மருதகாசி பாடல்கள் - பக்கம் - 82
ஆண் : சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதம்! பெண் : செவி நாடும் தேன் சுவை யன்றோ திருவே உமது கானம் (சீரு) ஆண் : ஆவியே இயல் இசை போலே நாமே அன்பினால் கலந்தே மகிழ்வோம். பெண்: ஏழை எனது தாழ்வை அகற்றி வாழ்வு தந்தீர் எல்லாம் என் பாக்கியம் (சீரு) பெண்: நாதத்தால் மனம் வசமாகும் போது பேதம் பாராது! ஆண் : காதலலைகள் மோதும் மனதில் தாழ்வு உயர் வேது? பெண் : ஆசை மொழியே பேசி எனையே ஆளும் அரசே எல்லாம் என் பாக்கியம்! ஆண் : சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதம்! பெண் : ஹம்மிங் |
வடிவுக்கு வளைகாப்பு-1962
இசை : K. V மகாதேவன்
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & P சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 80 | 81 | 82 | 83 | 84 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 82 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்