முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 331
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 331
கொண்டான். பிரபுக்கள் ஆட்சியால் ஏற்பட்டுள்ள கொள்ளை, லஞ்சம் முதலிய கெட்ட பழக்கங்களைப் போக்குவதற்கு, படித்தவர்களிடையே தேச பக்தியைப் பெரிய அளவில் புகுத்த வேண்டும். அதற்கு இப்பொழுது சந்தர்ப்பமில்லை என்றாலும், மங்களசிங்கோடு பழகிய ஒரு சிலராவது அந்த நற்குணத்தைப் பெறாமல் போகவில்லை. சிப்பாய்களோடு சிரித்துச் சிரித்து வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த யாரும் அவன் இவ்வளவு பெரிய சேனையின் தலைவன் என்று கருத மாட்டார்கள். ஆனால் அவனுடைய சேனையிலுள்ள ஒவ்வொரு சிப்பாயும் அவனது விரல் அசைப்பிலே தனது உயிரைக் கொடுக்கத் தயாராயிருந்தான். மங்களசிங் சிப்பாய்களுடைய சமையலிலே அவர்களுடைய ரொட்டியையே சாப்பிட்டு வந்தான். அவர்களைப்போல் ஒரு கம்பளத்திலேயே தூங்கினான். ஆபத்தை எதிர்க்கும் பொழுது எல்லோருக்கும் முன்னால் நின்றான். கைது செய்யப்பட்ட ஆங்கில ஆண்களையும் பெண்களையும் அவன் மரியாதையாக நடத்தினான். அந்தச் சேனாதிபதியின் பணிவையும், மரியாதையையும் பார்த்து ஆங்கிலேயர்கள் கூட ஆச்சரியப்பட்டார்கள். ஏனெனில் அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் கூடக் கைதிகளை இவ்வளவு நல்ல முறையில் நடத்துவதில்லை. மங்களசிங், ரஹில்கண்டின் நான்கு ஜில்லாக்களைக் கைப்பற்றினான். அவற்றில் ஆங்கில ஆட்சியை ஒழித்ததோடு அவன் நின்றுவிடவில்லை; நல்ல ஆட்சிக்கும்
ஏற்பாடு செய்தான்.
நானாசாகிப் 1857ம் வருடம் ஜூன் மாதம் 5ம் தேதி ஆங்கிலேயருக்கு விரோதமாகக் கத்தி எடுத்தார். ஒன்றரை மாதங்கள் கழிவதற்குள், ஜூலை மாதம் பதினெட்டாம் தேதி அவர் ஆங்கிலேயரிடம் தோல்வியடைந்தார். காற்றின் போக்கை மங்களசிங் முன்கூட்டியே புரிந்துகொண்டான். என்றாலும், தான் உயிரோடிருக்கும்வரை சுதந்திரக் கொடியைக் கீழே போட அவன் விரும்பவில்லை. ஆங்கிலப் பட்டாளங்கள், அவதத்தின் கதியற்ற ஜனங்களைக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். பெண்களின் உயிரையும், மானத்தையும் பறித்தார்கள். இவைகளையெல்லாம் கேள்விப்பட்டபோது கூட, மங்களசிங் தன்னிடம் கைதியாயிருந்த ஆங்கிலேயர்களைத் துன்புறுத்தவில்லை.
மழைக்காலம் முடிவடைந்தபொழுது, அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் கலகக்காரர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டார்கள். ஆனால், ரஹில் கண்டில் மங்களசிங் உறுதியாக நின்றான். ஆங்கிலச் சிப்பாய்களும், கூர்க்கசீக்கியச் சிப்பாய்களும் அவனை நான்கு புறமும் எதிர்த்தார்கள். சுதந்திரச்சேனையின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது. நிலைமையையும், எதிர் காலத்தையும் புரிந்து கொண்ட மங்களசிங் தனது சிப்பாய்களில் அநேகரை வீட்டுக்கு அனுப்பி விட்டான். ஆனால், மீரட்டிலிருந்து அவனோடு வந்த அந்த ஆயிரம் சிப்பாய்களில் ஒருவன் கூட அவனை விட்டுச் செல்ல விரும்பவில்லை. கடைசிக் காலத்தில் மீதியிருந்த அந்தச் சிறிய கோஷ்டியிலே, பிராமணன், க்ஷத்திரியன், ஜாட், ஹிந்து, முஸ்லீம் எல்லோரும்
தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றாகச் சமைத்து ஒன்றாய்ச் சாப்பிடும்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 329 | 330 | 331 | 332 | 333 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மங்களசிங், அவன், ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்