மருதகாசி பாடல்கள் - பக்கம் - 54
ஆண்: காவியமா? நெஞ்சின் ஒவியமா? அதன் ஜீவிதமா! தெய்வீகக் காதல் சின்னமா? பெண்: காவியமா? நெஞ்சின் ஒவியமா? அதன் ஜீவிதமா? தெய்வீகக் காதல் சின்னமா? ஆண்: காவியமா? நெஞ்சின் ஒவியமா? அதன் ஜீவிதமா? தெய்வீகக் காதல் சின்னமா? பெண்: மொகலாய சாம்ராஜ்ய தீபமே! சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே! ஆண்: மும்தாஜே முத்தே என் பேகமே! பேசும் முழுமதியே என் இதயகீதமே! பெண்: என்றும் இன்பமே! பொங்கும் வண்ணமே! என்னை சொந்தம் கொண்ட தெய்வமே! ஆண்: அன்பின் அமுதமே! அழகின் சிகரமே! ஆசை வடிவமே! அழகின் அதிசயமே! (காவியமா) பெண்: எந்நாளும் அழியாத நிலையிலே-காதல் ஒன்றே தான் வாழும் இந்த உலகிலே! ஆண்: கண்முன்னே தோன்றும் அந்தக் கனவிலே! உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே! பெண்: கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்! இனிமை தருவதுண்மைக் காதலே! ஆண்: காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்! |
பாவை விளக்கு-1960
இசை : K. V. மகாதேவன் -
பாடியவர்கள்: C. S. ஜெயராமன் P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 54 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், காதல், காவியமா, சின்னமா, ஜீவிதமா, நெஞ்சின், ஒவியமா, தெய்வீகக்