முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 97
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 97
அறமொழிகளை எடுத்துரைத்தாள். பல நல்லறங்களைச் செய்து பௌத்த நெறியின்படி முத்தி பெற்றாள். இந்த வாழ்க்கையைக் காப்பியமாக்கியுள்ளவர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்னும் புலவர். அவர் இளங்கோவடிகள்போல் சமயப் பொதுமை நாடவில்லை. பௌத்த சமயச் சார்பாகவே எல்லாவற்றையும் கூறியுள்ளார். இலக்கியச் சுவையை விடப் பௌத்த சமய விளக்கமே காப்பியத்தில் மேலோங்கியுள்ளது. பலவகை உணர்ச்சிகளை வெவ்வேறு செய்யுள் ஓசைகளால் புலப்படுத்தும் சிறப்பு சிலப்பதிக்காரத்தில் உள்ளது. மணிமேகலையில் அதுவும் இல்லை. நூல் முழுவதும் ஒரே வகையான ஓசையுள்ள அகவல் என்னும் செய்யுளால் அமைந்துள்ளது.
எளிய நடையில் கதை சொல்லும் தன்மையும் பௌத்த சமய உண்மைகளையும் நீதிகளையும் தௌ¤வாக எடுத்துரைக்கும் இயல்புமே இந்தக் காப்பியத்தின் சிறப்பியல்புகள் எனலாம். காப்பியத்தின் தலைவியாக உள்ள மணிமேகலை ஒப்புயர்வற்ற ஒரு பெண்மணி என்பதில் ஐயம் இல்லை.
மணிமேகலை என்னும் காப்பியத்தைவிட, அந்த நூலில் வரும் மணிமேகலை என்னும் அந்தப் பெண் துறவியே பலருடைய போற்றுதலுக்கு உரியவளாய் விளங்குகிறாள். அவள் காப்பியத்தின் கற்பனைத் தலைவியாகமட்டும் அல்லாமல் நாட்டு வரலாற்றின் பெருமைக்கு உரிய ஒரு பெண்பிறவியாகவும் பலருடைய உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டாள். அழகும் இளமையும் அறிவும் பண்பும் நிரம்பிய அவள், அரசிளங் குமரனுடைய காதலைக் கைவிட்டுப் பௌத்தத் துறவியான சிறப்பு ஒருபுறம்; அதைவிடப் பெரியது, அவள் அருள் நிரம்பிய வாழ்வு நடத்திய சிறப்பு ஆகும். மணி பல்லவத் தீவில் அவள் பெற்ற அமுதசுரபி என்னும் பாத்திரத்தைக் கையில் ஏந்தி, “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (பசிக்கு உணவு கொடுத்துக் காப்பவர், உயிரையே காப்பாற்றும் அறமுடையோர்) என்று உணர்ந்து, பல இடங்களிலும் திரிந்து வறியவர்களுக்கும் பசித்தவர்களுக்கும் சோறு அளித்தாள்.
அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்ட தில்லை |
என்று மணிமேகலையே ஓரிடத்துக் கூறியிருக்கிறாள். அத்தகைய அறநெறியைப் போற்றி, உணவு வற்றாத பாத்திரமாகிய அமுத சுரபியிலிருந்து உணவை எடுத்து எல்லோர்க்கும் உதவினாள். கூன் குருடு ஊமை செவிடு நோயாளிகள் திக்கற்றவர்கள் எல்லோரிடத்திலும் அன்பு கொண்டு உதவி புரிந்தாள். அவள் இளவரசனுடைய கொலைக்குக் காரணமாக
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 95 | 96 | 97 | 98 | 99 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 97 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - அவள், என்னும், பௌத்த, மணிமேகலை, சிறப்பு, காப்பியத்தின்