மருதகாசி பாடல்கள் - பக்கம் - 129
ஒயிங்கு தவறாமெ! ஊரெ எத்தி வாயாமெ பொயிதெ வீணாக்காமெ புவ்வாவ தேடிக்கனும்! ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தெமடம்! அதுவும் கூட இல்லாகாட்டி ப்ளாட்டுபாரம் சொந்த இடம்! (ஆனா) மச்சுலே இருந்தாத்தான் மவுசுயிண்ணு எண்ணாதே! குச்சுலே குடியிருந்தா கொறச்சலுண்ணு கொள்ளாதே! மச்சு குச்சு எல்லாமெ மனசுலே தானிருக்கு! மனசு நெறகுகிருந்தா மத்ததும் நெறஞ்சிருக்கும்! (ஆனா) கெடைச்சா கஞ்சித்தண்ணி! கெடைக்காட்டி கொயாத்தண்ணி! இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலை கண்ணி! மரத்தெப் படெச்சவன் தான் மனுசாளைப் படைச்சிருக்கான்! ளாறதெ ஏத்துக்கதான் மனசெ கொடுத்திருக்கான் ! தெட்டிக்கினு போறதுக்கு திருடன் வருவான்னு துட்டுள்ள சீமாங்க தூங்காமெ முயிப்பாங்க! துட்டும் கையிலே இல்லே! தூக்கத்துக்கும் பஞ்சமில்லே! பொட்டியும் தேவையில்லே! பூட்டுக்கும் வேலையில்லே! |
ஆயிரம் ரூபாய்-1964
இசை: K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 127 | 128 | 129 | 130 | 131 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 129 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -