முந்தைய இடைக்கால இந்தியா
சிந்துவை அராபியர் கைப்பற்றுதல் (கி.பி. 712)
அரேபியாவிலுள்ள மெக்கா நகரில் பிறந்தது இஸ்லாம். நிறுவியவர் முகமது நபி. ஆனால், மெக்கா நகரைச் சேர்ந்த செல்வந்தர்கள் அவரது போதனைகளை எதிர்த்தனர். எனவே, அவர் கி.பி. 622 ஆம் ஆண்டு மெதினாவுக்குச் சென்றார். அந்த ஆண்டிலிருந்துதான் முஸ்லிம் சகாப்தமான ஹிஜிரா தொடங்குகிறது. முஸ்லிம் நாட்காட்டியும் தொடங்குகிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முகமது நபி தனது சீடர்களுடன் மெக்காவிற்குத் திரும்பினார். கி.பி. 632ல் அவர் மறைந்தார்.
முகமது பின் காசிம் & அவரது படைகள் |
இருப்பினும், சிந்து அராபியரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. மேற்கிந்தியாவில் வலிமையான பிரதிஹார அரசு ஆட்சி செய்து வந்தமையால் முஸ்லிம்களினால் இந்தியாவிற்குள் தங்களது ஆதிக்கத்தை விரிவு படுத்தமுடியவில்லை. அராபியர் சிந்துவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உடனடியாக முஸ்லிம் படையெடுப்புகள் ஏதும் நடைபெறவில்லை. எனினும் இந்தியப் பண்பாடு மேலை நாடுகளில் பரவுவதற்கு அது வழி வகுத்தது. பல அராபியப் பயணிகள் சிந்துவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் மூலமாக இந்திய எண் முறை ஐரோப்பாவிற்கு சென்றது. அராபியப் பேரரசின் ஒரு பகுதியாக சிந்து விளங்கியதால், இந்தியாவின் அறிவுத் தொகுதி வெளிநாடுகளுக்கு வேகமாகப் பரவியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முந்தைய இடைக்கால இந்தியா , வரலாறு, இந்திய, இந்தியா, முகமது, காசிம், முஸ்லிம், முந்தைய, சிந்து, இடைக்கால, அரசின், தங்களது, படையெடுப்புகள், ஏதும், அராபியப், சிந்துவில், தொடர்ந்து, இருப்பினும், அவர், எதிராக, மேலும், இந்தியாவின், அராபியர், மெக்கா, தொடங்குகிறது, ஆண்டு, அவரது, பின்