முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 228
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 228
ருந்தது. அந்த வளைவிலே, சிற்பிகள் பல இடங்களில் மலையைத் துளைத்து வசிக்கவும், சாப்பிடவும், சபைகள் நடத்தவும் கூடிய மாதிரி பெரிய பெரிய குகைகளை உற்பத்தி செய்திருந்தார்கள்; இந்தக் குகைகளையும், அரச மாளிகையைப் போல் சித்தி்ரங்களினாலும் சிலைகளினாலும் அலங்கரித்திருந்தார்கள். பல தலைமுறைகள் உழைத்து, இந்த அற்புதமான கலைக் கோயிலைச் சிருஷ்டித்தார்கள். ஆனால் நூற்றுக் கணக்கான தலைமுறைகளுக்கு விட்டுச் சென்றார்கள். அஜந்தா மடத்தின் சுவர்ச் சித்திரங்களும், கற்சிலைகளும் மிக அழகானவைதான். ஆயினும் குப்தர்களின் அரச மாளிகையோடு போட்டியிட்டு ஜெயிக்க அவைகளால் முடியாது. ஆகவே, அது என்னை அதிகமாகக் கவரவில்லை. அங்கு என்னை அதிகமாகக் கவர்ந்தது, பிக்ஷு க்களின் கூட்டம், பல நாட்டையும் சேர்ந்த அவர்கள், ஒரே நோக்கத்தினாலும், அன்பு உணர்ச்சியாலும் இணைக்கப்பட்டு, ஒரே குடும்பத்தினரைப் போல் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே வெகு தூரத்திற்கப்பாலுள்ள சீனப் பிக்ஷு வைப் பார்த்தேன். பாரசீக கிரேக்கப் பிக்ஷு க்களைக் கண்டேன். சிங்களம், ஜாவா, சுமத்ரா முதலிய தீவுவாசிகளும் அங்கே இருந்தனர். சாம்பாத் தீவு, கம்போஜம் முதலிய பிரதேசவாசிகளும் அங்கே நிறைந்திருந்தனர். பல ஜாதியினரும், பல பாஷையினரும் அந்தப் பிக்ஷு க்
கூட்டத்திலே காணக் கிடைத்தனர்.
எனக்கு வெளிநாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை அதிகம் உண்டு. இந்த வெளிநாட்டுப் பிக்ஷு க்களை நான் தனித்தனியாகச் சந்தித்திருந்தால் ஒவ்வொருவருடனும், ஒவ்வொரு வருடத்தைக் கழித்திருப்பேன். இங்கு அதிகமான எண்ணிக்கையில் இவர்களை ஒன்றாகச் சந்தித்ததும், திடீரென்று பெருநிதி கிடைத்த தரித்திரனின் நிலையைப்போல், என்னையே நான் சமாளித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.
நான் ஏற்கனவே காளிதாஸரின் மூலம் திங்க நாகரின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மகாகவி காளிதாஸர் முடியாட்சியையும் அதன் சின்னமான குப்த சாம்ராஜ்யத்தையும், அதற்கு ஆதாரமாய் இருக்கும் பிராமண மதத்தையும், பலமாக ஆதரிப்பவர். அப்படி ஆதரிப்பதன் நோக்கம் என்னவென்பதை, நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். காளிதாஸர்; இந்த வேலைக்குத் திங்கநாகர் ஒரு பெரும் தடை என்று கருதினார். இந்தத் திராவிட நாஸ்திகன், “ஒரு விஷ்ணுவை என்ன, முப்பத்தைந்து கோடிக் கடவுள்களின் சிம்மாசனத்தையும் அசைத்துவிடுவான் போலிருக்கிறதே” என்று சொல்லுவார். “மதத்தின் பெயரால் அரசர்களுடையவும் பிராமணர்களுடையவும் நலனுக்காகத் தங்கள் என்னென்ன தந்திரங்களைக் கையாளுகிறோமோ, அவற்றின் ஆழத்திலே புதைந்து கிடக்கும் சுயநல ரகசியம், இந்த நாஸ்திகனின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை” என்று வருத்தப்படுவார். ஞானக்கடலான வசுபந்துவை அவன் குருவாகப் பெற்றிருக்கிறான். ‘அந்த அறிவுப் பெருக்கமும், அவனுடைய
தீட்சண்யமும் ஒன்று சேர்ந்திருப்பது பெரிய ஆபத்து’ என்று சொல்லுவார். பிக்ஷு சிரேஷ்டர் வசுபந்து இரண்டாவது சந்திரகுப்த விக்கிரமாதித்தியனின் காலத்தில், தலைநகரான அயோத்தியாவிற்கு வந்திருக்கிறாராம். மற்ற தர்பாரிகளைப் போலல்லாமல் மரியாதைக்குரிய
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 226 | 227 | 228 | 229 | 230 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிக்ஷு, இந்த, என்று, நான், அங்கே, பெரிய - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்