முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 141
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 141
சாதிக்கிறார்கள்.”
“இந்தச் சிறிய ஜந்துக்கள் தங்களுக்குள் எவ்வளவு ஒற்றுமையாயிருக்கின்றன. அவைகளின் ஒற்றுமையே என்னை மிகவும் ஆவலோடு பார்க்கும்படி செய்கிறது. அற்பமான ஜந்துக்கள் என்று இவற்றைக் கருதுகிறார்கள். ஆனால் இவைகளுக்குள் இருக்கும் ஒற்றுமையைப் பார்த்தாயா? ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி, எவ்வளவு பெரிய மாளிகையைக் கட்டுகின்றன பந்துல்! நம்முடைய மல்லகுலத்தார், இந்தக் கரையான்களிடமிருந்தாவது பாடம் கற்றுக் கொள்ளவில்லையே என்று நினைக்கும்போது என் மனம் மிகுந்த வேதனை அடைகிறது.”
“சேர்ந்து வாழ்வதில் மனிதர்களும் எந்தப் பிராணிக்கும் குறைந்தவர்களல்ல. அவர்கள் இன்று அடைந்துள்ள இந்த உயர்வான நிலைமைக்குக் காரணம் சேர்ந்து வாழும் தன்மையே. பெரிய பெரிய நகரங்களையும் கிராமங்களையும் அமைப்பதில் மனிதன் வெற்றியடைந்ததற்குக் காரணம் இந்த ஒற்றுமைதான். ஆழங்காணாத சமுத்திரத்திலே கப்பலோட்டி, தீவு-தீவாந்தரங்களிலிருந்து பெருத்த நிதிக் குவியல்களைத் திரட்டிக் கொண்டு வந்து சேர்ப்பதற்குக் காரணமாயிருப்பதும் இந்த ஒற்றுமைதான். புலி, சிங்கம், காண்டாமிருகம் போன்ற துஷ்ட விலங்குகள் அவனுக்கு முன்னே தலைவணங்கி நிற்பதற்குக் காரணமும் இந்த ஒற்றுமைதான்.”
“ஆனால் அவர்களுடைய பொறாமை! இந்தப் பொறாமை மாத்திரம்
இல்லாவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?”
“ஓ! உனக்கு மல்லர்களுடைய பொறாமை ஞாபகம் வருகிறதோ?”
“ஆம்; பந்துல்! நம்முடைய மல்லர்கள் ஏன் உன் மீது இவ்வளவு பொறாமைப்படுகிறார்கள்? இதுவரை நீ யாரையும் நிந்தித்ததாகவோ, தீங்கு செய்ததாகவோ நான் கேட்டதுமில்லை-பார்த்ததுமில்லை. உன்னுடைய அன்பான நடத்தையால் அடிமைகள், வேலைக்காரர்கள்கூட மகிழ்ச்சியடைகிறார்களே! அப்படியிருந்தும், அறிவாளிகளான மல்லர்கள் வெறுக்கக் காரணம் என்ன?”
“ஏனென்றால், நான் எல்லோருடைய அன்பிற்கும் பாத்திரனாயிருக்கிறேன். நமது சமூகத்திலே எல்லோருக்கும் நல்லவனாயிருக்கும் ஒருவன் மீது பொறாமைப்படுபவர்கள் அதிகமாயிருக்கிறார்கள், ஏன் தெரியுமா? எல்லோருடைய அன்பிற்கும் பாத்திரமானவன், சுலபமாக சமூகத்தின் தலைமைப்பதவியை அடைந்துவிடுகிறான்.”
“உன்னுடைய நற்குணங்களைப் பார்த்து அவர்கள் சந்தோஷம் அடையவேண்டும். தட்சசீலத்தில் இதுவரை எந்த மல்லனுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்ததாக யாரும் கேள்விப்பட்டதே கிடையாது. இன்றைக்குங்கூட அரசன் பிரசேனசித்தன், அவனுடைய கோசல தேசத்திற்கு வந்து விடும்படி உனக்கு ஆள்மேல் ஆள் அனுப்பிக் கொண்டிருப்பது இவர்களுக்குத் தெரியாதா?”
“தட்சசீலத்தில் நாங்கள் இருவரும் பத்து வருஷங்கள் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தோம். என்னுடைய குணங்கள் அவனுக்கு நன்றாகத்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 139 | 140 | 141 | 142 | 143 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்த, பொறாமை, ஒற்றுமைதான், காரணம், எவ்வளவு, பெரிய - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்