வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 79
புருதானன்
தேசம் : மேல் சுவாதம்
ஜாதி : இந்திய ஆரியர்
காலம் : கி.மு. 2000
பசுமை நிறைந்த மலைகள், பெருகியோடும் சிற்றருவிகள்,
பசுந்தோகைகளோடு தலைநிமிர்ந்து நிற்கும் கோதுமைப் பயிர்கள்; இத்தனை இயற்கை அழகுகளையும் ஒருங்கே தன்னகத்தில் கொண்டிருக்’கும் சுவாத நதியின் இடது கரைப்பிரதேசக் காட்சி, பார்ப்போர் மனதைப் பரவசப்படுத்துவ தாயிருந்தது. ஆனால் அந்த இயற்கையின் அழகைவிட தாங்கள் செயற்கையாக உண்டாக்கிய - கற்சுவர்களையும் தேவதாரு மரத்தாலான கூரைகளையுமுடைய - தங்கள் வீடுகளைப் பற்றித்தான் ஆரியர்கள் ரொம்பவும் பெருமைப்பட்டார்கள். இதனாலேயே இந்தப் பிரதேசத்திற்கு ‘சுவாஸது’ (அழகிய வீடுகளையுடைய பிரதேசம்) என்று பெயரும் வைத்தார்கள்.
மங்கலபுரம் (மங்களூர்) எங்கு பார்த்தாலும் ஒரே அலங்கார ரூபமாய்க் காட்சியளிக்கிறது. மங்கலபுரவாசிகள் இன்று இந்திர விழாக் கொண்டாடுகிறார்கள். வட்சு நதிப் பிரதேசத்திலிருந்து கிளம்பிய ஆரியர்கள், பாமீர், இந்துகுஷ் முதலிய மலைப் பிரதேசங்களின் கடினமான வழிகளையும், குனார், பஞ்சகோரா முதலிய நதிகளையும் கடந்து இந்த சம வெளிப் பிரதேசத்தை அடைவதற்குத் தாங்கள் பட்ட கஷ்டங்களை இன்னும் மறந்துவிடவில்லை; அந்தக் கடினமான மலைப்பாதைகளிலும், அபாயகரமான பிரயாணங்களிலும் தங்களுக்கு எவ்வித சேதமுமின்றி, சுகத்தோடு கொண்டுவந்து சேர்த்த தங்கள் தலைவன் இந்திரனுக்கு நன்றி செலுத்தும் முறையில் இவர்கள் இந்த இந்திர விழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.
மங்கலபுர வாசிகளான புருகுலத்தோரின் வீடுகள் யாவும் தேவதாருக்களின் பசுந்தோகைகளாலும், பல நிறக் கொடிகளாலும்
அலங்கரிக்கப்பட்டிருந்தன. புருதானன் தன்னுடைய வீட்டைப் புது மாதிரியான சிவப்பு நிறக் கொடிகளால் அலங்கரித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த அவனுடைய நண்பன் சுமேதன், அந்தக் கொடிகளிலொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு, “நண்பா! உன்னுடைய இந்தக் கொடிகள் மிருதுவாயும், வழுவழுப்பாயும் இருக்கின்றனவே; இந்த மாதிரித் துணிகள் நமது பிரதேசத்தில் செய்யப்பட்டதை நான் பார்த்ததேயில்லை. இவ்வித ரோமங்களைக் கொடுக்கும் ஆடுகள்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 77 | 78 | 79 | 80 | 81 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்த - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்