விடுதலைக்குப்பின் இந்தியா
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் (1980 - 85) வேளாண்மை மற்றும் தொழில் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, மக்களின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் (1985 - 90) உணவுப்பொருள் உற்பத்தி, வேலைவாய்ப்பை பெருக்குதல், உற்பத்தி திறனை அதிகரிப்பது போன்றவற்றை வலியுறுத்துவதாக இருந்தது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்தல், முழுவேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, திட்டமிட்ட மக்கள் தொகைப்பெருக்கம் போன்ற நோக்கங்களை எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1992 - 97) குறிப்பிட்டது. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் (1997 - 2002) வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளித்தது. விலைவாசியை கட்டுப்படுத்துவது, ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு, மக்கள் தொகை கட்டுப்பாடு, பஞ்சாயத்து ஆட்சி முறையை வளர்ப்பது மற்றும் மலைவாழ் இன, தாழ்த்தப்பட்ட இன மக்களின் முன்னேற்றம் போன்றவையும் இதன் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன.
1966 - 69, 1978 - 79, 1979 - 80 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு அரசியல் பொருளாதார காரணிகளால் 'ஆண்டு திட்டங்கள்' மட்டுமே செயல்படுத்தப்பட்டன.
பசுமைப்புரட்சி
1950 ஆம் ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி அதிகரித்த போதிலும் 1960 ஆம் ஆண்டுகளின் மத்தியில் உணவுப் பஞ்சம் தோன்றியது. மக்கள் தொகை அதிகரிப்பு, தொழில் உற்பத்திக்கான திட்டச்செலவுகள் உயர்வு போன்ற காரணங்களால் வேளாண் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. பல மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சீனாவுடனும் (1962), பாகிஸ்தானுடன் (1965) இருபோர்களில் இந்தியா ஈடுபட வேண்டியதாயிற்று. 1965 - 66 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி உணவு உற்பத்தியை பாதித்தது. இத்தகைய பின்னணியில்தான் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்காக இந்தியாவில் 'பசுமைப்புரட்சி' தொடங்கப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதலைக்குப்பின் இந்தியா , ஐந்தாண்டுத், வரலாறு, இந்தியா, திட்டம், ஆண்டுகளில், இந்திய, உற்பத்தி, வேளாண், மக்களின், மக்கள், பொருளாதார, விடுதலைக்குப்பின், உணவு, தொகை, பசுமைப்புரட்சி, தொழில், நான்காவது, திட்டத்தின், தேவைகளை, உணவுப்