வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 76
கீழ் மத்ரர்கள், பர்ஷுக்கள் இவர்களுடைய அநீதியான வர்த்தக முறையைத் தடுக்காவிட்டால், மேல் மத்ரர்களும் புருக்களும் வாழ முடியாது என்பது புருகூதனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. தாமிரத்தின் உபயோகமும், அவசியமும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வந்தது. புருகுலத்தோரின் வாழ்க்கைநிலை மோசமானதற்குக் காரணம். கீழ்ப் பிரதேசத்தாரின் அநீதியான வியாபார முறைதான் என்பதைப் புருகூதன் விளக்கினான். தங்கள் பாதையில் தடையாயிருக்கும் அவர்களை ஒழிக்காவிட்டால் தாங்கள் எல்லோரும்
அவர்கள் கைப்பாவையாய் விடுவோம் என்பதை யாவரும் ஒத்துக்கொண்டனர். நிலைமை இப்படியே போய்க் கொண்டிருந்தால் கீழ்ப் பிரதேசத்தாரிடமிருக்கும் அடிமைகளைப் போல் தாங்களும் அடிமைகளாகிவிடக் கூடும் என்று அஞ்சினர். மேல் மத்ரர்களும் புருக்களுடைய இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு, இரு சமூகத்தாரும் ஒன்று சேர்ந்து யுத்தம் நடத்தத் திட்டமிட்டனர். யுத்தத்திற்குச் சேனாதிபதியாகப் புருகூதன் நியமிக்கப்பட்டான். இரண்டு குலத்தலைவர்களுக்கும் மேலான இப்பதவிக்கு ‘இந்திரன்’ என்று பெயரிடப்பட்டது. இவ்விதமாக, புருகூதன் முதலாவது இந்திர பதவியைப் பெற்றான்.
புருகூதன் வேகமாகச் சேனை திரட்டுவதில் முனைந்தான்; இந்திர பதவியைப் பெற்றவுடனேயே புருகூதன், கீழ் மத்ரர்களின் அடிமைகள் இருவரைக் கொண்டு வந்து ஆயுதங்கள் உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்தான். மேல்பகுதி ஜனங்களும் அந்தச் சிற்பிகளோடு ஒத்துழைத்து ஆயுதம் செய்யும் கலையை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர். அந்த அடிமைகளின் காரணமாக இருதரப்பாருக்குமிடையே ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. ஆனால் கீழ்மத்ரர்கள், பர்ஷுக்கள் இவர்களிடையே வியாபார மனப்பான்மை குன்றி, யுத்த வீரர்களும் குறைய ஆரம்பித்து விட்டனர். இந்தச் சண்டையில் வெற்றி காணமுடியாத இவர்கள் மேலேயுள்ளவர்களுக்குத் தாமிரம் விற்பதை நிறுத்திவிட்டார்கள். இதனால், கொஞ்ச நாளில் தங்களுடைய வியாபாரம் குறைந்து போனதுதான் இவர்கள் கண்ட பலன். ஏனென்றால் மேல் மத்ரர்கள், புருக்கள் இரு சமூகத்தாரும் இதுவரை வாங்கி வைத்திருக்கும் பாத்திரங்களிலுள்ள தாமிரத்தைக் கொண்டு இன்னும் நூறு வருஷங்களுக்கு ஆயுதங்களைச் செய்து கொண்டிருக்கலாம்.
கீழ் மத்ரர்களையும் பர்ஷு க்களையும் சீக்கிரம் அழித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு, மேல் பிரதேசத்தவர் வந்து விட்டனர். புருகூதனும் ஆயுதம் செய்யும் தொழிலைக் கற்றுக் கொண்டிருந்தான். இயற்கையாக அவனுக்குள்ள திறமையால் ஆயுதங்களைச் செய்வதிலே புதிய முறையையும் ஆயுதங்களிலே அநேக சீர்திருத்தத்தையும் புகுத்தினான். எதிரிகளின் பலமான வாள் வீச்சிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்கு, தாமிரத்தினால் மார்புக் கவசங்களையும் கண்டுபிடித்தான்.
இரண்டு சமூகத்தாரையும் ஒன்றாகச் சேர்த்துத் தாக்குவதைவிட, முதலில் ஒருவரை மட்டும் தாக்குவது நல்லதென்று இந்திரன் தீர்மானித்தான். ஆகையால் முதலில் பர்ஷுக்களை மட்டும் தாக்க ஆரம்பித்தான். ஏனெனில் பனிக்காலத்தில் பர்ஷுக்களில் பெரும்பாலோர் வியாபார நிமித்தம் வெளியிடங்களுக்குச் சென்றுவிடுவது வழக்கம். யுத்தம் தொடுப்பதற்கு இந்தச் சமயத்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 74 | 75 | 76 | 77 | 78 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புருகூதன், மேல், கொண்டு, ஆயுதம், வியாபார, கீழ் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்