முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » அக்பர் – பீர்பால் கதைகள் » பழமும் தோலும் இல்லை
அக்பர் – பீர்பால் கதைகள் - பழமும் தோலும் இல்லை
அக்பரும் அரசியும் ஒருமுறை உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்பொழுது அக்பருக்கு பிடித்தமான நிறைய வாழைப்பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அக்பர் சாப்பிட்டவுடன் அந்த வாழைப்பழங்களை அனைத்தையும் சாப்பிட்டு அதன் தோல்களை அரசியாரின் இலையில் ஒரு ஓரத்தில் வைத்து விட்டார்.
அப்பொழுது பீர்பால் சில முக்கியமான அரசியல் செய்திகளை பேச அங்கு வந்தார். அக்பர் உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் என்று அழைத்தார். அக்பர் பீர்பாலிடம் இந்த அரசியாரின் இலையை பாருங்கள் அனைத்து வாழைப்பழங்களையும் அரசியாரே தின்றுவிட்டார் என்று பீர்பாலிடம் விளையாட்டாக கூறினார். அதற்கு பீர்பால் ஆம் அரசே ஒன்றும் விடாமல் தின்றுவிட்டார்கள் என்று கூறி, அக்பரின் இலையை பார்த்து அரசே அரசியாராவது பரவாயில்லை. உங்கள் இலையில் வாழைப்பழ தோல்களையும் காணுமே. ஏன் அரசே தோல்களையும் சேர்த்து தின்றுவிட்டிர்களா என்று கேட்டார். அதற்கு அரசி மிகவும் மகிழ்ச்சி அடைந்து பீர்பாலிடம் அரசர் என் இலையில் உள்ள வாழைப்பழத்தோலையாவது விட்டுவிட்டாரே என்று சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள் என்று கிண்டலாக அரசியார் பீர்பாலிடம் கூறினார். இதற்கு அக்பர் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திகைத்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமும் தோலும் இல்லை - அக்பர் – பீர்பால் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - பீர்பாலிடம், அக்பர், அரசே, இலையில்