முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » அக்பர் – பீர்பால் கதைகள் » வைரத்தை திருடியது யார்?
அக்பர் – பீர்பால் கதைகள் - வைரத்தை திருடியது யார்?
வைர வியாபாரி ஒருவர், பீர்பாலைத் தேடி வந்தார். விலை உயர்ந்த வைரக்கல் ஒன்று கடையிலிருந்து காணாமல் போய் விட்டதாகவும் அதைக் கண்டு பிடிப்பதற்கு தக்க வழி கூறுமாறும் வைர வியாபாரி பீர்பாலைக் கேட்டுக் கொண்டார்.
பீர்பால் வைர வியாபாரியின் கடைக்குச் சென்று பார்த்தார். கடையில் நாலைந்து பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
உங்கள் கடையிலிருந்து வைரத்தை எடுத்திருபார்கள் என்று யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டுள்ளதா? என்றார் பீர்பால்.
வைர வியாபாரியும் கடையில் வேலை செய்யும் மூன்று நபர்கள் மீது சந்தேகம் ஏற்படுவதாக கூறினார். மூவரையும் அழைத்து வரச் சொன்னார். கடையிலிருந்து மூவரும் வந்தார்கள். அவர்களிடம் பத்து அங்குலம் நீளமுள்ள மூன்று குச்சிகளை ஒவ்வொருவரிடமும் கொடுத்து அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறும், ஒருநாள் வைத்திருந்து விட்டு அடுத்த நாள் குச்சியைத் திருப்பிக் கொண்டு வருமாறு கூறினார். அந்தக் குச்சிகள் மந்திர சக்தி வாய்ந்ததும் எனவும் திருடர்களிடம் அக்பர் பீர்பால் கதைஇருந்தால் குச்சி ஒரு ரு நாளைக்கு ஒரு அங்குலம் வளர்ந்து விடும் என்றும் குச்சியை திருப்பி தரும் பொழுது அளந்து பார்ப்பதாகவும் கூறினார். மூன்று பேரும் குழப்பத்துடன் போய் விட்டார்கள்.
வைரத்தை திருடிய வேலைக்காரனுக்கு அன்று முழுவதும் உறக்கம் வராமல் அவதிப்பட்டான். தான் திருடியது தெரிந்து விடுமோ என்று பயந்தான். தான் திருடியது தெரியாமல் இருக்க என்ன செய்வது? என்று யோசித்தான். நாளைக்கு குச்சியை அளந்து பார்க்கும் போது ஒரு அங்குலம் வளர்ந்து விடுமே. அதனால் இப்போது ஒரு அங்குலம் வெட்டி விட்டால் என்ன என்று யோசனை உதித்தது. குச்சியில் ஒரு அங்குலத்தை வெட்டி எடுத்தான்.
அடுத்த நாள் மூன்று வேலைக்காரர்களும் தாம் எடுத்துச் சென்ற குச்சிகளை திருப்பிக் கொடுத்தார்கள். பீர்பால் குச்சியை வாங்கிக் கொண்டார். ஒவ்வொரு குச்சியையும் பார்த்தார். வைரத்தை திருடிய வேலைக்காரன் கொடுத்த குச்சியைப் பார்த்தார். நீளம் குறைந்திருந்தது.வைரத்தை திருடிய வேலைக்காரன் காலையில் குச்சியின் அளவை பார்க்க தவறி இருந்த படியால் தமது செயல் காட்டி கொடுத்து விட்டது.
பீர்பால் அந்த வேலைக்காரனை முறைத்தார். வைரத்தை திருடியது நீதான் என்பதை ஒத்துக் கொள்கிறாயா? அல்லது சிறைக்கு செல்கிறாயா? என்றார் பீர்பால்.
வைரத்தை திருடிய வேலைக்காரன் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வைரத்தை திருடியது யார்? - அக்பர் – பீர்பால் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - பீர்பால், வைரத்தை, அங்குலம், மூன்று, திருடிய, திருடியது, வேலைக்காரன், கூறினார், பார்த்தார், கடையிலிருந்து, குச்சியை