முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » அக்பர் – பீர்பால் கதைகள் » ஆண்டவனிடம் பெற்ற அறிவு
அக்பர் – பீர்பால் கதைகள் - ஆண்டவனிடம் பெற்ற அறிவு
பீர்பாலின் மீது அரசர் அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பதை அவையில் இருந்த சில அமைச்சர்களுக்குப் பொறாமையாக இருந்தது. அதனால் பீர்பாலை முட்டாளாக்க வேண்டும் என்று ஏதாவது கேள்விகளைக் கேட்டு அவர்கள் முட்டாளாகி விடுவது வழக்கம்.
அறிவுமிக்க பீர்பாலை மட்டம் தட்ட முடியாத ஒரு அமைச்சர் அவரின் மாநிறமான தோற்றத்தைக் கொண்டு மட்டம் தட்ட நினைத்தார்.
அதனால் அரசவையில் அமர்ந்திருந்த பீர்பாலைப் பார்த்து அந்த அமைச்சர் ஏளனமாகச் சிரித்தார்.
இதனைக் கவனித்துவிட்ட அரசர் அக்பருக்கு கோபம் ஏற்பட்டு, அமைச்சரே! பீர்பாலைப் பார்த்து எதற்காக ஏளனமாகச் சிரித்தீர்கள் என்று கேட்டார்.
மதிப்பிற்குரிய மன்னர் பெருமானே! கோபப்பட வேண்டாம்! எனக்கு அவரைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது அதனால் சிரித்தேன், என்றார் அமைச்சர்.
என்ன சந்தேகம்? என வினவினார் மன்னர்.
மன்னர் பெருமானே! தாங்கள் ஜொலிக்கும் தங்கம் போன்ற மேனியைப் பெற்றுள்ளீர்கள். அமைச்சர்களாக உள்ள நாங்களும் நல்ல சிவந்த மேனியுடன் உள்ளோம்.ஆனால் நமது பீர்பால் மட்டும் நிறத்தில் சற்று கறுத்துக் காணப்படுகின்றார்.
ஆகையினால் நம்மோடு அமர்ந்திருப்பதினால் மன்னரின் நிறம் பிரகாசமாகவும், பீர்பாலின் நிறம் கருத்தும் இருப்பதினால் மாறுபாடுடன் நிழலின் அருமை வெயிலில் தெரிவது போன்றுள்ளது என்றார் அமைச்சர்.
அமைச்சர் இதுபோன்று கூறியதும் – அமைச்சரின் மதிகெட்ட பேச்சு புரிந்தது. ஆகையினால் அதனை வெளிக் காட்டிக் கொள்ளாது, பீர்பால் அவர்களே! அமைச்சர் கூறியதற்கு சரியான விளக்கம் அளியுங்கள். மேலும் இதுபோன்ற கேள்வி எப்போதும் எழாத அளவுக்கு பதில் இருக்க வேண்டும் என்றார் அக்பர்.
மன்னரின் வேண்டுக்கோளுக்கு இணங்கி, மதிப்பிக்குரிய மன்னருக்கு வணக்கம்! எனக்கூறி கேள்விக் கேட்ட அமைச்சருக்கு பீர்பால் பதில் கூறலானார்.மாமன்னர் அவர்களே! இறைவன் அன்பானவன். எல்லோரையும் சமமாகப் பாவித்து அருள்பாவிப்பவன். ஒவ்வொருவரையும் படைக்கும் போதும். நமக்கு என்ன வேண்டும் என்று கேட்டு நம் விருப்ப்படி படைக்கிறார் என்பதை பல வேத நூல்களில் கூறியிருப்பதை அறிந்திருக்கிறேன்.
ஆண்டவன் அப்படி தங்கள் எல்லோரிடமும் கேட்டபோது நல்ல சிவந்த நிறத்துடன், பார்ப்பவர்கள் பார்வையில் உயர்ந்திருக்க வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள்!இப்படி நீங்கள் எல்லோரும் வசீகரமான நிறத்தை வாங்கிக் கொண்ட பின்னர் ஆண்டவனிடம் அறிவுடன் விளங்க வேண்டும் என்று கேட்க யாரும் இல்லாமல் போகக் கூடாது என்பதற்காக, எனக்கு நல்ல அறிவை மட்டும் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.
அதனால் உங்களுக்கெல்லாம் நல்ல சிவந்த நிறம் கிடைத்தது. எனக்கு மட்டும் நல்ல நிறம் கிடைக்காமல் நல்ல அறிவு கிடைத்தது என்றார் பீர்பால் அவர்கள்.பீர்பாலின் இந்த பதில் – கேள்வி கேட்ட அமைச்சருக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. அரசருக்கு இது சந்தோஷத்தைக் கொடுத்தது. இருப்பினும் – பீர்பால் அவர்களே! தாங்கள் கூறிய பட்டியலில் நானும் இருக்கிறேனா? என்றார் அக்பர்.
பீர்பால் சிரித்துக் கொண்டே மதிப்பிற்குரிய மன்னர் அவர்களே! நீங்கள் தான் ஆண்டவனிடம், உங்கள் அமைச்சரவையில் பீர்பாலும் வேண்டும் என்று கேட்டு பெற்றுக் கொண்டீர்களே என்றார்.
அழகை விட அறிவு மிக அவசியம் என்பதை பீர்பாலின் பதிலினை கேட்டு மன்னர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆண்டவனிடம் பெற்ற அறிவு - அக்பர் – பீர்பால் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - நல்ல, பீர்பால், அமைச்சர், என்றார், வேண்டும், மன்னர், அதனால், அவர்களே, கேட்டு, பீர்பாலின், நிறம், பதில், சிவந்த, எனக்கு, மட்டும்