மருதகாசி பாடல்கள் - பக்கம் - 63
ஆண் : ஆடாத மனமும் உண்டோ? நடை அலங்காரமும் அழகு சிங்காரமும்-கண்டு (ஆடாத) பெண் : நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்-வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில் (ஆடாத) ஆண் : வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்-கை வளை ஓசை தரும் இன்ப இசைக் கார்வையில் பெண் : ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்-தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில் (ஆடாத) ஆண் : இதழ் கொஞ்சும் கனிஅமுதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே! பெண் : பசுந்தங்கம் உனது எழில் அங்கம் அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே! (ஆடாத) ஆண் : முல்லைப் பூவில் ஆடும் சிறுவண்டாகவே! பெண் : முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே ஆண் : அன்பை நாடி உந்தன் அருகில் வந்து நின்றே பெண் : இன்ப மெனும் பொருளை இங்கு கண்டே ஆண் : தன்னை மறந்து பெண் : உள்ளம் கனிந்து இருவரும் : இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன் (ஆடாத) பெண் : தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே-தரும் இருவரும் : திகட்டாத ஆனந்த நிலை பொங்குமே! பெண் : தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே-தரும் இருவரும் : திகட்டாத ஆனந்த நிலை பொங்குமே! |
மன்னாதி மன்னன்-1960
இசை: எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & M. L. வசந்தகுமாரி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 63 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், ஆடாத, தரும், இருவரும், கலைச்