முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » உயர்ந்து கொண்டே போகிறது இரும்பு விலை
பொருளாதாரக் கட்டுரைகள் - உயர்ந்து கொண்டே போகிறது இரும்பு விலை
உலக அளவில் பொரளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் ஒரு விஷயமாக இரும்பு உற்பத்தி உள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றன. தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் பல்வேறு இரும்பு தயாரிப்புக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. அயர்ன் ஓர், பிக் அயர்ன், ஸ்பான்ச் அயர்ன், ஹாட் ரோல்டு காயல்ஸ், கோல்டு ரோல்டு காயல்ஸ், கால்வனைஸ்டு சீட்ஸ், லாங் புராடக்ட்ஸ், அலாய் ஸ்டீல் என பல பரிமாணங்களை கொண்டதாக இரும்பு பொருட்கள் உள்ளன.
உலக அளவில் இரும்பு தாது உற்பத்தியில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. இந்திய இரும்பு உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. இந்திய இரும்பு உற்பத்தி என்பது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. நாட்டின் முதல் இரும்பு தயாரிப்பு தொழிற்சாலையான டாடா தொழிற்சாலை கடந்த 1970ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட நூறு ஆண்டு காலமாக இரும்புத் தொழில் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சியின் பயனாக உலகில் இரும்பு உற்பத்தி செய்யும் பெரிய நாடுகளில் இந்தியா 10வது இடளத்தில் உள்ளது. ''செயில்'' என அழைக்கப்படும். ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, டாடா அயர்ன் லிமிடெட், ராஷ்ட்ரீய இஸ்பத்நிகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாக விளங்குகின்றன.
இவற்றில் ''செயில்'' மற்றும் ''டாடா ஸ்டீல் '' ஆகிய இரு நிறுவனங்களும் உலக அளவில் இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பட்டியலில் 80வது இடத்தில் உள்ளன. கிட்டத்தட்ட உள்நாட்டு இரும்புத் தேவையை இந்த இரு நிறுவனங்களும் சரி செய்கின்றன. இந்திய இரும்பு தொழிற்சாலைகள் ஆண்டு ஒன்றுக்கு 29.5 மில்லியன் டன் எடையுள்ள சீர்ப்படுத்தப்பட்ட இரும்புகளை தயார் செய்கின்றன. ஆனால் கடந்த சிலஆண்டுகளாக இந்திய இரும்புத் தொழிற்சாலைகள் தள்ளாடுகின்றன. குறைவான விலையில் இரும்பு பொருட்கள் இறக்குமதி, ஒட்டு மொத்த பொரளாதார சரிவு, திடீர் விலை மாற்றம் உள்ளிட்ட பல அம்சங்கள் இதற்கு காரணம். இரும்புக்கான விலை கட்டுப்பாடு என்பது கடந்த 1992ம் ஆண்டில் அகற்றப்பட்டுவிட்டது. இதனால் பலநேரங்களில் இரும்பு விலை உச்சத்திற்கு சென்று விடுகிறது. இப்போதுள்ள நிலையில் இரும்பு இறக்குமதி என்பது தாராளமாக்கப்பட்டுவிட்டது. மேலும். இறக்குமதி உரிமம் வழங்குவது, இறக்குமதி வரி உள்ளிட்ட விஷயங்களும் தாராளமாக்கப்பட்டு விட்டன. குறிப்பாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான வரிகள் அதிரடியாக குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் இப்போது ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் என்ற அளவில் வெளிநாடுகளில் இருந்து இரும்பு இறக்குமதியாகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இரும்பு இறக்குமதி என்பது அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான அளவில் அது இருப்பு வைக்கப்படுகிறது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் இரும்பு விலை ஒரு நிலையில்லாத ஒன்றாகவே காணப்படுகிறது.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் இரும்பு உற்பத்தியின் பங்கு மிக அதிகம். புதிய தொழில் கொள்கையின்படி தனியார் நிறுவனங்களும் இரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதால் நாட்டின் உற்பத்தி பெருக்கம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை அதிகரித்துள்ளன. ஒட்டு மொத்த கார்கள் ஸ்டீல் உற்பத்தி கடந்த 1991-92 ஆண்டில் 14.33 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால், அதுவே 2001-02 ஆண்டில் 30.11 மில்லியன் டன்னாக அதிகரித்தது. இந்த வகையில் அந்த பத்தாண்டுகளில் இரும்பு உற்பத்தி என்பது 110.12 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனமான செயில், அதிகபட்சமாக 9.7 மில்லியன் டன் இரும்பு பொருட்களை உற்பத்தி செய்துள்ளது. அவற்றில் 8.5 மில்லியன் டன் எடையளவில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இரும்பு உற்பத்தி அதிகரிப்பில் 2001ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டால் அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் 3.5 சதவிகித அதிகரிப்பு என்ற அளவில் ஒட்டு மொத்த உற்பத்தியில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டது. இருப்பினும் நிலையில்லாத விலை காரணமாக இரும்பு பொருட்களின் விலைகள் சாதாரண மக்களை பாதிக்கின்றன. ஒவ்வொரு முறையும் இரும்பு விலை உயரும்போது உள்நாட்டு உபயோகிப்பாளர்கள் அவதிப்பட வேண்டியுள்ளது. ஒரு புறம் உள்நாட்டு உற்பத்தி அதிகமாக இருக்கிறது. மறுபுறம், இறக்குமதிக்கான விதிகளும் தளர்த்தப்பட்டு, அதிகமான அளவில் இரும்பு இறக்குமதி ஆகிறது. இருப்பினும் உள்நாட்டு இரும்பு விலை உச்சத்திற்கு போவதன் மர்மம் குறித்து சென்னையின் மிகப் பெரிய இரும்பு வியாபாரியை கேட்ட போது, ''இந்தியா அதிகமான இரும்பு தாது வளத்தை கொண்டுள்ளது. ஒரு கால கட்டத்தில் இங்கிருந்து ஜப்பான் போன்ற நாடுகள் இரும்பு தாதுவை விலை கொடுத்து வாங்கி அவற்றை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தகடுகளாக மாற்றி, 20 மடங்க கூடுதல் விலைக்கு மீண்டும் இந்தியாவிற்கே அனுப்பி வந்தன. அந்த நிலை இப்போது மாறிவிட்டது. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இரும்பு தாதுக்கள் இங்கேயே பல பரிமாணங்களில் உற்பத்தியாகிறன.
இதனால் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இறக்குமதியும் அதிகமாகியுள்ளது. இருப்பினும் இரும்பு பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே போகின்றன. ஒரு கணக்கெடுத்து பார்த்தால், கடந்த லோக்சபா தேர்தலின் போது ஏறிய இரும்பு விலை இறங்கவே இல்லை. நிலையாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்னர் ஒரு டன் இரும்பு 20 ஆயிரம் ரூபாய் அளவில் இருந்தது. என்றால் இப்போதைய விலை 28 ஆயிரமாக உள்ளது. இதனால் கட்டுமான செலவு அதிகரிப்பு, இரும்பை மூலப் பொருட்களாக கொண்டு தயாரிக்கப்படும் சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவை பொது மக்களை பாதிக்கின்றன. இந்த மறைமுக விலை உயர்வுக்கு இரண்டு காரணங்களை கூறலாம். ஒன்று மொத்த விநியோகஸ்தர்கள் தங்களுக்கு கூடுதல் லாபம் வேண்டும் என கருதி அதிகமான ஸ்டாக் வைத்துள்ளனர். இது ஒரு காரணம். மற்றொரு காரணம், தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி தராதது. உலக அளவில் தென்கொரியாவில்தான் இரும்பு விலை குறைவாக உள்ளது. அங்கிருந்து இறக்கமதி செய்யப்பட்டால் உள்நாட்டில் இரும்பு விலை நிச்சயமாக குறையும். ஆனால், ஒரு சில முட்டுக்கட்டைகளால் இன்றைய தேதி வரை தென்கொரியாவில் இருந்து இரும்பு இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கவில்லை. இவைதான் இன்றைய இரும்புவிலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என்றார்.
நன்றி: தினமலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயர்ந்து கொண்டே போகிறது இரும்பு விலை - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - இரும்பு, விலை, உற்பத்தி, இறக்குமதி, அளவில், மில்லியன், என்பது, கடந்த, உள்ளது, நிறுவனங்களும், இந்திய, உள்நாட்டு, தொழில், இதனால், உற்பத்தியில், ஆண்டில், இருப்பினும், இருந்து, காரணம், மொத்த, இரும்புத், ஸ்டீல், இந்தியா, அயர்ன், ஆண்டு, பெரிய, அதிகமான, மிகப், ஆகிய, அந்த, பொருட்கள், உள்ளிட்ட, செய்யும், தொழிற்சாலைகள், ஒட்டு, டாடா, கிட்டத்தட்ட, செயில்