முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » தமிழர்கள் அறிவியல் பூர்வமாக வாழ வேண்டும்
பொதுவான கட்டுரைகள் - தமிழர்கள் அறிவியல் பூர்வமாக வாழ வேண்டும்
- முத்தையா வெள்ளையன்
ஒரு சாதரணக் குடும்பத்தில் பிறந்து, கல்விகற்று, நல்ல வேலைக்குச் சென்று பொருளீட்டி, குடும்பத்தை நடத்திச் செல்வது என்பது சராசரி மனிதனின் கனவு. ஆம்! அந்தக் கனவு நனவானது. ஆனால் ஒரு சராசரி மனிதனுடைய வாழ்க்கையில் சிங்கள இன வெறி அரசியல் பாடாய்ப்படுத்தி, வாழ்க்கையைத் தலை கீழாகப் புரட்டிப்போட்டு எதிர்காலமே கேள்விக் குறியாய்ப் போனது. அதுவே தமிழ் ஈழ விடுதலைக்கு அமைதி வழியில் போராடவும் தூண்டியது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் நீண்ட நெடிய தொடர்பு உடையவர். அந்த அற்புத மனிதர் தான் டேவிட் அய்யா. டேவிட் அய்யாவுக்கு இபோது வயது 80. இந்த வயதிலும் குறிக்கோளுடன், வைராக்கியத்தோடும் ஒரு ஓலைக் குடிசையில் வாழ்ந்துவருகிறார்.
ப: நான் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்திற்குத் தெற்கே 20 கி.மீ. தொலைவில் ஊர்க்காவல்துறை என்ற பகுதிக்கு அ ருகே கரம்பன் குறிச்சிதான் எனது சொந்து ஊர். எனக்கு இரண்டு அண்ணன்கள்; தம்பி ஒருவர்; தங்கை இருவர்.
கே: உங்கள் படிப்பு.......
ப: பொருளாதார ரீதியில் மறுக்கப்பட்ட கல்வி, அப்போது கிறித்துவ மத நிறுவனங்களால் கல்வி கொடுக்கப்பட்டது. அதுதான் எங்களுக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பு. அதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டோம்.
கே: தனிநாயக அடிகளாரும் உங்கள் ஊர்தானே...... அவரைப்பற்றி சொல்லுங்களேன்.......
ப: அவருடைய தகப்பன் நெடுந்தீவைச் சேர்ந்தவர். தாயார் கரம்பன் ஊர்க்காரர். அவர் குருமடத்தில் சேர்ந்து, பிற்காலத்தில் ரோம் நகர் எல்லாம் சென்று, தமிழகம் வந்து முறைப்படி ஆசிரியர்களிடம் தமிழ் அறிவு பெற்றார். தமிழில் புலமை பெற்றுப் பல அரிய தகவல்களை எழுதியவர். தமிழை உலகமெங்கும் கொண்டு சென்ற, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கியவர். பல பல்கலைக்கழக நிறுவனங்களில் பேராசிரியராக இருந்தவர். தமிழீழத்தில் தமிழ் உணர்ச்சிக்கு வித்திட்டவர்.
கே: ஈழப் போராட்டத்தை நோக்கி உங்களை நகர்த்திச் சென்ற சம்பவம் ஏது?
ப: நான் அப்போது (1947ஆம் ஆண்டு 23 வயது) கொழும்பில் உள்ள அரசு பொதுப்பணித்துரை அலுவலகத்தில் கட்டட வரைபடக் கரைஞராக வேலை பார்த்து வந்தேன். ஒரு நாள் சட்டப்பேரவை (State of Council) நடைபெறும் இடத்திற்குப் பார்க்கச் சென்றேன். தந்தை செல்வா பேசிக்கொண்டிருந்தார். அப்போது தலைமை அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயகாவைப் பார்த்து தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றுவதை உடனடியாக நிறுத்துங்கள். இல்லை என்றால் எதிர்காலத்தில் இந்தக் குடியேற்றங்களில் இரத்த ஆறு ஓடும் என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிங்களர்கள் தங்களுக்கே உரித்தான முறையில் மேஜைகளின் மீது ஓங்கி அடித்து, பகடி செய்து அவமானப்படுத்தினர். இனிமேல் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது என முடிவு செய்தேன்.
கே: நீங்கள் நாடு, நகர வடிவமைப்புப் பற்றிய படிப்பு படித்தீர்களா?
ப: ஆம். எனக்கு அந்தப் படிப்பு லண்டனில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. என் சொந்த முயற்சியிலே படித்தேன். அதில் பூகோளம், சமூகவியல், பொருளாதாரம், கலாச்சாரம், போன்றவற்றை உள்ளடக்கியது. மேலும் மிகவும் விரிவாகவும், ஆழமான விடயம். எனக்குப் பல்கலைக் கழகத்தில் பாடம் சொல்லித் தந்தவர் பேராசிரியர் ஜோசப் போங். இவர் ஆங்கில சிற்ப நுணுக்கம் பற்றி விரிவுரை எழுதுபவர். இவரிடம்தான் நான் கட்டடகலையைப் பற்றிப் படித்தேன். நான் உலகெலாம் சென்ற நுண்கலை கூடங்களைப் பார்க்க, புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. இவர்தாம் என் கல்விக்கு வழிகாட்டி.....
கே: நீங்கள் சில காலம் கென்யா நாட்டில் நகர அமைப்பு அதிகாரியாக இருந்தீர்கள்........
ப: ஆமாம் இருந்தேன். நிறைய கனவுகளுடன் அந்த நாட்டிற்குச் சென்றேன். முகமதியர்கள், வெள்ளைக்காரர்கள் தனித்தனியாகவும் இருந்தார்கள். ஆப்பிரிக்கா மக்கள் சேரிகளில் வாழ்ந்துவந்தார்கள். ஆனால், என்னால் பெரிதாக ஏதும் சாதிக்க முடியவில்லை அப்போது அவர்களிடம் பணமும் இல்லை. என்றும் போல் அங்கு அரசியல் விட்டுக்கொடுக்காதத் தன்மையும் இருந்தது. நாங்கள் போக்குவரத்துக்கான வசதிகளை மட்டுமே செய்ய முடிந்தது.
கே: ஒரு நாட்டின் தலைவர்கள் சிலையை நிறுவுகிறார்கள். அது சரியான நிலைப்பாடா?
ப: தலைவர்களின் சிலையையோ, நினைவுச் சின்னங்களோ நிறுவுவது என்பது சரியானதுதான். உளவியல் ரீதியாக, அது மனிதனைத் தேசிய வாதத்துக்கு இட்டுச் செல்லும். அதே சமயத்தில் வழிபாடுகளாக மாறும் துரதிஷ்டமும் இருக்கிறது. இதை நான் அமெரிக்காவில் உள்ள கென்னடி, அபிரகாம் லிங்கன், சிலைகளைப் பார்த்தபோது உணர்ந்து கொண்டேன். அரசியல்வாதிகள் அல்லாத பெரிய அறிவாளிகள். விஞ்ஞானிகள், இசை நடன விற்பன்னர்கள், சிற்பிகள் எல்லோரும் சிலைகள் எழுப்ப வேண்டும். இதற்கு சரியான (உ-ம்) பிரான்சு தேசம் என்று சொல்லலாம்.
கே: கட்டடக் கலைகள் பற்றிப் பொதுவாகச் சொல்லுங்களேன்.
ப: பாபிலோனியா, கிரேக்க, ரோமன் பின் பிரித்தானிய கலைகள், ஜெர்மன் ,பிரான்சு என்று தனித்தன்மை கட்டட கலைகள் உண்டு. இதில் கி.பி. 1300இல் அய்ரோப்பியா கட்டட கலைத் தோன்றிற்று. அதை அடுத்த விஞ்ஞான வளர்ச்சியில் நவீன கட்டக் கலை தோன்றிற்று. தமிழகக் கட்டடக் கலை என்று உண்டு ஆனால அது வளரவில்லை.
கே: நீங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றைத் திரிகோணமலையில் நிறுவினீர்கள்.........
ப: இல்லை. தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திரிகோணமலையில் நிறுவ வேண்டும் என்று முடிவு செய்தவர் தந்தை செல்வா. அவர் தீர்க்கதரிசி. தொலை நோக்குடன் இம் முடிவை எடுத்தார். ஆனால், தமிழர்கள் தம் சொந்த நலன்களுக்காக இந்தக் குறிக்கோளைக் கோட்டை விட்டுவிட்டனர். திரிகோணமலைப் பல்கலைக் கழக அமைப்பில் நான் அங்கத்தவன். அந்தப் பல்கலைக் கழகத்துக்கு 1953-ல் கட்டட வரைபடம் வரைந்தவன் நான். கட்டடக் கலைஞனாய் நான் செய்த பணியில் சிறந்த படைப்பு இது. ஆனால், அடிக்கல் நாட்டினதோடு கைவிடப்பட்டது.
1970இல் நான் வெளிநாட்டில் இருந்து வந்தபோது இப்பணி பாழ்பட்டுக் கிடந்தது. மனம் பொறுக்க முடியாமல் என் சொந்த செலவில் மீட்டெடுக்க முயற்சித்தேன். ஈழத் தமிழர்களும் உதவவில்லை. நான் என்னுடைய சொந்தப் பணத்தையும் இழந்தேன்.
இப்போது திரிகோணமலை சிங்களர் வசமாகி உள்ளது. இந்த இழப்புக்கு ஈழத்தமிழர்கள் இரத்தக் கண்ணீர் சிந்த வேண்டும்.
மேலும் திரிகோணமலை - மிகமிகப் பழங்காலத் தமிழர்கள் வழிவழியாக வாழ்ந்த பூமி. இலங்கையின் கிழக்குக் கடற்கரை வடபகுதியில் அமைந்த நகரம். சமயக் குரவர்கள் வந்து, தங்கிப் பாடல் பாடிய நகரம். இவர்கள் வந்தாலும், தமிழினத்தின் வாழ்வியலோடு வாழ்ந்த நகரம் அது. அந்தப் பல்கலைக்கழகம் வந்து இருந்தால் வடக்கு கிழக்கு பிரச்சினையும் வந்திருக்காது. இந்தப் பிரிவினை என்ற பேச்சையே தடுத்து இருக்கலாம். ஈழத் தமிழர்களும் திரிகோணமலையில் பெருமளவில் குடியேறி இருக்கலாம்.
கே: நீங்கள் ஜாஸ் இசைப் பிரியராமே?
ப: ஜாஸ் மட்டுமன்று. தமிழ், இசை, கர்நாடக இசை போன்ற இசையும், சித்திரமும் சிறு வயதிலிருந்தே என்னால் பிரித்துப் பாக்க முடியாதவையாக இருந்தன. ஆப்பிரிக்க இசையில் மூழ்கியவர்கள் எம்மைவிட அதிக உணர்ச்சி வயப்படுவதாக இருந்தார்கள். அந்த ஜாஸ் இசையில் மனிதனின் உள்ளார்ந்த சோகங்கள் உச்ச ஸ்தாயில் இருக்கும். இப்போது எல்லாம் மாறிவிட்டன. ஆப்பிரிக்ககாரர்களைத் தமிழர்களோடு ஒப்பிடும்போது தமிழர்கள் வாழத்தெரியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும். தமிழர்கள் பணத்தோடு வாழ்க்கையைப் பணயம் வைத்தவர்கள் என்று தோன்றுகிறது.
பிள்ளைகளைச் சிறு வயதிலிருந்தே இசை, நடனம், சிற்பம். இலக்கியம் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்து, குறிக்கோளை நோக்கி அவர்களைப் பயணப்பட வைக்கவேண்டும். தமிழனின் கலை, இசை எல்லாம் சீரழிந்துவிட்டன. மீண்டும் உலகில் உயரிய நிலையை அடைய வேண்டும்.
கே: உங்கள் கூட்டுப்பண்ணை பற்றிக் கூறுங்களேன்......
ப: நான் இசுரேல் நாட்டில் பயணம் செய்தபோது கூட்டுப் பண்ணைத் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டேன்.
இட்லரால் யூத இனம் அழிக்கப்பட்டது. அவரால் யூதர்களை நாடற்றவர்களாக்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1949இல் இசுரேல் உதயமானது. பாலஸ்தீனத்துக்கும் இசுரேலுக்கும் பிரச்சினை இருந்தாலும் நான் பாஸ்தீனத்துக்கு ஆதரவாகவே இருக்கிறேன், என்றாலும் இசுரேலியர்களின் நாடு கிடைத்த பிறகு இருக்கிற உழைப்பு போற்றப்படவேண்டியதாகும். அங்கு கிபுட்ஸ் என்ற கூட்டுப் பண்ணையைப் பார்த்தேன்.
கே: அதை அப்படியே இலங்கையில் அமுல் படுத்தினீர்களா?
ப: 1971இல் அதைத் தொடங்கினேன். ஆனால் அந்தத் திட்டம் தோற்றுப்போனது. ஏனெனில் தமிழர்களிடம் பொதுத்தொண்டு, அர்ப்பணிப்பு போன்றவை அந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்களுக்கு இல்லாமற் போனது.
கே: பிறகு?
ப: எங்களுடைய மண்ணுக்கேற்றவாறு டாக்டர் இராசு. சுந்தரமும், நானும் 1976இல் சாந்திய இயக்கம் தொடங்கினோம். அப்போது எனக்கு வயது 52. இராசு சுந்தரத்துக்கு வயது 32. அவர் டாக்டர். வவுனியாவில் அலுவலகத்தை அமைத்து நடத்தி வந்தோம். கிராமங்களிலிருந்து 600 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் சமுதாயத் தொண்டு செய்ய அனுப்பப்பட்டனர். 1977, 1981, 1933 ஆகிய ஆண்டுகளில் நடந்த இனக் கலவரங்களில் அகதிகளாக்கப்பட்ட தமிழர்களை ஒருங்கிணைத்து (சுமார் 25000 குடும்பங்கள்) அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துப் புறம்போக்கு நிலங்களைப் பிரித்துக் கொடுத்தோம். அந்த நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்தார்கள். அவர்களுடைய குழந்தைகளைப் பாதுகாக்க 500 பாலர் பாட சாலைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பாடசாலையிலும் 30 சிறுவர் - சிறுமியர் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் பயறு, உளுந்து, சோளம் முதலான தானியங்களை விளைவித்தனர். அந்த விளைபொருள்களைக் கூட்டுறவு முறையில் பொதுச் சந்தையில் விற்கப்பட்டன. அந்தக் குடும்பங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்தி, வருவாயில் மிச்சம் ஏற்படுத்த நியாயவிலைக் கடைகளும் அமைக்கப்பட்டன. ஓய்வு நேரங்களில் காந்தியச் சிந்தனைகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டன. சிங்கள அரசு வேரோடு அழித்துவிட்டது.
கே: உங்கள் சிறை வாழ்க்கை பற்றி......
ப: நாங்கள் கூட்டுப் பண்ணைத் திட்டத்தில் ஈடுபட்டபோது ஜெர்மானியில் உள்ள ஜி..டி. இசட் என்ற பொது நல நிறுவனத்தில் நிதி உதவி பெற்று வந்தோம். அது ஒரு ஆயுதமேந்தா முறையில் ஈழ விடுதலைக்கு வழி கோலியது. இது சிங்கள ஆட்சியரைத் திகைக்க வைத்தது. காந்திய இயக்கத்தை ஒடுக்க நினைத்து என்னைக் கொழும்புவிலும், டாக்டர் இராசு. சுந்தரத்தை வவுனியாவிலும் கைது செய்தது. எங்களைக் கைது செய்து பனாகொடா இராணுவ முகாமுக்குக் கொண்டு சென்றனர். அங்கு மிகுந்த சித்திரவதை செய்து வெளிக்கடைச் சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர். அந்த சிறையில் இருந்த சிங்களர்கள் எங்களைத் தாக்கினார்கள். அந்தத் தாக்குதலில் டாக்டர். இராசு. சுந்தரம் கொல்லப்பட்டார். பிறகு என்னை மட்டக்களப்புச் சிறைக்குக் கெண்டு சென்றனர். எங்களைக் கைது செய்தததோடு ஈழத்தில் காந்தி இயக்கம் முற்றுப்பெற்றது.
கே: சாத்வீமாகப் போராட வேண்டும் என்ற மன வலிமையோடு இருந்த நீங்கள், சிறை உடைக்கும் நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
ப: சாத்வீகம் மனித சமுதாயத்தில்தான் சாதிக்க முடியும். ஆனால், கேடு கெட்ட சிங்களர்கள் மிருகங்களைவிட மோசமானவர்கள். சிங்களர்களை எதிர்க்க ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை. இன்று நடந்துகொண்டு இருக்கும் தமிழீழப் போராட்டம் இதற்கு மறுக்க முடியாத சான்று. இதற்காகவே தந்தை செல்வா இறக்கு முன் தமிழர்கள் சிங்கள ஆட்சியிலிருந்து விடுபட வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும் என்று கூறினார்.
கே: சிறை உடைப்பை எப்படி மேற்கொண்டீர்கள்?
ப: அப்போது தமிழர்களுக்கென்று மகரமகா என்னும் ஊரில் மிகப் பெரிய சிறைச்சாலை ஒன்று கட்டப்படுவதாகச் செய்திகள் வந்தன. அந்தச் சிறையில் இருபது ஆண்டுகள் அடைக்கப்படுவோம் என்ற செய்தி எங்களின் விடுதலை பற்றிய கனவுகள் கானல் நீராகிவிடும். அதற்கு ஒரே வழி சிறை உடைப்புதான் என்று முடிவு செய்து (கட்டடம் கட்டத் தெரிந்தவனுக்கு உடைக்கவும் தெரியும் என்று முடிவு செய்து) எல்லா இயக்கங்களிடமும் ஆலோசனை செய்வது மட்டக்களப்புச் சிறைக்கு வெளியே அம்மன் கோவில் திருவிழாவின் போது சிறையை உடைத்து அனைவரும் தப்பினோம்.
அப்போது அரசியல் கைதிகளோடு சேர்ந்து திருடர்களும் தப்பினார்கள். எல்லோரும் வெளியில் இருந்த வேன்களில் ஏறித் தப்பினர் என்னால் முடியவில்லை. என்னையும் விட்டுவிட்டுச் சென்றார்கள். பிறகு சாலையோரத்தில் நின்று இருந்த 12, 14 வயதுள்ள இரு சிறுவர்கள் உப்பங்கழியில் உள்ள சிறு தோணியில் ஏற்றி எருமைத் தீவுக்கு கொண்டு போய்ச் சேர்த்தனர். அங்குள்ள தேவாலயத்தில் இருந்த ஜெர்மன் பாதிரியார் மூலம் திரிகோணமலைக்கு வந்து நான்கு நாள்கள் கழித்து இந்தியாவுக்குத் தப்பி வந்தேன்.
கே: நீங்கள் இந்தியா வந்த பிறகு தீவிரவாத இயக்கத்தில் பணிபுரிந்தீர்கள்......
ப: ஆம். தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டுவது, பத்திரிகைகளில் எழுதுவது, பொடியன்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பது முகாம்களை ஒருங்கிணைப்பது என்று செயற்பட்டுக் கொண்டிருநதேன். நிறைய கசப்பான சம்பவங்கள் நடைபெற்றது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த இயக்கத்தை விட்டு வெளியேறினேன். ஆனால் அவர்கள் என்னைக் கொல்லத் தேடிக்கொண்டு இருந்தார்கள். நான் சில காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தேன். .இப்போது என்றாவது ஒரு நாள் எம் மக்கள் கௌரவத்தோடும், சமாதானத்தோடும் வாழ வேண்டிய நாள் வரும் என நம்பிக்கையோடு நாள்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறேன்.
கே: வடக்கு - கிழக்கு பிரச்சினைகளைப் பற்றி....
ப: இந்தப் பிரச்சினை இன்று நேற்று தொடங்கியது அன்று இது 12-ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு தோன்றியக் காலத்திலிருந்த் கண்டிச் சிங்களவர்கள் கையாண்ட தந்திரம். கண்டிச் சிங்களவர்களும், கன்னட, தெலுங்கு நாயக்கர் வழித் தோன்றல்கள் சிறிமாவோ, உத்திரிச நாயக்கர் வகுப்பினரும் நெருங்கிய வழித் தோன்றல்கள். 17-ம் நூற்றாண்டில் நாயக்கர்கள் கண்டியில் ஆட்சி செய்தனர். அந்த நேரத்தில் கண்டியில் நாயக்கர் தலைவர் பெயர் கோமிஸ்வா. சிறிமாவோவின் மாமனாரும் ஆட்சி செய்த நாயக்கர் மிகவும் நெருக்கம். இப்படித்தான் சிங்களத் தந்திரம் தொடங்கிய வரலாறு. அந்தத் தந்திரம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் கருணா - பிரபாகரனை வெல்லுவது என்பது முடியாத விடயம் - இந்திய ''ரா'' பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. இந்த மாதிரி நேரங்களில் தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கே: தமிழகம் வந்த பிறகு பெரியார் இயங்கங்களோடு உங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது.....பெரியார் பற்றிய பங்களிப்பு..... பெரியார் இயக்கங்களைப்பற்றி.....
ப: நான் தமிழ் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். எனக்கு 15 வருடங்களாகத் தோழர் ஆனைமுத்துவுடன் நெருங்கிப் பழகிவருகிறேன். சுருக்கமாகப் பெரியார் என்ற மாமனிதருடைத் தத்துவம், அறிவியல் வழியோடு மனித நேயம் வளர்க்கப்படுகிறது. இந்தப் பூவுலகையே சொர்க்கமாகும் கடவுள் சொர்க்கம், நரகம் எல்லாம் தேவையில்லை என்றார். பெரியார் வாரிசுகளே பெரியார் தத்துவத்தைச் சீரழித்து விட்டனர். தோழர் ஆனைமுத்து மட்டும் பெரியார் தத்துவத்தைக் காப்பாற்றிவருகிறார். பெரியார் தத்துவத்திற்குப் புத்துணர்வு ஊட்டி வளர்க்க வேண்டும்.
கே: கிபுட்ஸ் இயக்கம் தமிழ்நாட்டில் தொடங்கி இருக்கிறீர்களா?
ப: இல்லை. ஒரு சில பொடியன்கள் இதைப் பற்றிக் கதைத்து இருக்கிறார்கள். கிபுட்ஸ் மா‘க்சீயத்துக்கு முன்னோடி. யேசு கிறிஸ்துவின் பொதுவுடைமைத் தத்துவத்தில் வேரூன்றி நிற்கிறது. இதைத் தமிழ்நட்டில் வளர்த்து எடுப்பது சுலபமான விடயமில்லை. அதுவும் சினிமாக்களில் மூழ்கியிருக்கும் தமிழர்களை மீட்டெடுப்பது பிரயத்தனமான ஒன்ற.
கே: ஒரு விடுதலைப் போராட்டத்தில் பொதுவாகவே இரண்டு வழி முறைகள் உண்டு. அகிம்சைப் போராட்டமும், தீவிரவாதப் போராட்டமும் உள்ளது. இதில் இரண்டிலுமே நீங்கள் ஈடுபட்டு இருக்கிறீர்கள். இவற்றில் எது சாத்தியம்? எது சரியானது.....(மற்ற நாட்டு அனுபவங்களை எடுத்துக் கொண்டு)
ப: உண்மையான மனித உணர்வு உள்ள சமுதாயத்தில் அகிம்சை வழி இங்குப் பாவிக்க வாய்ப்பு உண்டு. மனித உணர்வு இல்லாத கேடு கெட்ட சிங்கள மிருகடங்ளுடன் அகிம்சை வழி மடத்தனம். அதற்கு இலங்கைக் காந்தி இயக்கமே சாட்சி. மிருகங்களுடன் போராட ஆயுதப் போராட்டமே அவசியம். இதுவே பிரபாகரன் செய்த பெரும் பணி. 18 முதல் 45 வயதுள்ள தமிழீழ ஆண் பெண் ஆயுதப் பயிற்சி பெற்றுப் போராடுவது அவசியம்.
இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் சிங்களரின் தந்திரத்தால் தமிழீழத்திற்கு உதவி செய்வதில்லை. இந்த கேவலமான நிலையில்தான் தமிழீழ மக்களின் நிலை உள்ளது. இன்றைய சூழலில் தமிழகம் மட்டுமே உடனடியாக உதவி செய்ய முடியும் அய்க்கியக் கூட்டணியில் நடுவண் அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அமெரிக்காவும், தன்னுடைய நிலையை மறு பரீசிலனை செய்ய வேண்டும்.
வெளிநாடுகள் உதவிவிட்டால் நாளைக்கே தமிழீழப் போராட்டம் முடிவுக்கு வரும். விடுதலைப் போராட்டத் தொடக்கத்தில் இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று பிரபாகரன் கூறியதை நினைவு கூர்வது நல்லது
கே: உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?
ப: உலகத் தமிழ்ப் பேரவையின் மூலம் தமிழர்கள் மத்தியில் பெரியார் கருத்துகளைப் பரப்பித், தமிழர்களை அறிவியல் பூர்வமாகத் தமிழர்கள் வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கான செயற்பாடுகளில் இறங்குவதே எதிர்காலத்திட்டம்.
நன்றி: புரட்சிப் பாதை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழர்கள் அறிவியல் பூர்வமாக வாழ வேண்டும் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நான், வேண்டும், அந்த, பெரியார், தமிழர்கள், உள்ள, பிறகு, அப்போது, நீங்கள், இருந்த, கொண்டு, தமிழ், சிங்கள, செய்து, உங்கள், வயது, இராசு, சிங்களர்கள், நாயக்கர், இல்லை, முடிவு, டாக்டர், அரசியல், கட்டட, எல்லாம், மனித, எனக்கு, செய்ய, வந்து, சிறை, பல்கலைக், உண்டு, சிறு, ஜாஸ், இந்தப், இப்போது, உள்ளது, பற்றிக், நகரம், இயக்கம், உதவி, கைது, சென்றனர், தந்திரம், தமிழர்களை, செய்த, திட்டம், கிபுட்ஸ், அந்தத், கூட்டுப், பற்றி, அரசு, சென்ற, நாள், தந்தை, செல்வா, தமிழகம், அவர், விடுதலைப், படிப்பு, வாய்ப்பு, நாங்கள், முறையில், பற்றிய, அங்கு, கட்டடக், கலைகள், தமிழ்ப், என்னால், இருந்தார்கள், அந்தப், சொந்த, என்பது, நாட்டில், திரிகோணமலையில்