முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » எல்லோரும் நல்லவரே
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - எல்லோரும் நல்லவரே
- எஸ்.எஸ். இராஜகோபாலன்
அரசுப்பள்ளி ஒன்றில் கட்டுக்கு அடங்காமல் உள்ளனர் என்று சில மாணவரைக் காவல் துறையிடம் ஒப்படைத்த தலைமையாசிரியையின் செய்கை மன்னிக்கத்தக்கதல்ல. படிப்போடு பண்பாட்டையும் வளர்ப்பதே கல்வி. பலதரப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து வருகின்ற மாணவரைப் பேணுதல் கடுமையானது தான். அதில் வெற்றி பெறுவது தான் ஆசிரியர்க்குப் பெருமை தரும்.
மாற்றுப் பெற்றோர் என்ற வகையில் தம் குழந்தைகளைப் பள்ளியினிடம் பெற்றோர் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் அனுமதியின்றி வெளியாரிடம், குறிப்பாகக் காவல் துறையிடம், ஒப்படைக்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்குக் கிடையாது. கல்வி விதிகள் படி முறையான விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட ராணுவத்தினரையும் காவல்துறையினரையும் பல்கலைக்கழக, கல்விக் கூட வளாகங்களினுள் அனுமதிக்க மறுத்த கல்வியாளர்களை நினைவுகூர வேண்டும்.
என்.சி.பி.எச். நிறுவனத்தின் வெளியீடான குழந்தைகள் வாழ்க என்ற நூலில், ஓர் ஆசிரியர் பொறுமையைக் கடைப்பிடித்து இளங்குற்றவாளிகளெனக் கருதப்பட்ட சிறுவரை நேர்வழிப்படுத்திய உண்மையான வரலாறு தரப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆசிரியரும் படித்துப் பின்பற்ற வேண்டிய அந்நூல் என் ஆசிரிய வாழ்க்கையில் பெரும் மாறுதலை உண்டாக்கியது. பிறக்கும் பொழுது எல்லோரும் நல்லவரே என்ற ரூசோவின் கூற்றின் அடிப்படையில் கல்விக் கூடங்கள் இயங்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எல்லோரும் நல்லவரே - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வேண்டும்