முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » போலீசார் நடத்திய தடியடி தவறானது - விசாரணைகமிஷன்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - போலீசார் நடத்திய தடியடி தவறானது - விசாரணைகமிஷன்
"மேலூரில் கல்லூரிக்குள் சென்று மாணவர்களை போலீசார் அடித்தது சரியல்ல. இந்த சம்பவத்தில் போலீசாரே தவறு இழைத்துள்ளனர்" என்று, விசாரணை கமிஷன் நீதிபதி கே. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
போராட்டம்
தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு கலைக்கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதற்கான செயற் குறிப்பை அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். மாணவர்களும் தங்களை இந்த போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டனர்.
இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ந் தேதி அன்று மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் கடும் மோதலை ஏற்படுத்தியது. இதில் சில மாணவர்களும், காவல்துறையைச் சேர்ந்தவர்களும் காயம் அடைந்தனர்.
விசாரணை கமிஷன்
இதுதொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே. சுப்பிரமணியன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமி ஷன் தன் விசாரணை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய் தது. இது நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
நியாயம் அல்ல
மேலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3.9.2002 அன்று தங்களுடைய வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, மதுரை திருச்சி சாலையில் கல்லூரியின் முதன்மை வாயில் அருகே குழுமியிருந்தனர். காவல்துறை ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன் பின்னர், காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே துரதிருஷ்டவசமான இம்மோதல் நிகழ்ந்தேறியது.
சம்பவத்தின் முதற்கட்டம், கல்லூரியின் வெளி வாயிலுக்கு வெளியே சாலையில் நிகழ்ந்தது. சம்பவத்தின் இரண்டாம் கட்டம், காவல்துறையினர் கல்லூரிக் கட்டிடத்தில் நுழைந்து, மாணவர்களைத் துரத்திச் சென்று, விரிவுரையாளர்களின் முன்னிலையில், கல்லூரியின் வராந்தாவின் உள்ளேயும், துறைகளின் அறைகளிலும் மிருகத்தனமாக தாக்கிய நடவடிக்கையாகும். கல்லூரிக்கு வெளியில் நடைபெற்ற தடியடிப் பிரயோகம் நியாயமானது என்று முடிவுக்கு வர வலுவான காரணங்கள் உள்ளன. ஆனால், கல்லூரிக் கட்டிடத்திற்குள் நுழைந்து, புகலிடம் தேடிஓடிய மாணவர்களைத் துரத்திச் சென்று அடித்த காவல்துறையினரின் நடத்தை நியாயமானதே அல்ல.
வழக்கு வாபஸ்
மேலூர் காவல் நிலையத்தில், மேலூர் கல்லூரி மாணவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு திரும்பப் பெறப்பட வேண்டுமென்றும், அந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கப் படக்கூடாது என்றும் ஆணையம் உறுதியாகக் கருதுகிறது.
மேலூர் காவல் நிலையத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமென்று ஆணையம் பரிந்துரை செய்கிறது. உண்மையில், சம்பவம் நடந்தவுடன் கல்லூரிக்குச் சென்று பார்வையிட்ட மதுரை வடக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அவிபிரகாஷ் சின்கா மற்றும் அப்போதைய கோட்டாட்சியர் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் காவல் துறையினர் தவறேதும் இழைத் திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் உறுதியளித்திருந்தனர். வழக்கில் இந்தச் சூழ்நிலையில், மேலூர் காவல் நிலைய வழக்கின் அடிப்படை யில் மாணவர்கள் மீது காவல் துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதைக் கைவிட ஆணை பிறப்பிக்கலாம்.
போலீசாரே தவறு இழைத்தனர்
ஆய்வு வரம்புகள் (1) மற்றும் (2) தொடர்பான சாட்சியங்களின் விவாதத்திலிருந்து மேலூர் காவல்துறை ஆய்வாளர், பாதமுத்து, மேலூர் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேஷ், கீழவளவு காவல்துறை உதவி ஆய்வாளர் ரமணி, அதிரடிப் படையைச் சேர்ந்த சிலர் குறிப்பாக காவலர் ஐயப்பராஜ், காவ லர் ராமகிருஷ்ணன், அறிவழகன் ஆகியோர் தவறிழைத்திருப்பது தெரியவருகிறது.
இந்த மூன்று காவலர்களும், தாங்கள் கல்லூரிக் கட்டிடத்தினுள் நுழைந்து மாணவர்களுக்கு எதிராக பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தியதை தங்களு டைய உறுதிமொழிப் பத்திரங்களில் ஒப்புக்கொண்டுள்ளனர். காவல்துறையினருக்கு தலைமையேற்று வந்த காவல்துறை ஆய்வாளர் பாதமுத்துவின் உத்தரவின் பேரில்தான், இந்தக் காவலர்கள் கல்லூரிக் கட்டிடத்தினுள் நுழைந்து, கல்லூரி மாணவர்களைத் தாக்கி, கல்லூரியின் சொத்துக்கள் சிலவற்றை சேதப்படுத்தினர்.
சாட்சியம்
காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் மற்றும் ரமணி ஆகியோர் கல்லூரிக் கட்டிடத் தினுள் நுழைந்து, மாணவர்களை அடித்தது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆர்.கணேச பெருமாளை பொறுத்தவரையில், அவர் சம்பவத்தின் முதற் கட்டம் நடந்து முடிந்த பின்னர் தான் சம்பவ இடத்திற்கு வந்த தாகத் தெரிவிக்கிறார். கல்லூரிக் கட்டிடத்தின் உள்ளேயிருந்த காவல்துறையினரை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதாக கல்லூரி முதல்வர் தெரிவித்த சாட்சியம் ஏற்றுக்கொள்வதாக உள்ளது.
ஆனால், காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் கல்லூரிக் கட்டிடத்தின் உள்ளேயிருந்த காவல்துறையினரை திரும்ப அழைத்துக் கொள்ள நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அல்லது உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை. இந்தச் சூழ்நிலைகளில் இவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருந் தது, அவர் தன்னுடைய கடமையைப் புறக்கணித்ததற்கு ஒப்பாகும். காவல்துறையினரைக் கல்லூரிக் கட்டிடத்தின் உள்ளேயிருந்து திரும்ப அழைத்துக் கொள்ளாததால் அந்த அளவுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளரும் சம்பவத்தின் இரண்டாம் கட்டத்திற்குப் பொறுப்பாகிறார்.
ஒழுங்கு நடவடிக்கை
இதனைக் கருத்திற்கொள்ளுமிடத்து, கல்லூரிக் கட்டிடத்தின் வெளியே நடைபெற்ற சம்பவத் தின் முதற் கட்டத்தில், காவல் துறையினரின் தரப்பில் தவறுகள் எவையும் இல்லை என்ற போதிலும், காவல்துறை ஆய்வாளர் பாதமுத்து, இரண்டு காவல் துறை உதவி ஆய்வாளர்கள், ராஜேஷ் மற்றும் ரமணி, காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் ஆர்.கணேசபெருமாள் மற்றும் அதிரடிப்படையைச் சேர்ந்த காவலர்களான ஐயப்ப ராஜ், ராமகிருஷ்ணன், அறிவழகன் ஆகியோர் தவறிழைத்துள்ளனர் என்று இந்த ஆணையம் முடிவு செய்கிறது. சம்பவத்தின் முதற் கட்டத்தில் காவல்துறை யினர் அத்துமீறி பலப்பிரயோகத்தை பயன்படுத்தாத போதிலும் அதன் இரண்டாம் கட்டத்தில், மாணவர்கள் மீது அத்துமீறி பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தியதற்குப் பொறுப்பான மேற்சொன்ன காவல் துறையினர் மீது தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசிடம் விடப் படுகிறது.
நடத்தை விதிகள்
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு கீழ்கண்ட வழிவகைகளை கடைபிடிக்கலாமென ஆணையம் கருதுகிறது.
மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே போராட்டம் நடத்த வேண்டாமென்று கல்லூரி முதல்வர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டு மென்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய அறிவுரைக்கு மாணவர்கள் செவிசாய்க்காவிட்டால், அவர்களைக் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்தல், தேர்வு எழுத அனுமதி மறுத்தல் போன்ற கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கடமை
கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடத்தி அதன் மூலம் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதால் பயனேதுமில்லை என்பது பற்றி மாணவர் களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டியது கல்லூரி முதல்வர் மற்றும் விரிவுரையாளர்களின் கடமையாகும். மாணவர்கள் தங்கள் வகுப்புகளைப் புறக் கணித்துவிட்டு, போராட்டம் நடத்த கல்லூரிக்கு வெளியே செல்லும்போது, அவர்கள்மீது கடுமையான ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களோடு சேராமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த அளவு பலப்பிரயோகம்
கல்லூரி வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் செய்யக் கருதியிருப்பது பற்றிய தகவலை முன்கூட்டியே அறிய காவல்துறையினர் முயற்சிக்க வேண்டும். அத்தகைய தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதியிலுள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் கல்லூரி முதல் வரைச் சந்தித்துப் பேசி மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே கூடி சாலை மறியலில் ஈடுபடுவதைத் தடுக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஆயுதங்கள், எவையுமின்றி கல்லூரிக்கு வெளியே கூடி, சாலை மறியலில் மாணவர்கள் ஈடுபட்டிருக்கும் நேர்வில் காவல்துறையினரின் நடவடிக் கைக்குப் பொறுப்பு வகிக்கும் அதிகாரி கலைந்து செல்லுமாறு மாணவர்களை மீண்டும் மீண்டும் எச்சரிக்கவேண்டும். அத்தகைய எச்சரிக்கைக்கு மாணவர்கள் கீழ்ப்படியாமல் சாலையில் அமர்ந்து தொடர்ந்து போ‘ரட்டம் நடத்துவார்களேயானால், காவல்துறையினர் குறைந்த அளவு பலப்பிரயோகத்தை பயன்படுத்த வேண்டும்.
காவல்துறையினர், தடியடிப் பிரயோகம் செய்வதற்கு முன், கண்ணீர்ப்புகை குண்டைப் பயன்படுத்தி, மாணவர்களைக் கலைந்து செல்லச் செய்வது நல்லது. கொந்தளிப்பான சூழ் நிலை உருவாக மாணவர்கள் வலு வான தாக்குதலில் இறங்கினால் மட்டுமே அதிகபட்ச தடியடிப் பிரயோகம் செய்யப்பட வேண்டும்.
கல்லூரிக்குள் நுழையகூடாது
கல்லூரி வளாகத்திற்கு வெளியே சட்டவிரோதமாக கூடி யுள்ள மாணவர்களை குறைந்த அளவு பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தி கலைந்து போகச் செய்துவிட்டால், பின்னர் காவல்துறையினர் கல்லூரி கட்டிடத்தினுள் நுழைந்து அவர்களைத் தாக்க முயலக்கூடாது. குறிப்பாகக் குற்றம் சாட்டப்பட் டுள்ள மாணவர்களைக் கைது செய்ய காவல்துறையினருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இந்த நேர்வில் நாம் கண்டதைப் போன்று, கல்லூரிக் கட்டிடத்தின் உள்ளே மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கக் கூடாது.
இதுதொடர்பாக, காவல்துறை யினருக்குக்கு கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும். காவல்துறையின ருக்கு எதிராக கடுமையாகவும், மாணவர்கள் தொடர்ந்து ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டாலன்றி மற்றபடி கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி கல்லூரிக் கட்டிடத்திற்குள் எக்காரணத்தைக்கொண்டும் நுழையக்கூடாது.
மாணவர்கள் தங்கள் போராட்டத்தை சாலைக்கு எடுத்துச் செல்வது, அதாவது கல்லூரி வளாகத்திற்கு வெளியே கொண்டு வருவது அவர்களுக்கு ஒருபோதும் உகந்ததல்ல என்று இந்த ஆணையம் மாணவர்களுக்கு வலியுறுத்த விழைகிறது. மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்து வது நியாயமாக இருக்கலாம். ஆனால் போ‘ரட்டக்காரர்கள் கல்லூரிக்கு வெளியே வந்து சாலையில் கூடி சாலை மறியலில் ஈடுபட்டால் அது சட்டத்திற்கு புறம்பான நியாயமற்ற போராட்டமாக ஆகிறது.
இந்த வழக்கு விவரங்களின் அடிப்படையில் சம்பவம் நடை பெற்ற போது பி.ஏ.முதலாம் ஆண்டு (இலக்கியம்) பயின்று வந்த கண்பார்வையற்ற மாண வரான ப.செந்தில்குமார் என்பவருக்கு இழப்பீட்டுத்தொகையை இந்த ஆணையம், பரிந்துரைக்கிறது. கல்லூரி கட்டிடத்திற்கு உள்ளே, கல்லூரி முதல்வரின் அறையில், அவர் எவ்வாறு ஈவிரக்கமில்லாமல் காவல்துறை யினரால் அடிக்கப்பட்டார் என்பது குறித்து அவர் சாட்சியம் அளித்துள்ளார். அன்றைய தினம் அவர் கல்லூரி கட்டிடத்தை விட்டு வெளியே வரவே யில்லை என்று தெரிகிறது. அவர் முற்றிலும் கண் பார்வையற்றவர், அன்றைய தினம் அவர் கல்லூரி முதல்வரின் அறையில் இருந்தார்.
இருப்பினும், காவல்துறையினர் கல்லூரிக் கட்டிடத்திற்குள் நுழைந்து, அவர் தனக்கு அறவே கண்பார்வை தெரியாது என்று முறையிட்ட போதிலும் அவரை அடித்துக் காயங்கள் ஏற்படுத்தி யிருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட அத்தகைய அப்பாவி, கண்பார்வையற்ற மாணவருக்கு ஏற்பட்ட உடல் வலி மற்றும் மன உளைச்சலுக்கு, நியாயமான வகையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்று கருணை மற்றும் இயற்கை நியதிக் கோட்பாடுகள் கூறுகின்றன. ஆகையால், மாணவர்கள் செய்த போராட்டத்தில் சிறிதும் தொடர்பில்லாத இந்த அப்பாவி மாணவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.25,000 வழங்கப்பட வேண்டும் என்று ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
போலீசார் நடத்திய தடியடி தவறானது - விசாரணைகமிஷன் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - கல்லூரி, மாணவர்கள், காவல்துறை, வெளியே, கல்லூரிக், காவல், வேண்டும், மேலூர், போராட்டம், அவர், நுழைந்து, ஆணையம், நடவடிக்கை, ஆய்வாளர், காவல்துறையினர், கல்லூரிக்கு, மாணவர்களை, கட்டிடத்தின், விசாரணை, மாணவர்களுக்கு, சம்பவத்தின், மீது, ஆகியோர், சென்று, உதவி, ஒழுங்கு, கல்லூரியின், துறையினர், மீண்டும், எதிராக, வளாகத்திற்கு, சாலையில், கூடி, அரசு, அழைத்துக், திரும்ப, சாலை, கட்டத்தில், முதல்வரின், மறியலில், கலைந்து, போதிலும், குறைந்த, அத்தகைய, அளவு, முதற், ராஜேஷ், தடியடிப், பிரயோகம், கட்டிடத்திற்குள், மாணவர்களைத், மதுரை, பின்னர், இரண்டாம், வழக்கு, கமிஷன், பலப்பிரயோகத்தைப், வந்த, சாட்சியம், கட்டிடத்தினுள், ரமணி, செய்கிறது, கண்காணிப்பாளர், துணைக்