முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » இந்து மதமும் திரிசூலம் வழங்குதலும்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - இந்து மதமும் திரிசூலம் வழங்குதலும்
- சகோ. திருவட்டார் கிருஷ்ணன் குட்டி
திரிசூலம் சிவனின் ஆயுதமாகும். சிவன் பழங்கால திராவிடர்களின் தேவனாவார். திராவிட தேவ தேவதைகள் எல்லாம்தானே, அவற்றின் பிறப்பிட மண்ணான மெசபடோமியாவில் இருந்த காலத்திலேயே ஆயுதங்கள் தாங்கியவையாக உருவாக்கப்பட்டிருந்தன. சிவன், விஷ்ணு, காளி போன்றவையனைத்துமே மெசபடோமியாவை தாய்மண்ணாகக் கொண்டவை.
ஆரியர்கள் இந்தியாவில் பலாத்காரமாக நுழைந்த போது அவர்களுடைய தெய்வங்களான இந்திரனும் பிரம்மனும் இந்தியாவில் கொண்டு வரப்பட்டன. அவர்களது மதம் பலியை அடிப்படையாகக் கொண்டது. பலி என்னும் போதே ஹ’ம்சையாகிய துன்புறுத்தல் உள்ளடங்கிவிட்டதல்லவா? அன்று இந்த ஆரியரின் பலியை அடிப்படையாகக் கொண்ட மதத்துக்கு எதிராக வலிமையுடன் மோதிய மதம், அகிம்சையை முக்கியப்படுத்திய பௌத்த மதமாகும். காலப்போக்கில் ஜாதி பேறுபாடற்ற, அகிம்சை பண்புள்ள பௌத்த மதம் இந்தியப் பகுதியின் பெரிய மதமாக விரிவடைந்தது. அசோகரின் காலத்தில் அது தனது உச்சியை அடைந்திருந்தது.
அக்காலத்தில் இந்தியாவுக்கு இந்து தேசமென்றோ, பாரத நாடு என்றோ பெயர் இருக்கவில்லை. இந்தத் தீவானது 'ஜம்புதீபம்' என அழைக்கப்பட்டிருந்தது. திராவிட முறையில் இந்தியாவின் காவல் மரபாக கறுப்புப் பழங்கள் நிறைந்த நாவல் மரம் காணப்பட்டது. எனினும் சிந்து நதியையும், அதன் கரையோர பகுதியையும் பெர்சியர் ஹ’ந்து என அழைத்திருந்தனர். அவர்களது உச்சரிப்பு 'ச' வுக்கு பதில் 'ஹ' வாக இருந்ததே காரணம். இவ்வாறு சிந்து, சப்த சிந்து ஆகிய பெயர்கள் ஹ’ந்து, ஹப்தஹ’ந்து என்று அழைக்கப்பட்டன. எனினும் இந்தப் பெயர்கள் இந்தியா என்ற தீபகற்பத்தை முழுவதும் குறிப்பிடும் பெயர்களாக விளங்கியிருக்கவே இல்லை.
திராவிடர் எவ்வாறு ஹ’ந்துக்களல்லவோ, அது போல ஆரியரும் ஹ’ந்துக்களல்ல. ஆனால் பௌத்த மதத்தின் வளர்ச்சியைக் கண்ட, வேள்விகளின் வழியாக பெரும் சொத்துக்களைச் சம்பாதித்த, மக்கள் துரோகிகளான ஆரிய வம்ச புரோகிதர்கள் கோபமுற்றனர். பௌத்த மதத்துக்கு எதிராக செயல்பட்டனர். குப்தர் காலத்தில் திராவிட - ஆரிய தேவர்களையும், கருத்துக்களையும் ஒன்றாக கூட்டிக் குழைத்து இன்று காணும் ஹ’ந்து மதத்துக்கு உருவம் கொடுத்தனர். முன்பு ஆரியருக்கு கோவில்களும் விக்கிரகங்களும் இருக்கவில்லை. இப்போதோ அவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு, பிராமண குருக்களை விக்கிரக கோவில்களின் பூஜாரிகளாக்கினர். பௌத்த விகாரங்கள் கோவில்களாயின. ஜாதி வேறுபாடற்ற இடத்தில் ஜாதிப்பிரிவுகள் நிரந்தரமாக்கப்பட்டன. பௌத்த மதத்தை ஒழிக்க ஆயுதம் தாங்கிய படைகளை ஏற்படுத்தினர். அப்படையினர் திரிசூலம், வாள், மழு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி வெறிதாக்குதல்களை நடத்தினர். பௌத்த விகார்கள் தகர்க்கப்பட்டன. புத்த சன்னியாசிகளும் பிட்சுணிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் மேல் வெற்றிநாட்டிய ஆயுத வீரர்கள் விஜயதசமி, ஆயுதபூஜை போன்ற விழாக்களை நடத்தினர். இன்றும் இவை தொடர்கின்றன. இன்று பல கோவில்களில் நடைபெற்று வரும் ஆயுதங்களால் நடத்திக் காட்டும் சடங்குகளான வேலை, வேட்டை, நீராட்டு போன்றவையெல்லாம், பௌத்தரைக் கொன்றொழித்த நினைவு கூரல்களாகும். கருவேற்றித் திருவிழா, தூக்கச் சடங்குகள் போன்றவையும் இவற்றின் நினைவுகளாகும்.
தற்போது இந்தியாவை இந்து தேசமாக்க, அதாவது ராமராஜ்யமாக்குவதற்காக V.H.P யும் மத்திய அரசும் நடத்தும் முயற்சியே திரிசூலம் வழங்குதல். இது இந்து மதத்துக்கே (?) உரிய துன்புறுத்தலின் பண்பை தெளிவு படுத்துகிறது. இங்கு ஆயுதங்களை வழங்குவது பூஜை செய்வதற்காக அல்லவே! குஜராத்தில் நிகழ்த்தப்பட்டதைப் போன்று தமிழ்நாட்டைப் போன்ற பிற மாநிலங்களிலும், இரத்த ஆற்றை ஓடச் செய்து பாரத மாதாவைத் தூய்மைப்படுத்தி ராமராஜ்யமாக்க, அதாவது ஆரிய ராஜ்யமாக்க முயலும் கொடும் வஞ்சனையாகும்.
ஆங்கிலேயரின் கரங்களிலிருந்து போராட்டங்கள் நடத்தி சொந்தமாக்கப்பட்ட சுதந்திரமானது, முன்பு இங்கு பலாத்காரமாக நுழைந்த கொடிய ஆரியர் கையில் தாரை வார்க்கப்படுகிறது.
நன்றி : தர்மதீப்தி
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்து மதமும் திரிசூலம் வழங்குதலும் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பௌத்த, சிந்து, ஹ’ந்து, ஆரிய, இந்து, திரிசூலம், மதம், மதத்துக்கு, திராவிட