்ஜயினியின் ஆளுநராக பிந்துசாரன் நியமித்தார்.
மகா அசோகர் (கி.மு. 273 - கி.மு. 232)
மகா அசோகர் |
அசோகரது ஆட்சியில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு கி.மு. 261 ஆம் ஆண்டு அவர் கலிங்கப்போரில் பெற்ற வெற்றியாகும். அப்போரின் காரணம் மற்றும் போக்கு பற்றி விவரங்கள் இல்லையென்றாலும், விளைவுகள் பற்றி அசோகர் தாம் வெளியிட்ட பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டில் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார். "ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர், அதைப்போல் பன்மடங்கு மக்கள் துன்புற்றனர்" போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மௌரியப் பேரரகடன் இணைத்துக் கொண்டார். கலிங்கப் போரின் மற்றொரு முக்கிய விளைவு அசோகர் புத்த சமயத்தை தழுவியதாகும். புத்தபிக்கு உபகுப்தர் அவரை மனமாற்றம் செய்து புத்தசமயத்தை தழுவச் செய்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியப் பேரரசு , அசோகர், பிந்துசாரன், வரலாறு, மௌரியப், தனது, பற்றி, பேரரசு, இந்திய, நாட்டு, உஜ்ஜயினியின், அசோகரது, சகோதரர்களை, முதலாம், போட்டி, ஆளுநராக, அரியணைக்குப், குறிப்பிட்டுள்ளார், அவர், கிரேக்க, இந்தியா, திபெத், அறிஞர், சிரியா, குறிப்பிடுகின்றன, தாரநாதர், அரசன்