பிள்ளையின் மனதில்...
அன்னையிடம் அன்பை வாங்கவும் தந்தையிடம் அறிவை வாங்கவும் நம்முடைய சமுதாய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இறைவன் ஒவ்வொரு குடும்பத்திலும் உலவுவதற்குப் பதிலாகத்தான் அம்மாவை அனுப்பியுள்ளான் என்று ஆன்றோர்கள் சொல்லிச் சென்றனர். நாம் தெய்வம் எங்கே எங்கே என்று வெளியில் தேட வேண்டியதில்லை நம் வீட்டிலேயே சேலை கட்டிய தெய்வமாக அன்னை இருக்கின்றார். அவர்களை வணங்கினால் போதும் அகிலத்தை ஆளலாம்.
''நல்லராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே''
என்பார்கள். தந்தை ஆகிய உங்களுக்குத்தான் அதிகமான பங்கு இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் செயல்கள் குழந்தையின் மனதில் பசுமரத்தாணிபோல் பதிகின்றது. நீங்கள் கோபப்படுபவர்களாகவோ, கருணை நிறைந்தவர்களாகவோ, பாசம் காட்டக் கூடியவர்களோ, உதவி செய்யக் கூடியவர்களாகவோ, இருந்தால் அப்படியே படம் பிடித்தாற்போல் பிள்ளைகள் வளர வாய்ப்பு இருக்கின்றது. குடிப்பது கெட்டது என்று கவனமாக உணர்த்தி வந்திருந்தால், நல்லது பற்றி எண்ண வாய்ப்பளித்திருந்தால் குழந்தை நல்லவனாக வாழ வாய்ப்புண்டு.
அவனைச் சுற்றியுள்ள அவனது நண்பர்கள், உறவு, நட்பு இப்படிப் பலர் சூழ்ந்திருந்தாலும் தந்தையின் போக்கு அதிகமாக பிள்ளையின் மனதில் பதிவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே உங்களது பிள்ளை வாழ்வியலில் ஹூரோவாக வரவேண்டும் என்றால் நீங்கள் ஹீரோவாக இருங்கள்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிள்ளையின் மனதில்..., , Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி