தமிழ்ப் பணியாளர்கள் - முனைவர், வாசு அரங்கநாதன்

முனைவர், வாசு அரங்கநாதன், பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம், அமெரிக்கா.
தமிழைத் தவமாய், வேதமாய், வேள்வியாய், சுவாசமாய், உயிராய், உணர்வாய் நேசித்து தமிழ் வாழ வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்டுள்ளவர்கள் வரிசையில் இரண்டாவதாக வலம்வருகிறார், அமெரிக்காவின் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றார் முனைவர் வாசு அரங்கநாதன்.
அறிமுகம் :
தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1989 முதல் அமெரிக்காவில் தமிழ்த்தொண்டைத் தொடர்ந்துவருபவர்.1989 முதல் 1992 வரை சியாட்டலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் தமது இரண்டாவது முதுகலைப் பட்டப் படிப்பைச் செய்துகொண்டு கணிப்பொறி கொண்டு தமிழ் மொழியை ஆராயும் பணியில் ஈடுபட்டார்.
பின்னர் இரண்டு ஆண்டுகள் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும்அதற்குப் பிறகு பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்திலும் தமது தமிழ்த்தொண்டைத் தொடர்கிறார். கடந்த பத்து வருடங்களாக பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருவதோடு, தமிழ்இலக்கியம் மற்றும் மொழியிலில் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறார்.
சங்ககால இலக்கியங்களையும் பக்தி இலக்கியங் களையும் ஆய்ந்து வருவதோடு கணிப்பொறி வழி தமிழ் மொழி கற்பிப்பது பற்றியும் தனது பணியைச் செய்துவருகிறார்.
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb
http://www.southasia.upenn.edu/tamil
போன்ற இணையப் பக்கங்களில் கணிப்பொறி வழி தமிழ் மொழி கற்றுக்கொள்ளப் பாடங்களை வடிவமைத்துள்ளார். அமெரிக்காவின் மத்தியக் கல்வித்துறையின் உதவியோடு பக்கங்களை உலகெங்கிலும் உள்ள தமிழ் மாணாக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள தமிழ் வம்சாவழி மாணவர்களுக்கும் இப்பங்கங்கள் பயன்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு பற்றி படிக்கும் அமெரிக்க மாணாக்கர்களும் இவ்விணையப் பக்கங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு பற்றிய விளக்கமான பாடங்கள் இவ்விணையப் பக்கங்களில் உள்ளன. அன்பர்களே அறிமுகம் இங்கே நிறைவெய்துகிறது. இனி அவருடனான காணலில் உட்புகுவோமா?
ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா.
தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தமிழகத்தில் இருக்கும்போது ஏற்பட்ட உணர்வா? இல்லை அமெரிக்க வந்த பின் தோன்றியதா?
அண்ணாமலைப் பல்கலைக்க கழகத்தில் மொழியியல் ஆராய்ச்சியாளனாக இருந்தபோதே தமிழ் ஆராய்ச்சியில் ஆர்வம் தொடங்கியது.பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் வாஷிங்டன் பல்கலைக் கழகத்திலும் பணிபுரிந்த போது அங்கிருந்த நல்ல ஆராய்ச்சிச் சூழல் என்னுடைய தமிழ் ஆர்வத்துக்கு உறுதுணையாயிருந்தது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி கொண்டு தமிழ் மொழியை ஆராயும் பணியில் ஈடுபட்ட தாங்கள் ஆய்வுப்பணி குறித்து கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்களேன்?

இணையப் பக்கங்களில் கணிப்பொறி வழி தமிழ் மொழி கற்றுக்கொள்ளப் பாடங்களை வடிவமைத்துள்ள தங்களுக்கு இதன் மூலம் பயன்பெற்ற வெளிநாடுவாழ் தமிழ்மாணாக்கர்கள் தங்களைத் தொடர்புகொண்டு நன்றி பரிமாறிக்கொண்ட, உதவி கோரிய நிகழ்வுகள் போன்ற சந்தர்ப்பங்கள் தங்களுக்கு வாய்த்திருக்கும். இதில் தங்கள் மனம் நெகிழ்ந்த சம்பவங்கள் கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்டமலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்ள இயலுமா?
பல மாணவர்கள் அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொள்வார்கள். சில உதவிகளை மின்னஞ்சல் மூலம் செய்வேன். போலந்திலிருந்து ஒரு மாணவர் விடாமல் இன்னும் தொடர்பு கொண்டு வருகிறார். எங்கள் இணையப்பக்கங்களில் ஒன்று விடாமல் பயன்படுத்திவிட்டு அங்கு கொடுத்துள்ள பயிற்சிப் பக்கங்களைச் செய்து எனக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார்.
முடிந்த போதெல்லாம் உதவி செய்வேன். ஒரு முறை கொஞ்ச காலம் அவருக்கு மின்னஞ்சல் கொடுக்கவில்லை. எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று என்னுடைய பேராசிரியர் ஷிப்மெனுக்கு அஞ்சல் எழுதி வாசுவுக்கு ஏதோ ஆகிவிட்டது போல் இருக்கிறது! அவர் நன்றாக இருக்கிறாரா? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். எங்களது தமிழ் இணையப்பக்கங்களுக்கு நான் இப்படியாக உயிர் கொடுக்கவேண்டியிருக்கிறது!
இதுதான்....உங்கள் உழைப்புக்கு கிடைத்த மகுடம்! அமெரிக்காவில் உள்ள தமிழ் குழந்தைகள் உங்கள் தமிழ்ப் பக்கங்களைப் பயன்படுத்துவது குறித்து ஏதும் புள்ளிவிபரம் தர இயலுமா?
புள்ளிவிவரம் ஒன்று எதுவும் இல்லை. எங்களின் விருந்தினர் பக்கத்தில் தமிழ்ப் பக்கங்களைக் குறித்து பலர் எழுதியுள்ளனர். பார்க்க.... http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/guest/tamilguest.html உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் எங்களைத் தொடர்புகொண்டு எப்படியெல்லாம் எங்கள் பக்கங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று பலர் எங்களுக்கு எழுதியுள்ளனர். எங்கள் இணையப்பக்கங்கள் மூலம் உலகம் முழுவதிலிருந்தும் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
இது மகிழத்தக்கது. பல மாணவர்கள் நன்றி தெரிவித்து மடல்கள் எழுதியுள்ளனர்.
இணையம் மூலம் தமிழ் கற்க நீங்கள் எடுக்கும் முயல்வுகளுக்குப் பென்சில்வேனியா பல்கலை தகுந்த உதவிகளைச் செய்கிறதா?
இதுவரை நான் கேட்ட எதற்கும் இவர்கள் இல்லை என்று சொன்னதில்லை. கேட்பதற்குத்தான் நேரம் இல்லை.
இதுதவிர தமிழுக்காக நீங்கள் ஆற்றும் பணிகள் குறித்துச் சொல்லுங்களேன்?

தேடல் தொடர்பான தகவல்கள்:
முனைவர், வாசு அரங்கநாதன் - Tamil Work in USA - அமெரிக்காவில் தமிழ் பணி செய்வோர்கள் - கணிப்பொறி, தமிழ்ப், பல்கலைக், எங்கள், பயன்படுத்தி, முனைவர், வாஷிங்டன், அமெரிக்காவில், பென்சில்வேனியாப், கழகத்தில், thetamillanguage, மாணவர்கள், உங்கள், குறித்து, எழுதியுள்ளனர், மற்றும், பணியில், அரங்கநாதன், பக்கங்களில், பக்கங்களைப், மொழியியல், என்னுடைய