முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » கலகக்காரர் தோழர் பெரியார்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - கலகக்காரர் தோழர் பெரியார்
- மு. ராமசாமி
1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநட்டுத் தீர்மாநங்களை ஏதேச்சையாகப் புரட்டிக் கொண்டிருக்கையில், தீண்டாமைக் கெதிரான அத்தீர்மானங்களின் தேவை. கீழ்வெண்மனி, கீர்ப்பட்டி, பாப்பாபட்டி, திண்ணியம், மேலவளவு என்று சமூக அவமானங்களைச் சுமந்து திரியும் இப்பொழுதுங் கூட காலாவதியாகிப போய் விடவில்லை என்பதை உயர்த்தி அதிர்ச்சி தந்தது! இந்தச் சமூகத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதே பணியாய் வேறு பற்றின்றி இருந்ததாலும் இந்த நாட்டில் அந்த பணி செய்ய வேறுபற்றின்றி இருந்ததாலும் இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய வேறுயாரும் முன்வராததினாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்ட திட்டங்களை வகுப்பதாலும், அத்தொண்டுக்குத் தன்னைத் தகுதியுடையவனாக அறிவிக்கும் பெரியாரின் பேச்சு, செயல் இரண்டும் கலகக்காரத் தன்மை கொண்டவை!
''மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது'' கண்ணில் படக்கூடாது; குளத்தில் கண்ணி எடுக்கக்கூடாது என்கின்றவை போன்ற கொள்கை'' தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பீகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்தப் பிறகுங்கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் நீதிமான் என்றம் சர்வதாயாபரர் என்று யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது?'' என்கிற தீண்டாமைக்கெதிரான பெரியாரின் குரல் கலகத்தை முன்வைப்பது! நாத்திகத்தை மார்க்ஸியத்தின் தொடக்கமாகவும் அறிவியல் வளர்ச்சியின் முதிர்ந்த கோட்பாடாகவும் முன்வைத்த பெரியாரின் குரல் ஆத்திகத்திற்கெதிரான கலகக்குரல்! கலகம் என்றால் ஆரோக்கியமான எதிர்க்கலாச்சாரச் சிந்தனையை முன்வைக்கும் தீவிரம்!
நிஜநாடகஇயக்கத்தின் வெள்ளிவிழா நாடகம் ''கலகக்காரர் தோழர் பெரியார்!'' உண்மையில், சொல்லப் போனால் நிஜநாடக இயக்கத்தின் அத்தனை நாடகங்களுக்குள்ளும் ஒரு பெரியார் அல்லது ஒரு மார்க்ஸ் அல்லது இவர்களை வழிமொழியும் ஒரு கலகக்காரல் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. பெரியாரின் ஆகிருதியே கலகம் செய்ய வல்லது என்பது நாடக நிகழ்த்தலுக்கு நாள் குறிக்கையில்தான் தெரிய வந்தது. மார்க்ஸைச் சகித்துக்கொள்ள முடிந்தவர்களால்கூட பெரியாருக்க இடம் கொடுப்பதில் சங்கடப்படுவது தெரிந்துது. கல்லூரிகளில் களம் அமைத்துச் செயல்பட்டு வந்து நிஜநாடக இயக்கத்திற்கப் பெரியார் நாடகத்தை முன்னிட்டு கல்லூரிகள் களம் அமைத்து தரத்தயங்கின. ''கலகக்காரர்'', கல்லூரி நிறவனங்களைக் கலவரப்படுத்தியிருந்தார். அதனாலேயே பகுத்தறிவு சிந்தனையைப் பாடமாக நடத்திக் கொண்டிருந்த மதுரை யாதவர் கல்லூரியை நாடி நாடகம் போடவேண்டியதாகிறது.
முப்பத்தைந்து நிகழ்வுகள்! முப்பத்தொன்பது பத்திரிக்கை விமர்சனங்கள்! முப்பத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்! நிஜநாடக இயக்க வரலாற்றில் ''சலகக்காரர் தோழர் பெரியார்'' ஒரு மைல்கல்! நவீன நாடக இயக்க வரலாற்றிலும்தான்! எனக்குப் பிடித்தமான ஒன்றில் நான் ஈடுபட்டிருந்தது இதுவரை வெறும் 300-400 பேர்களுக்க மட்டுமே பிடித்தமானதாக இருந்தது மாறி 35000க்கும் அதிகமானவர்களுக்குப் பிடித்தமானதாக மாறிய விந்தையைச் செய்து காட்டியது - கலகக்காரர் தோழர் பெரியார்! செய்து காட்டியவர் பெரியார்! பெரியாரின் சிந்தனைத் தேவையை முன்னெப் போதையும் விட மக்கள் இப்பொழுது கூடுதலாக உணர்கின்றனர் என்பதும் அதை இந்த நாடகம் சரியாகப் பயன்படுடித்திக்கொண்டிருக்கிறது என்பதும்தான் இதன் வெற்றியைச் சாத்தியமாகக்கியிருக்கிறது
பல்வேறு ஊர்களில் பல்வேறு அமைப்புகள் - முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழர் கண்ணோட்டம், இந்திய ஜனநா‘யக வாலிபர் சங்கம், பாரதி சங்கம், தந்தை பெரியார் திராவிடக்கழகம் இந்தியத் தொழிற்சங்கப் பேரவை ஆகியவை - இந்த நாடகத்திற்குத் தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. சிவப்புச் சட்டைப் பெரியாரைக் கறுப்புச் சட்டைப் பெரியாராகவே எவரும் கண்டுகொண்டதென்பது ஆரம்பத் தயக்கங்களுக்குப் பின் எல்லோருக்கும் இயல்பாகவே அமைந்துபோனது. பார்வையாளர் கண்முன்னே. நடிகன் எவ்வித ஒப்பனையுமின்றித் தன்னைப் பெர்யாராக மாற்றிக் காண்பிப்பதும், பார்வையாளர்கள் எவ்வித விகற்பமுமின்றி அவரைப் பெரியாராக. ஏற்றக் கொண்டு கரவொலி செய்வதும் மிகச் சாதாரணமாக ஒரு விளையாட்டுபோல் கண்முன் நிகழ்ந்துவிடுகின்றன. உணர்வுபூர்வமான ஒன்றுதலுக்கத் துணை நிற்காத வகையில், பெரியார் குரல் போலவோ, அவரின் நடைபோலவோ, அவரின் அசைவுகளைப் போலவோ அச்ச அசலாகப் பெரியாரைக் காட்டாமல், பெரியார் பாத்திரமானது நடிக்கம் நடிகர் ஒழுங்கில் நடிக்கப்பட்டபோதும், மனரீதியில் பார்வையாளரைத் தூரப்படுத்தி அறிவுப்பூர்வமாகப் பார்க்க வைத்த போதும் பெரியார் செருப்படி பெறும் காட்சியிலும், இளைஞர்களுக்கு அறிவுரை கூறும் காட்சியிலும் பார்வையாளர்கள் உணர்ச்சியின் உச்சத்திற்கச் சென்று விடுவதென்பதும் காலில் விழுந்து வணங்குவதேன்பதும் தவிர்க்கவியலாமல் நிகழ்ந்துவிடுகின்றது, இவை நமது மருபு வெளிக்காட்டும் உணர்ச்சி அடையாளம் அல்லது மரியாதை அடையாளம் என்பதாய் மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்! பெரியார் வழிபாட்டிற்குரியவர் அல்லர். அவர் கைகாட்டிய சிந்தனை, அந்தத் திசைநோக்கி அவரை இழுத்துச் செல்லாது என்ற நம்பலம்! விமர்சனங்களுடன் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டியவர் அவர் என்பதைக் கல்வி அக்கறையுடன் மகிழ்ச்சிச் சூழலில் எடுத்துச் சொல்வதுதான் ''கலகக்காரர் தோழர் பெரியார்.
கறுப்புச்சட்டைப் பெரியாரைச் சிகப்புச் சட்டையினர் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதும், சிகப்புசட்டைப் பெரியாரைச் கறுப்புக் சட்டையினர் அகீகரித்து ஏற்றுக்கொண்டதும் தொடக்கத் தயக்கங்களுக்குப் பிறகு எந்த நெருடலுமின்றி மூச்சைப்போல் மிக இயல்பாக ஏற்கப் பழக்கப்பட்டு விட்டனர். கோவையில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் ''சிவப்புச் சட்டையில் பெரியார் ஏன்?' நேரில் வந்து காணுங்கள் என்ற விளம்பரம் செய்ததும் மேட்டூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகமும் இந்தியத் தொழிற்சங்கப் பேரவையும் இணைந்து தம் தோள்மீது தூக்கிக் கலகக்காரைச் சுமந்ததும் திராவிடர் கழகத்தினர் ஒவ்வொரு ஊரிலும் பெருந்திரளாக வந்திருந்து வாழ்த்திச் சிகப்புப் பெரியாருடன் புகைப்படங்கள் எடுத்துச்செல்வதும் கலகக்காரர் தோழர் பெரியாரை அவர்கள் தங்களடையவராக ஆக்கிக்கொண்டதால் தான் இணக்கம் கொள்ளத்தகும் அணிகளை இணங்கிவர வைத்த பெருமை இந்த நாடகத்திற்கு இருக்கிறது. இதன் மூலம் பெரியார் சிந்தனை மீண்டும்பீடம் ஏறிவிடுமோ என்கிற அச்சத்தின் வெளிப்பாடுதான், சேலம் அரசு கல்லூரி ஆண்டுமலரில் வெயிவந்த பெரியாரை இழிவுபடுத்தி எழுதிய அகிலபாரத வித்யார்த்தி பரிஷத் மாணவனின் கட்டுரைகள். பொதுவாழ்க்கையில் ஈடுபடும் ஒருத்தன் எல்லா வகையான .இழிவுகளை சகித்துக் கொண்டுதான் போகவேண்டியதிருக்கிறது இங்கே!
போடி, உத்தமபாளையம் பகுதிகளில் ''கலகக்காரர் தோழர் பெரியார்'' நாடகத்தைத் தடைசெய்யச் சொல்லி விஸ்வஹ’ந்து பரிஷத் அமைப்பினர் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்கிற கதையாக, பெரியாரையும் மார்க்ஸிஸ்ட் கட்சியினரையும் எதிர்ப்பதற்காகப் போராடினர். ''கலகக்கார் தோழி காளியம்மா'' பெயரில் நாடகம் நடைபெறும் இடத்தின்முன் ஒப்பாரி வைக்கப்போவதாக அறிவுப்புகள் செய்தனர். ''கம்யூனிஸ்டுகளின் நாடகத்திற்குத் தடை'' என்பதாகச் செய்திகளை வெளியிட்டு ஒரு கலவர உணர்வைத் தோற்றவித்தனர். காவல்துறை அனமதியுடன் கலகக்காரரின் பயணம் தடைப்படாமல் நடந்தது. கோவையில் கடைசி நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் நாடகம் நடத்தக் கொடுத்திருந்த அனுமதியை ரத்துசெய்தது. அதை எதிர்த்து மாநகராட்சியில் சர்வகட்சியினர் வெளிநடப்பு செய்கின்றனர். மீண்டும் அதே இடத்தில் கலகக்காரர்கம்பீரமாக நடக்கிறார். இந்த நாடகத்திற் ஒவ்வொரு ஊரிலும் செய்யப்பட்ட சுவர் விளம்பரங்கள் இலட்சக்கணக்கான மக்கள் மனங்களில் சுடர்விடும்படி அமைந்திருந்தன. என்ன மாவட்டம் தோறும் காவல்துறை அனுமதிக்க மறுமுறை மறுமுறை என்று ஓட வேண்டிய நிர்ப்பந்தம் மட்டுமே நிகழ்ந்தது. ''கலகக்காரர்'' என்கிற பெயரை ''புரட்சிக்காரர்'' என்று மாற்றிக்கொள்ளச் சொல்லி அதிகாரிகள் மட்டத்தில் பல திசைகளிலிருந்தும் அன்பு வேண்டுகோள்கள் பறந்து பறந்து வந்து, வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றன.
நாடகக் கொட்டகைகள் மூடப்பெற்றுத் திரையரங்குகளான காலம் ஒன்றிருந்தது. மூடப்பட்டு வரும் திரையரங்குகளில் அல்லது திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளில் நாடகம் நிகழ்த்தும் காலமாற்றத்தைக் கொடுத்தது ''கலகக்காரர் தோழர் பெரியார்''! ஒவ்வொரு நிகழ்வின் பார்வையாளர் பங்குபெறலைத் தொடர்ந்து நாடகம் தன்னளவில் இறுக்கம் குலையாமல், அழகு கெடாமல் மாறிக்கொண்டே இருக்கிற படைப்பு விந்தை நிகழ்ந்துகொண்þ இருக்கிறது. மக்களிடம் கற்ற மக்களுக்கே வழங்குகிற அனுபவச் சாத்தியத்தை இந் ந்‘டகம் உருவாக்கியிருக்கிறது. மா‘க்ஸியமும் பெரியாரியமும் -சமஉடைமையும் சமஉரிமையும் - இணைந்தே செயல்படவேண்டிய காலத்தேவையைக் கலகக்காரர் தோழர் பெரியார் சொல்வதாலேயே அது நேரிடையாக அரசியல் பேசுகிறது! வார்த்தையாடல்களாகவும் இதைப் பேசுகிறது. எளிமையான காட்சிப்படிமமாகவும் இதைப் பேசுகிறது. சிவப்புச் சட்டைப் பெரியார் என்பது இரண்டு தத்துவக் குறியீடுகளும் இணைந்த ஓர் எளிய காட்சிப்படிமம்தான்! பெரியார் உருவாக்கிய கொடியின் மையச் சிகப்பாக இறுதியில் மாறுவதென்பது இன்னொரு காட்சிப் படிமம்.
''யார் சொல்வதையும் நாம் கேட்டு ''வேதவாக்கு'' என்று நம்பி அப்படியே நடப்பதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே நான் சொல்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்...... உங்களுக்கு அவை உண்மையென்று தோன்றினால் அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்....இல்லாவிட்டால் தள்ளிவிடுங்கள்''' என்ற பெரியாரின் கூற்றுதான் இந்த நாடகத்திற்கும் பொருந்தும். பார்த்தவர்கள் யாரையும் முகம் சுளிக்க வைக்காததும், சமூகக் கடமையை எல்லோரும் உணர வற்புறுத்திக் கொண்டே இருப்பதையும்தான் இந்த நாடகம் கொடுத்திருக்கும் அனுபவம் வித்தியாசமானது. இன்னொரு நாடகம் உருவாக்கும் அவசர ஆசைக்கு ஒரு வேகத்தடையாக மக்களின் எதிர்பார்ப்புகள் மைந்திருக்கின்றன. சந்தித்த மக்களின் உணர்வு அதிர்வுகளும், கூடுதல் பொறுப்புணர்ச்சியும், எச்சரிக்கை உணர்வும் இயல்பாகவே வந்து அப்பிக்கொள்கின்றன.
ஆயினும் அடுத்த நாடகம் - புதிய நாடகம் - ஆரம்பிக்க வேண்டும் அது இன்னொரு பெரியாராக அல்லது மார்க்ஸாக அல்லது அவர்களை வழி மொழிபவர்களாக இருக்கக்கூடும். அந்த நம்பிக்கையில் விடைபெறும் நாங்கள், எங்கள் படைப்பை உரசிப்பார்த்துப் புத்தாக்கம் பெறவைத்த தமிழக மக்களை, அமைப்புசார் தோழர்களை நன்றியுடன் இந்தத் தருணத்தில் நினைக்கிறோம்.
நன்றி: புதிய பார்வை
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலகக்காரர் தோழர் பெரியார் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பெரியார், நாடகம், கலகக்காரர், தோழர், அல்லது, பெரியாரின், வந்து, என்கிற, சிவப்புச், தந்தை, சட்டைப், பேசுகிறது, இன்னொரு, சங்கம், ஒவ்வொரு, பார்வையாளர்கள், நிஜநாடக, செய்ய, இயக்க, என்பது, அவர், குரல், மக்கள்