மருதகாசி பாடல்கள் - பக்கம் - 76
ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை! பெண் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை! ஆண் : வண்ணம் பல மின்னும்-அதில் பிள்ளை போலவே ! பெண் : எண்ணிப் பார்க்க ரெண்டு போதும் நம்மைப் போலவே! ஆண் : மனக் கண்கள் அந்தக் கனவே காணுதே! பெண் : நாம் காணும் இன்பம் நிலையாய்த் தோணுதே! ஆண் : எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னைப் பற்றியே! பெண் : அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னைச் சுற்றியே! ஆண் : அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே பெண் : அது உன்னைப் போல சிரிப்பை மூட்டுதே! |
வெள்ளிக்கிழமை விரதம்-1974
இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 74 | 75 | 76 | 77 | 78 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 76 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், இன்பம்