முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 334
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 334
1920ம் வருடத்தில் சபதர்சாஹிப் தன் மனைவியை அழைத்துக் கொண்டு இங்கிலாந்திற்குச் சென்றபொழுது, சகீனா ‘ஸ்கர்ட்டும்’ பெட்டி கோட்டும்’ அணிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால், அதை அவள் ஒப்புக் கொள்ளவேயில்லை. இங்கிலாந்தில் அவர்களைச் சந்தித்த ஆங்கிலப் பெண்களும், ஆண்களும், சகீனாவின் சிறந்த அழகைப் புகழ்ந்ததோடு மட்டுமல்ல, அவளுடைய சேலையையும் புகழ்ந்ததைக் கண்ட சபதர் சாகிப், அவள் ஆங்கில உடை உடுத்திக் கொள்ள மறுத்ததைப் பற்றி வருத்தப்படவேயில்லை. அவர்கள் இருவருடைய நிறமும் அதிக வெளுமையாயிருந்ததால் ஐரோப்பாவெங்கும் அவர்களை இத்தாலியர்கள் என்றே கருதினார்கள்.
1921ம் வருடம் குளிர்காலம். வட இந்தியாவின் மற்ற நகரங்களைப் போலவே, லக்னௌவிலும் குளிர் காலம் மிக சௌக்கியமாயிருக்கும். சபதர் சாகிப் இன்று கோர்ட்டிலிருந்து வந்ததுமே, பங்களாவின் பின்வராந்தாவில் பிரம்புக் குறிச்சியில் போய் உட்கார்ந்தார். இன்று அவருடைய முகத்திலே
அதிக சிந்தனைக்குறியிருந்தது. அவருக்கு முன்னால் சிறிய மேஜையில் ஒரு நோட்டுப் புத்தகமும், இரண்டு மூன்று புத்தகங்களும் இருந்தன. அவருக்குப் பக்கத்திலே கிடந்த மற்ற மூன்று குறிச்சிகளும் காலியாகவே கிடந்தன. அவருடைய உடம்பிலே முதல் தரமான ஆங்கிலேய ‘சூட்’ அணிந்திருந்தார். தாடி மீசையில்லாத வழுவழுப்பான அவர் முகத்தைப் பார்த்ததுமே, அவர் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார் என்பது தெரியும்; இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், அவருடைய வேலைக்காரர்கள் எஜமானருக்கு முன்னே அதிகமாகச் செல்லமாட்டார்கள். அவர் அடிக்கடி கோபப்படுவதில்லை என்றாலும், இந்த மாதிரிச் சமயங்களில் அவர் தனிமையிலிருப்பதையே விரும்புகிறார் என்பது வேலைக்காரர்களுக்குத் தெரியும்.
இருள் சூழ்ந்துவிட்டது. சபதர் அதே குறிச்சியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். வேலைக்காரன், ‘டேபிள்லாம்ப்’ பைக் கொண்டு வந்து வைத்தான். அப்பொழுது பங்களாவின் வாசலில் யாரோ பேசுவது கேட்டு, யார் என்று விசாரித்தார். மாஸ்டர் சங்கரசிங் வந்து விசாரித்துவிட்டுச் செல்வதாக வேலைக்காரன் சொன்னான். உடனே வேலைக்காரனை அனுப்பி அவரை அழைத்து வரும்படி செய்தார்.
மாஸ்டர் சங்கர சிங்கிற்கு வயது முப்பது முப்பத்திரண்டு இருக்கலாம். ஆனால் இப்பொழுதே அவர் முகத்தில் முதுமை தோன்றத் தொடங்கிவிட்டது. கழுத்தையும் சேர்த்து மூடியுள்ள கறுப்புக் ‘கோட்டு’, அதேமாதிரி ‘பைஜாமா’ தலையிலே ஒரு வட்டத் தொப்பி, உதட்டுக்கு மேலிருந்து கீழ்நோக்கித்
தொங்கிக் கொண்டிருக்கும் அடர்ந்த கரிய மீசை. இந்தத் தோற்றத்திலே எங்கும் இளமையின் சாயல் காணப்படவில்லை. ஆயினும், அவர் கண்களிலிருந்து வெளிப்படும் ஒளி, அவருள்ளே நிறைந்து கிடைக்கும்பேதைமையை எடுத்துக்காட்டுகிறது. மாஸ்டர் சங்கர சிங் வந்ததுமே, சபதர் அவரோடு கைகுலுக்கி, அவர் குறிச்சியில் உட்கார்ந்ததும்,
“என்ன சங்கர்! இன்று என்னைப் பார்க்காமலேயே திரும்பிப்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 332 | 333 | 334 | 335 | 336 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவர், சபதர், மாஸ்டர், அவருடைய, இன்று, குறிச்சியில் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்