முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 234
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 234
டைய சிருஷ்டியிலே, இந்த இரண்டு விஷயங்களைத் தவிர மற்றவையெல்லாம் என்னுடையதல்லவென்றோ, அல்லது உயர்வு நவிற்சியென்றோ கொள்ள வேண்டும்.
நான் எனது இந்தக் கடைசி நாட்களிலே, பாணகவி எனது நன்மையை நாடவில்லை என்று உணர்கிறேன். அவர் ‘ஹர்ஷசரித’த்தில் மட்டுமல்ல, ‘காதம்பரி’யிலும் கூட அரசனையும், அவனது செல்வப் பெருக்கையும் பற்றி வருணித்திருப்பதையெல்லாம் பார்த்து ஜனங்கள் அவைகளில் அவன் என்னைப் பற்றியே வர்ணித்திருப்பதாகக் கருதுவார்கள். அது மட்டுமா? ‘நாகாநந்தம்’, ‘ரத்னாவளி’, பிரியதரிஸிகா’ ஆகிய நாடகங்களை எழுதி என்
பெயரால் வெளியிட்டு மேலும் அனர்த்தத்தை விளைவித்திருக்கிறான். புகழுக்கு ஆசைப்பட்டு ஹர்ஷவர்த்தனன் மற்றவனின் சிருஷ்டியைப் பணம் கொடுத்து வாங்கித் தன் பெயரால் வெளியிட்டிருக்கிறான் என்று ஜனங்கள் சொல்வார்கள். உண்மையில் இந்த விஷயம் எனக்கு ரொம்பப் பின்னால்தான் தெரியும். எனக்கு விஷயம் தெரிந்தபொழுது, ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த நாடகங்களை என் பெயராலேயே படித்திருந்தார்கள். பல மேடைகளிலே அவைகள் நடிக்கப்பட்டும் இருந்தன.
எனது பிரஜைகளின் வாழ்வு, சுகம் நிறைந்ததாய் இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். அவ்விதமே செய்து முடித்தேன். எனது ராஜ்யத்திலே அமைதியும் பசியின்மையும் நிலவ வேண்டுமென்று கருதினேன். எனது இந்த ஆவலும் பூர்த்தி ஆயிற்று. எனது நாட்டிலே தங்கத்தைக் கையிலே கொட்டிக் கொழித்துக் கொண்டு ஜனங்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயமின்றித் தாராளமாகப் போய்வர முடியும்.
எனது குலத்தைப் பற்றி இப்பொழுதே என் முதுகுக்குப் பின்னால் பேசத் தொடங்கிவிட்டார்கள். எங்கள் குலம் பனியா (வியாபாரி) குலம் என்று சொல்வது முற்றிலும் தவறு. நாங்கள் வைசியப் பனியாக்கள் அல்ல; வைசிய க்ஷத்திரியர்கள். ஒரு காலத்தில் எங்கள் சாதவாஹன்குலம் அகில பாரதத்தையும் ஆண்டது. சாதாவாஹன் ராஜ்யம் அழிந்த பிறகு எங்கள் முன்னோர்கள் கோவா நதிக்கரையிலுள்ள பிரதிஷ்டான புரத் (பேட்டன்) திலிருந்து ஸ்தான வீஷ்வ (தானேசுவரம்) ருக்குப் போய்விட்டார்கள். சாதவாஹன் (சாலிவாகம்) வம்சம் எப்பொழுதும் பனியாவாக இருந்ததில்லை. இதை அகில உலகமும் அறியும்.
சகர க்ஷத்திரியர்களோடு அவர்களுக்குக் கொள்வினை, கொடுப்பினை உண்டு; பாரதத்தின் அரசர்களுக்கு இந்தச் சம்பந்தம் நியாயம் என்றே கருதப்பட்டு வந்திருக்கிறது. என்னுடைய அன்பிற்கு முழுதும் பாத்திரமான மகாஸ்வேதா கூட பாரசீக ராஜ வம்சத்தைச் சேர்ந்தவள்தான்.
2
என் பெயர் பாணன். நான் எத்தனையோ காவிய நாடகங்களை எழுதியிருக்கிறேன். அந்த உரைகல்லிலேயே ஜனங்கள் என்னை உரைத்துப் பார்ப்பார்கள் என்று கருதியே நான் இந்த எழுத்தையும் எழுதி வைத்துவிட்டுப் போகிறேன். தற்போதைய ராஜவம்சம் ஆட்சியிலிருக்கும் வரை, இந்த எழுத்து வெளிப்பட முடியாதென்பது எனக்குத் தெரியும். ஆகவே; இதை ஜாக்கிரதை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 232 | 233 | 234 | 235 | 236 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது, இந்த, ஜனங்கள், என்று, எங்கள், நாடகங்களை, நான் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்